Wednesday, January 11, 2017

Lawmaker

Lawmaker of India.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேரை வைத்திருக்கும் ஒருகட்சியால் மக்களின் நலனுக்கான திட்டங்களை கூட எடுத்துச்சொல்லி கேள்வி கேட்க முடியவில்லை.. ஒரு எம் பி யின் தகுதி என்ன என்பதை கூட அறியாதவர்களை நாமும் அனுப்பிவைத்திருக்கிறோம்.. .. எந்தவொரு பிரச்சனையானாலும் பிரதமரை சந்தித்து பேச முடியவில்லை ஆனால் பிரதமருக்கோ நடிகைகளை காண்பதற்கு நேர அவகாசம் இருக்கிறது.. ஏன் நடிகைகளை சந்திக்க கூடாதா என கேட்டால் தவறில்லை அதை மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் மக்களின் பிரச்சனையை கையிலெடுத்து கொண்டு வருபவனை தொடர்ந்து புறக்கணிக்க முடிகிறதே எதனால்.. இவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற ஆணவம் தவிர வேறென்ன .. இவர்கள் (எம்பிக்கள்) தங்களின் செயல்களால் தங்கள் மதிப்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.. காலில் விழுந்து கிடப்பது கார் டயரை கும்பிடுவது ஆகாசத்தைப்பார்த்து கும்பிடுவது.. இதோ.. கடைசியில் திடீரென்று உதவியாளராக இருந்தவரை உயர்த்தி பிடித்து நீங்கள்தான் எஜமானி என்பது.. எவ்வளவு கேவலமென்று அறியாமல் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. .. இது போல் எந்தமாநிலத்திலும் நடக்காது சூடுசுரணையே இல்லாத இவர்களை வைத்து சர்க்கஸ் நடத்தலாம் ..மகாகேவலமானவர்கள்.. பிற மாநிலங்களிலிருந்து வருகிறவர்களை பார்த்தால் நமக்கு கம்பீரமாக தெரிகிறது தலைமைக்கு கட்டுபட்டு நடந்தாலும் எந்த இடத்திலும் சுயமரியாதையை இழப்பதில்லை .. இதேபோல் பிரதமரும் சந்திக்க மறுப்பு சொன்னதில்லை அப்படி சந்திக்க மறுத்தால் வேறுவிதமான தாக்குதலை தருவார்கள்.. .. நாடாளுமன்றத்தின் உறுப்பினரையே சந்திக்க மறுக்கிற அவலம் .. ஜனநாயக வரம்பை மீறிய செயல் அவர் யாராக இருந்துவிட்டு போகட்டும் சுயமாக சிந்திக்க தெரியாதவராக கூட இருக்கட்டும் ஒட்டுமொத்தமாக பின்பாட்டுபாடுபவராக கூட இருக்கட்டும்.. அவர்களின் கோரிக்கைகள் ஏற்கமுடியாததாக இருக்கட்டும் அதை நாசுக்காக வெளிப்படுத்தியிருக்கவேண்டும் அவர்களை பார்க்க மறுப்பது ஒரு வகை சர்வாதிகார செயல்.. தான்தோன்றித்தனம் .. இனியாவது திறமையானவர்களை தேர்வு செய்து அனுப்புவோம், சபையில் சினிமாபாட்டுபாடி திரியும் ரசிககுஞ்சுகளை அனுப்பாமல் நமக்காக நம் உணர்வுவை வெளிபடுத்துகிற துணிவும் திறமையும் உள்ளவர்களை சிறந்த பேச்சாற்றல் உடையவர்களை எதையும் எதிர்கொள்ளும் துணிவு கொணடவர்களை அனுப்புவோம்.. சில நூறுக்கு ஆசைப்பட்டு #மதிப்பிழந்து_முகமிழந்து போனோம்.. இனியேனும்.. .. #அறிவுடையோரை_தேர்வுசெய்வோம்… .. ஆலஞ்சி மன்சூர்..

No comments:

Post a Comment