Sunday, January 29, 2017
ஆர்எஸ்எஸ் பேரணிக்காக ஊரடங்கு உத்தரவு
144 தடை உத்தரவு..
இந்திய அரசிலமைப்பு தந்த உரிமைகளில் எழுத்துரிமை பேச்சுரிமை ஒன்று கூடி போராடும் உரிமை.. ஜனநாயகத்தில் போராட்டம் தவிர்க்க முடியாதது அரசாள்வோர்மீது அதிருப்தி வரும்போது மக்கள் போராடுவது தவிர்க்கமுடியாது.. எதிர்ப்பை அறவழியில் காட்டுவதென்பதும் கருப்புகொடி உண்ணாவிரதம் எதிர்ப்பு முழக்கம் இவையெல்லாம் எல்லா ஆட்சியாளர்கள் மீதும் தொடர்ந்து வந்ததை நாம் கண்டியிருக்கிறோம்.. பிரதமர் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை விமர்சனத்திற்கு ஆளாகதவர்கள் யாருமில்லை.. மாபெரும் போராட்டவடிவான ஒன்றுகூடலில் மோடிக்கெதிரான கோஷங்கள் ஆள்வோரை அச்சபடவைத்திருக்கிறது. அதனால் தேசவிரோதம் என்றெல்லாம் கதைகட்டி கடைசியில் மக்கள் நம்ப மறுத்தவுடன் வேறுவழியின்றி எங்கே மீண்டும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தை கடுமையாக்கிவிடுவார்களோ என அஞ்சிய அரசு..
கையாலாகாத பொம்மை/பினாமி அரசை வைத்துக்கொண்டு களியாட்டமாடுகிறது..அதில் ஒன்றுதான் பிப்ரவரி12 வரை மெரினாவில் யாரும் போராட தடை.. இது சட்டவிரோதமும் கூட..
..
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மட்டும் மெரினா சாலையில் அனுமதி அளித்தது ஏன்.. 144 அவர்களுக்கு பொருந்தாதா.. ஜனநாயக நாட்டில் ஊர்வலத்திற்கு அனுமதி எனில் நாங்களும் ஊர்வலமாய் செல்ல அனுமதிப்பதுதானே முறை.. இதற்கு அரசும் காவல்துறையும் பதில் சொல்லவேண்டும்.. காவிகள் காலூன்ற இந்த பொம்மை அரசு தலையாட்டுகிறது.. இந்த 144 கூட ஆர்எஸ்எஸின்/பாசிசத்தின் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடிவிடுவார்கள் என்பதால் கூட இருக்கலாம்..
எத்தனை காலம் ஆடுவீர் ஆடுங்கள் ..
அடக்குமுறையும் பின்புறத்திலிருந்து இயக்குவதும் வெகுகாலம் நிலைத்திருப்பதில்லை.
சர்வாதிகாரமும் அடக்குமுறையும் உலகில் வென்றதில்லை..
#அடக்குமுறையால்எதுவும்_சாதிக்கமுடியாது..…
தோழர் ஆலஞ்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment