Monday, January 9, 2017

கலாச்சாரத்தின் மீதான காவிகளின் தாக்குதல்

மத்தியில் ஆளும் காவிகளின் அரசு.. தமிழர்கள் மீதான தாக்குதலை மெல்ல விரித்துக்கொண்டே வருகிறது.. முதலில் பண்பாட்டின் மீதான தாக்குதல் இப்போது கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்.. இவர்கள் ஏன் தமிழின மீதான தாக்குதலை தொடர்ந்துநடத்திவருகிறார்கள் என்பதை உணர்ந்தால் இவர்களின் பாசிச சிந்தனைகளை திணிக்கமுடியாமல் இருக்கிற ஒரே இனம் தமிழினம் என்பது புரியும்.. இதே அளவுகோலை பிற மாநில கலாச்சாரங்களின் மீது திணிக்கிறார்களா என்றால் இல்லை... கேரள அறுவடை திருநாள் என அறியபடுகிறது ஓணம் அதற்கு விடுமுறை இல்லையென்று அறிவிக்கவேண்டியதுதானே.. அறிவித்துவிட்டு அங்கே நடமாட முடியாது.. .. ஜல்லிக்கட்டின் மீதான தடையை ஏதோ விலங்கின் மீதான அக்கறை என நாம் நினைத்து அல்லது ஒரு சாராரின் திமிரின் வெளிபாடென நாம் வாய்மூடி இருந்ததே இன்றைக்கு நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதலை வெளிப்படையாக நடத்தியிருக்கிறார்கள்.. வடஇந்தியர்களின் பண்டிகைகளுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறதா என்றால் இல்லை.. நம் மீது திணிக்கப்பட்ட திபாவளியை பொங்கலை விட விமர்ச்சையாக கொண்டாடியதின் விளைவு இன்றைக்கு கட்டாய விடுமுறையில்லை அதாவது உங்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லவேண்டுமெனில் சம்பளத்தோடு கூடிய விடுமுறை இல்லை.. ஆனால் கைரளியர்களை(மலையாளிகள்) பாருங்கள் அவர்கள் திபாவளியை கொண்டாடுவதில்லை மாறாக சாதிமதம் பார்க்காமல் ஓணத்தை கொண்டாடுகிறார்கள் அரசு கூட தன் ஊழியர்களுக்கு போனஸை (ஊக்கதொகை) திபாவளிக்கு வழங்காது ஓணம் பண்டிகைக்குதான் தரும்.. ஆனால் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்துவருகிறார்கள்.. அதன் வெளிபாடுதான் தைரியமாக ஆரியத்தால் அறிவிக்க முடிகிறது .. .. தமிழகத்தில் பலவீனமான அரசும் தட்டிகேட்க திராணியற்ற நிலையில் எடுப்பார்கைப்பிள்ளையான கதையாக செயலிழந்து நிற்கிறது.. இதை உடனே பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையில் அனைவரும் இணைந்து போராடவேண்டும் தனித்தனியாக போராடுவோமென என வீம்புபிடித்தால் எதிராளிகள் தொடர்ந்து தமிழினத்தின் மீதான கவாச்சார பண்பாட்டு மீதான கொள்கைகள் மீதான தாக்குதலை தொடர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.. .. இது அப்பட்டமான ஒரு இனத்தின் மீதான தாக்குதல் சட்டரீதியாகவும் பொதுவெளியும் ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும் இல்லையேல் மெல்ல இனி தமிழனின் கலாச்சாரம் அழியும்.... #எச்சரிக்கை.. .. ஆலஞ்சி மன்சூர்...

No comments:

Post a Comment