Friday, January 27, 2017

எரிச்சல் ஏன்..

ஒரு வாரம் ஊடகங்கள் புறக்கணித்தால்/இருட்டடிப்பு செய்தால் ஸிடாலின் மறைந்து போய்விடுவார்..அன்புமணி.. இவர் இருப்பதே இப்போதுதான் ஞாபகம் வருகிறது.. இது பழைய டெக்னிக் அன்பு மணி வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.. முன்பு கலைஞரைப்பற்றி ஏசியோ புகழ்ந்தோ பேசினால் தான் அரசியலில் இருப்பதே தெரியும் அதை அப்பன் சொல்லி மகன் கேட்டிருப்பாரென நினைக்கிறேன்.. .. திரு.ஸ்டாலின் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டிருக்கிறார் மக்கள் மனதில் அசைக்கமுடியாத நிலையான இடத்தை தன் நடவடிக்கையின் மூலம் தினம் தினம் செய்துக்கொண்டிருக்கிறார்.. அவரின் அரசியல் நாகரீகம் எதிரிகளாலும் பாராட்டபடுகிறது.. நேற்றைய தினம் கூட முதல்வர் வாகனத்திற்கு வழிவிட்ட நேர்மையான அரசியல் எல்லாருடைய புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது.. இதெல்லாம் இந்த மாதிரியான சிறந்த நாகரீக அரசியல் தாங்கள் அறியாதது தெரிந்ததெல்லாம் இளைஞர்களிடத்தில் சாதி வெறியை வளர்த்து குளிர்காய்வதை தவிர வேறொன்று அறிந்திருக்கவில்லை சாதிவெறி என்ற பயிற்சியை தவிர நல்ல முன்மாதிரிகளை ஸ்டாலினை கண்டு படியுங்கள்.. .. முதலில் ஒருவரை விமர்சிப்பதற்கு முன் அவரின் நடவடிக்கைகள் மக்களிடம் நல்ல பாராட்டை பெற்றிருக்கிறாதா அல்லது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறதா என்று பாருங்கள்.. அதற்கு முன் விமரிசிக்க தகுதி இருக்கிறதா என்று சுயம் பரிசோதித்து கொள்ளுங்கள்.. மக்களால் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான மிகபிரமாண்டமான இதுவரையில்லாத அளவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியின் செயல்தலைவரை.. டெபாசிட் கூட வாங்க வக்கியில்லாதவர் பேசலாமா..என்று எங்களாலும் கேட்க முடியும்... ஆனால் ஒன்று மட்டும் உங்கள் பேச்சினுடே புரிகிறது.. #எரிச்சல் .. வேறொன்றும் இல்லை.. .. #ஆதவனை_கரம்கொண்டு_மறைத்திடமுடியுமா.. .. தோழர் ஆலஞ்சி....

No comments:

Post a Comment