Wednesday, January 4, 2017

செயல்தலைவர்

இவ்வளவு நேரம் நான் அமைதியாய் இருந்ததில்லை உணர்வு என்னை மௌனமாக்கியது.. தம்பி..வா.. தலைமையேற்க வா என்ற போது கண்ணீர் சுரந்தது.. தலைவருக்கான அனைத்து அதிகாரமும் பெற்ற #செயல்தலைவர்.. தலைவரை காண முடியவில்லை என்கிற மன அழுத்தம் என் உயிரினும் மேலான ‍... கரகரக்குரலோடு காந்தம் போல் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பை காண/கேட்க முடியாது போனது என்னுள் ஏதேதோ செய்தது.. .. வாழ்த்துக்கள் தளபதியே.. இனி செயல் தலைவரென்றே அழைப்போம்.. ஆனாலும் தலைவரின் தளபதியாய் வலம் வருவீர்.. திடீரென ஒருநாளில் செயலாளராக ஆகவில்லை நீர்.. நிறைய படிகளை கடந்து இந்த உயரத்தை எட்டியிருக்கிறீர்.. இக்கட்டான சூழலில் நிறைய சுமைகளை தலையில் சுமக்கவேண்டியிருக்கிறது.. இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் எதிர்காலத்தை நமதாக்கும் .. எதிரிகளை நிலைகுலைய செய்யும்.. ஆற்றல் நமக்கு உண்டு.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை முன்னெடுக்க காலம் கனிந்து தானாய் தந்திருக்கிறது.. .. தமிழகம் சூன்யமாகி நிற்கும் வேளையில் தலைமைக்கு வந்திருக்கிறீர்.. நிறைய வேலைகள் பாக்கியிருக்கிறது முன் எப்போதுமில்லாத வேகத்தோடு.. கலைஞரின் வியூகத்தோடும்.. நமக்கு உரிய விவேகத்தோடும்.. திராவிடனுக்கே உரிய அஞ்சாமையோடும்.. களத்தில் வெற்றியை குவிப்போம்.. இனி அஞ்சுவதில்லை எவர்க்கும் .. கண்முன் வெற்றியின் இலக்குமட்டுமே.. எதிரிகள் பலமிழந்து நிற்கிறார்கள் நிலைகுலைய செய்வோம்.. தலைகுனிந்து நிற்கும் தமிழனை தலைநிமிர்ந்து தன்மானத்தோடும் திமிரோடும் நடைபோட செய்வோம்.. தமிழுக்கும் இனத்திற்கும் அரணாய்..தமிழ் மக்களின் நம்பிக்கையாய் வீறுநடைபோடுவோம்.. .. தங்கதளபதியே.. எங்கள் இனத்தின் காவலே.. எங்களின் செயலே.. வழிநடத்துத்துங்கள்.. தமிழகம் நிமிரட்டும்.. #இளஞ்சூரியனே.. வாழ்த்துகள்.. .. ஆலஞ்சி மன்சூர்....

No comments:

Post a Comment