Friday, January 13, 2017
பெரியார் விருது..
பெரியார் விருது..
விருதைபெறுவதற்கென்று சில தகுதிகள் உண்டு..
அதில் எதிலே சேர்ந்திராத ஒருவருக்கு வழங்கப்படுவது விருதை அவமதிக்கும் செயல்..
..
பெரியாரின் சாதிமறுப்பிற்கெதிரானவர்.. இவர் கரிசனத்தில் தான் மகோரா உடல்நலிவுற்று இருந்தபோது இவரின் சாதீய தீ.. தமிழகமெங்கும் பற்றி எரிந்தது.. இவர் பாமக சார்பில் அதற்கு பிறகு வந்த தேர்தலில் நின்று வென்றார்..
..
பெரியாரின் தன்னம்பிக்கை திடமான கொள்கை உணர்வோ இவரிடமில்லை.. இவர் இதுவரை மாறி மாறி சவாரி செய்து சவாரி செய்த குதிரையை காலைவாரிய பழக்கமுடையவர்.. எங்கும் நம்பிக்கையானவராய் எப்போதும் இருந்ததில்லை..
இவர் நம்பிக்கையற்றவர் என்பதோடு மிகப்பெரிய துரோகி என்பதற்கு அடையாளமாய்.. மிசா காலத்தில் (அவசரநிலை பிரகடனம்) கலைஞரோடு காரில் பயணித்தவர் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் கலைஞருக்கு காரோட்டும் சாரதி வராததால் இவர்தான் காரை ஓட்டிச்சென்றார்.. கலைஞர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வந்தவுடன் பாதி வழியிலேயே காரை நிறுத்திவிட்டு பயந்தோடியவர் அப்போது உடனிருந்த கண்ணப்பன் தான் கலைஞரின் காரை ஓட்டி பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தார்.. அதனாலேயே அவரை காரோட்டி கண்ணப்பன் என்றே அழைக்கப்பட்டார்.. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் காரோட்டியதின் நினைவாக தான் அவருக்கு போக்குவரத்து துறையை கலைஞர் ஒதுக்கினார். மற்றொரு சம்பவத்தையும் இதனோடே சொல்லவேண்டும் மகோராவை பிரிந்து நாஞ்சிலார் திமுகவிற்கு வந்தபோது வருவாய் என்றார் கலைஞர் திமுக ஆட்சி வந்தபோது அவருக்கு வருவாய்துறை ஒதுக்கினார் ..
..
சரி விசயத்திற்கு வருவோம்..
எத்தனையோ முறை தூது அனுப்பியும் கலைஞர் எல்லோரையும் சேர்ந்துக்கொண்டபோதிலும் பண்ரூட்டியை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.. தூங்கும் போது தலையில் கல்லை தூக்கிப்போட தயங்காதவன்..என்பார்..
..
நம்பியவரை கழுத்தறுக்கிறவருக்கு பெரியார் விருதா.. தன்மானமில்லாத.. சுயமரியாதை தெரியாத ,கொண்ட கொள்கையில் நம்பிக்கையோடு இல்லாத/பணியாற்றாத, நம்புகிறவர்களை நடாற்றில் தவிக்கவிட்டு ஓடியொளிகிற ..,
அறிவோடு எதை அணுகிட தெரியாத சாதீயவெறி அப்பட்டமாக தெரிகிற இனதுரோகிக்கு....
எந்நிலையிலும் கொண்ட கொள்கையில் உறுதியோடும் எதிரிகளை எதிர்ப்பதில் தீவிரமாகவும் எதையும் அறிவோடு தீர்க்கமாக தொலைநோக்கோடு சிந்தித்து இந்த சமுதாயத்தில் ஏற்றதாழ்வை ஒழிக்கபாடுபட்ட எங்கள் #அறிவாசான் விருதா..
..
தயவு செய்து துரோகிகளுக்கும்,பச்சோந்திகளுக்கும், கொள்கையிலா கோமாளிகளுக்கும், சிந்திக்கும் ஆற்றலில்லா அறிவிலிகளுக்கும், மானமிழந்து மண்டியிடும் அடிமைகளுக்கு தந்து #விருதை கேவலப்படுத்தாதீர்..
..
#எங்கள்பெரியார்_மாமேதை..
#மாமேதைவிருது_மடையனுக்கா
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment