Sunday, January 15, 2017

எங்கே போய்கொண்டிருக்கிறது..

என்ன மாதிரியான அரசியல் நடக்கிறது.. தமிழகம் எங்கே போய்கொண்டிருக்கிறது.. யார் வேண்டுமானாலும் நம்மை தலைமையேற்க அனுமதிப்பது என்பது எவ்வளவு இழிவான செயல்.. அதிமுக என்கிற அரசியல்கட்சி ஏதோ காழ்ப்புணர்ச்சி காரணமாக துவங்கப்பட்டு அதன் காரணகர்த்தாக்களின் அறிவிலித்தனத்தை ,மக்களை மயக்கத்திலேயே வைத்திருந்து கடைசியில் யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிற நிலை.. கடந்த ஐந்தாண்டுகளில் நேரடியாகவே சம்பாதிக்க தொடங்கி அரசியலை வியாபாரமாக்கி அதன் மூலம் பெரும் பயன்யடைந்தவர்கள் ஒருபக்கமும் இரத்த உறவைச்சொல்லி சிலர் மறுபக்கமும்.. இருவருக்கு தகுதியோ நேரடியாக மக்கள் சேவையாற்றி மக்களால் நேசிக்கப்பட்டு வந்தவர்கள் இல்லை .. ஆனால் மீதமுள்ள நீண்டகால அதிகார காலஅளவு மீதஇருப்பதை சுருட்டலாம் சுருட்டியதை சரியாக்கி காப்பாற்றலாமென்ற ஒற்றை நோக்கை தவிர தமிழக நலனோ தமிழ்சமுதாயத்தின் மீதான அக்கறையோ, இந்த நாட்டுமக்களின் துயரங்களை நீக்கி அவர்களின் உரிமைகளை பெற்று தரவேண்டுமென்ற நோக்கமோ இல்லை.. .. நேற்றைய தினம் எங்கள் மாவட்ட அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலரும் பேசினார்கள் உண்மையில் பச்சாதாபம் தோன்றியது.. எதைப்பற்றி பேசவேண்டுமென்ற அறிவில்லாமை பேச்சின் நெடுக தெரிந்தது.. எப்படிபட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியிருக்கிறோம் நாமென்று வினா எழும்பியது.. தலைவர்களை உருவாக்கவில்லை மாறாக அரசியல்வாதிகளை வியாபாரிகளை உருவாக்கியிருக்கிறோமென்றே தோன்றியது.. கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டுமெனில் பொதுஅறிவோ சமூக சிந்தனாயோ நாடு, மக்கள் ,சமூகம்.. எதைப்பற்றி ஆழ்ந்தறிவோ இல்லை வெற்று கூச்சலிடும் பிரச்சார ஒலிப்பெருக்கிகளை உருவாக்கியிருக்கிறோம்.. எங்கே எதை பேசவேண்டுமென்று அறிந்திருப்பது அழகு.. .. உண்மையில் தமிழ்நாட்டில் மட்டுமே கவர்ச்சி அரசியல் நீண்டகாலம் இருந்திருக்கிறது ஆந்திராவில் #தேவுடு என்று சொன்ன ராமராவை கூட தூக்கியெறிந்தார்கள்..மிகவும் ஏழ்மைநிலையிலிருந்தும் எல்லா துறைகளிலும் பின்னிலே இருந்தும் பீகாரில் மக்கள் வாக்குகளை விற்கவில்லை.. ஆனால் தமிழகத்தில் ஏழைகளை மட்டுமே குறிவைத்து விநியோகிக்கப்பட்ட வாக்கிற்கு பணமென்பது இப்போது நடுத்தர குடும்பங்களையும் #கவர்ந்தழுத்திருக்கிறது.. சில #நல்ல குடும்பங்களில் கூட பணம் வாங்கி வாக்களிக்கும் விபரீதம் வந்ததாக சொன்னார் நண்பர்.. காசுக்கு வாக்களிப்பது வேசித்தனம்.. இதில் நல்லவேசித்தனம் கெட்டவேசித்தனம் என்ன.. .. இங்கே நல்ல அரசியலை காழ்ப்புணரிச்சியற்ற அரசியலை நேர்மையான அரசியலை கையிலெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது கவர்ச்சி காசுக்கென வாக்களித்ததால் கண்ட கண்ட #கழுதைகளெல்லாம்.. குதிரைகளாக வலம் வர தொடங்கியிருக்கிறது.. இனியேனும் நல்லவர்களை நமக்காக உழைப்பவர்கள் நாட்டின் நலன் கருதுவோரை இன,மொழிஉணர்வுள்ளவர்களை.. உண்மையானவர்களை நல்ல தலைவர்களை உருவாக்குவோம் அவர்கள் பின் அணிவகுப்போம்.. #மாடியில் நின்று கையசைத்தால் தலைவராகலாம்.. #பியூட்டிபார்லில் முக,சிகையலங்காரம் செய்தால் தவைவராகலாமென்ற அடிமைசிந்தனையை மறுத்து எழுதுவோம்.. #புதியதோர்_சரித்திரம்.. #தொடங்கட்டும்_புதியஅத்தியாயம்... .. ஆலஞ்சி மன்சூர்...

No comments:

Post a Comment