Sunday, January 22, 2017
அசாதாரண சூழல்
இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு யார்காரணம்..
இந்த அரசும் ஆளும் தலைமையும் தானே.. எதை எப்படி செய்து முடிக்கவேண்டுமென்ற சுயசிந்தனையில்லாமல் பதவிஆசையில் யார் சொன்னாலும் தலையாட்டியாக இருந்ததுதானே காரணம்..
மக்கள் உணர்வை நீண்டகாலம் ஆறபோட்டுவிடலாமென்று எண்ணியதுதானே இன்றைய பெரும் எழுச்சிக்குகாரணம்.. கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் இப்போதை யாருக்கு அதிகாரமென்று தெரியாத பொம்மை ஆட்சியிலும் ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டு வந்ததே ..
#எதிரிக்கட்சி_தலைமை
மெல்ல தட்டி எழுப்பியபோதே புரிந்திருக்குமே..
திரு.பன்னீர் அவர்களே.. ஒரே வழி மட்டுமே உங்கள் முன்னால் இருக்கிறது தற்காலிகமாக கவர்னர் ஆட்சிக்கு பரிந்துரையுங்கள் வேறு மார்க்கமில்லை..
Dissolve the government.. அதாவது அரசாங்கத்தை மட்டும் கலைத்துவிட்டு சட்டமன்றத்தை கலைக்காமல் இருக்கலாம் ..
..
தற்காலிக தீர்வை மறுத்து அலங்காநல்லூரில் வழியை தடைந்து முதல்வரே செல்லமுடியாமல் செய்த அறவழி போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்றது.. ஆரம்பம் முதலே பன்னீரின் அரசு மோடிக்கு வக்காலத்து வாங்கியது மிகப்பெரிய பலவீனமாகிப்போனது.. என்ன செய்திருக்கவேண்டும் பிரதான எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து மாணவர் பிரதிகளையும் உள்ளடக்கி தீர்மானம் எடுத்திருக்கவேண்டாமா..
ஆளாளுக்கு கருத்தை பதிவு செய்து மாணவர் முதல் முதியவர் வரை எல்லோரையும் போரட்டத்தில் கலந்து கொள்ள செய்த போராட்டம் மக்களின் வெற்றியாக பார்த்த #மெரினாபுரட்சி என்ற திமுக எங்கே.. சின்னம்மாவின் சீரிய முயற்சியென்ற அதிமுக எங்கே..
..
ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிட்டு ஆறேழாண்டாய் அடிமைத்தன சிந்தனையோடு சுயமிழந்து நின்று தமிழனித்தையே தலைகுனிய செய்ததின் பலன் இப்போதுதான் வீரமறவர் தமிழரென பெருந்தீயாய் சுட்டெரிக்கிறது..
இன்னும் பொசுக்கவேண்டியது நிறைய இருக்கிறது.. இன பகைவர் முன் கைக்கட்டி நிற்கிற கேவலத்திலிருந்து மாறி மரியாதையோடு வலம் வர திரு.பன்னீர் அவர்களே.. அரசை கலைக்க பரிந்துரையுங்கள்..
..
இனியாவது மக்கள் சுயமாய் தேர்வு செய்யட்டும்..
தங்களுக்கு எல்லா காலகட்டத்திலும் துணை நிற்பவரென்று நம்புகிற #யாரையேனும்.
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment