Tuesday, January 3, 2017

ஜல்லிக்கட்டு தடையை நீக்கு..

ஜல்லிக்கட்டு.. திரு.பொன்.ராதா அவர்கள்.. ஜல்லிக்கட்டிற்கான போராட்ட களம் வாடிவாசல் அல்ல டெல்லி தான் என்கிறார்.. நன்று .. இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்ட அறிவிப்பை வெளியிட்டபோது திமுக தலைமைக்கு கடிதம் எழுதி பொறுத்துக்கொள்ளுங்கள் எப்படியும் இந்தாண்டு ஜல்லிக்கட்டை நடத்திவிடலாமென கூறியது தாங்கள் தானே.. அப்போது இங்கே வாடிவாசலில் போராடாதீர்கள் என ஏன் சொல்லவில்லை.. தொடர்ந்து இரண்டாடுகளாக இதோ இந்தாண்டு நடத்திவிடுவோம் என பொய்யுரைப்பது தாங்களும் தங்கள் சகாக்களும் தானே பொன்னார் அவர்களே.. இதை சொல்லும் போது கூசவில்லையா.. .. நிறைய பேர் ஏன் பாஜகவினர் கூட திமுக ஆட்சியில்தானே உச்சநீதிமன்றம் தடைவிதித்தது என்கிறார்கள் ஆனால் தடையை தளர்த்தி /மீறி தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியதை பேச மறுக்கிறார்கள்.. சில நிபந்தனைகளை மீறிவிட்டதாக peta அமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுகியதும் பாஜகவின் மேனகாகாந்தி தொடர்ந்து தடைக்காக போராடியதும் இவர்கள் வசதியாக மறந்து போகிறார்கள்.. .. ஆறு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அவர்கள் சொத்து வழக்கையும் பிற வழக்குகளையும் கவனித்துவந்தார்களே தவிர .. அதோடு இல்லாமல் எல்லாவற்றையும் நீதிமன்றத்தின் மூலமே தீர்த்துக்கொள்ளலாமென்ற விவரகேடுமே காரணம் .. மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்து தடையை ஓரேயடியாக நீக்க முடியாவிட்டாலும் தளர்த்தி நடத்தி காட்டியிருக்கலாம்.. பாவம் அவர்கள் தலைமீது தொங்கும் கத்திக்கு அஞ்சியே ஆட்சி நடத்தவேண்டிய அவலம்.. .. இப்போது கூட திருமதி தமிழிசை போன்றோர் தேன்தடவிய வார்த்தை சொல்லி நம்பவைத்து கடைசியில் நீதிமன்றம் மறுக்கிறது என சொல்லி ஏமாற்றுவதையே வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.. சட்டதிருத்தத்தை இரண்டாண்டுகளில் கொண்டுவந்திருக்கலாம்.. அதை செய்ய மறுப்பது ஏன் .. .. தளபதியாரின் அலங்காநல்லூர் போராட்டம்.. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருப்பதலிருந்தே மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு தடையை தளர்த்தி இந்தாண்டே நடத்த வழிவகை செய்யவேண்டும்.. தமிழர்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலை இந்த பாசிச பாஜக அரசு கைவிடவேண்டும்.. அமைதியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதாக எண்ணவேண்டாம் நீறுபூத்த நெருப்பாக .. தமிழர் நெஞ்சில் புகைந்துக்கொண்டிருக்கிறது.. அது எரிமலையாய் ஆவதற்குள்.. ஜல்லிக்கட்டின் தடையை நீக்க மத்திய அரசு முயலவேண்டும்.. .. #ஜல்லிக்கட்டுதடையை_நீக்கவேண்டும்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment