Tuesday, January 10, 2017

எங்கள் கிரீடம்

Demonetisation இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கிழித்தெறிந்தார் திரு.ஸ்டாலின் ..மாண்பிமை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடும் வானுயர புகழ்ந்த டுடே மாநாட்டில் மகிழ்ந்து திளைத்த போது திரு.ஸ்டாலின் மோடிக்கெதிரே ஆணியடித்தார்.. பிஜேபி பினாமிகளுக்கு முன்.. பிஜேபியின் ஊடக ஜால்ராக்களுக்கு முன் கம்பீரமாய் .. மக்களை மெல்ல மெல்ல கொல்லும் பிற்போக்குதனமான திட்டம் என்றார்.. .. இந்த துணிவு பெரியாரின் பேரப்பிள்ளைகளிடம் மட்டுமே காணமுடியும் அஞ்சுவது இழுக்கு என வாழ்பவர்கள்.. இந்த சமூகத்தின் நீதி நிலைத்திட எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கருத்தை பதிந்திட /செயல்பட மறந்ததில்லை.. அரைகுறையோடு முதல்வரும் முதல்வரின் மூலவரும் உளறிக்கொட்டி தமிழகத்தை தலைகுனிய வைத்தார்களே என நினைத்துக்கொண்டிருந்தபோது .. இதோ தமிழகத்தின் குரல் இங்கே இருக்கிறது அவர்கள் போலித்தனமான அரைவேக்காடுகள் என உணர்த்தி.. தமிழகத்தின் குரலாய் ஒலித்தது தளபதியாரின் உரைவீச்சு.. .. சமீபத்திய தளபதியாரின் செயல்பாடுகளை உற்று கவனித்தால் புரிந்திருக்கும்.. தான் எடுத்துக்கொண்ட விடயத்தை முடிக்கிற வரை ஓயமாட்டார்.. இது கலைஞரிடமிருந்து கற்றது.. பெரியார் சொன்னார் கருணாநிதி எனது நேரடி சீடன் அவனிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை முடிக்கிறவரை ஊண் உறக்கமின்றி செயல்படுவான் என்றார்.. ஆம் தளபதியும் அப்படிதான் தன்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து விரைந்தும் தெளிவாகவும் செயல்படுகிறார் .. முதல்வரை சந்தித்து தமிழகத்தை வறட்சிமாநிலமாக அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தி சாதிக்கிறார்.. இதோ பொங்கல் விடுமுறையை கட்டாயமாக்க வேண்டி போராட்டமென்கிறார்.. இப்போது சித்தாந்த எதிராளிகள்சபையில் அவர்களுக்கெதிரான ஆணியடிக்க /முழக்கமிட முடிந்தது.. .. இன்று நடந்த ஒரு சம்பவம்.. கலைஞர் அழைக்கிறார் என்றவுடன் விரைந்து செல்கிறார்..தளபதி இடைமறித்து சண்முகநாதன் ஒரு காகிதத்தை தருகிறார் அதில் கலைஞர் கைப்பட எழுதிய வரிகள்.. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்.. .. வேறன்னவேண்டும். .. செயல்படும்தலைவரை இனம்காட்டிய #கலைஞருக்கு நன்றி!.. .. #எங்கள்கிரீடம்_நீ… .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment