Monday, January 9, 2017
இனத்தின் மீதான தாக்குதலை முறியடுப்போம்
ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமெனில் அதன் மீது கலாச்சாரபடையெடுப்பு நடத்தவேண்டும்.. ஆம் அதைதான் மெல்ல மெல்ல பாஜக அரசு செய்து வருகிறது.. திராவிட ஆரியர் போர் இன்று நேற்றல்ல ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துக்கொண்டுதானிருக்கிறது.. மெல்ல மெல்ல பிற கலாச்சார திணிப்பை, விநாயகர் சதூர்த்தி திபாவளி மகா சிவராத்தி ஹோலியென.. அதை தமிழின் திருவிழாப்போல நடத்தவைத்திருக்கிறது.. ஜாதி மதங்களை கடந்த பொங்கலை இந்துபண்டிகையை போல சித்தரித்ததும் காலபோக்கில் அது இனத்தின் பண்டிகையிலிருந்து வெளியேறி மதத்தின் சாயல் பூசப்பட்டதும் கூட ஆரிய சூழ்ச்சியன்றி வேறில்லை..
..
இப்போது ஆரியர்கள் அதிகாரத்தில் வந்ததும் நேரடியான தாக்குதலை தொடர்கிறார்கள்..ஜல்லிக்கட்டை தடைவிதிக்க மறைமுக ஆதரவை தந்தவர்கள் மிருகவதையை காரணம் காட்டியவர்கள் யானைகளை வீதிஉலாவிற்கு அழைத்துவருவதை மிருகவதையில் கொள்ளமாட்டார்கள்.. சிவராத்திரி விடுமுறை விடவேண்டுமென்பதற்காக பொங்கலை விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கி அப்பட்டமான மதவெறியை இனவெறியை காட்டியிருக்கிறது மத்திய அரசு..
மெல்ல இந்துத்துவா கொள்கைகளை தமிழர்கள்மீது திணிக்கும் செயலிது..
பொங்கல் பண்டிகை நீக்கி அந்த இடத்தில்
மகா சிவராத்திரியை திணிக்கும் செயலை சத்தமில்லாமல் செய்திருக்கிறது..
தமிழினம் ஒன்றுபட்டு எதிர்க்கும் வேளை வந்துவிட்டது.. பாஜக அரசின் தமிழின விரோத போக்கை கடுமையாக எதிர்க்கவேண்டும்..
..
தமிழகத்தை ஆளும் பொம்மை அரசு லெட்டர் எழுதி தன் கடன் முடிந்துவிட்டதாக கருதுகிறது.. ஏறக்குறைய மிரட்டப்பட்ட நிலையில் அதிமுக அரசு மத்திய அரசின் தலையாட்டியாக செயல்படுகிறது.. இனஉணர்வோ மொழிஉணர்வோ சிறிதுமில்லாத கொள்ளையடிப்பதற்கும் கொள்ளையடித்ததை காப்பாற்றிக்கொள்வதற்கும் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்த நினைக்கும் கேடுகெட்டநிலையில் தமிழக அரசு..
..
பிரதான எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது.. அதில் அனைவரும் பங்கேற்கவேண்டும் .. நமது பகை ,அரசியல் ,கட்சி, கொள்கை, சாதி ,மதம் ,எல்லாவற்றையும் தாண்டி இனத்தின் மீதான தாக்குதலை கலாச்சார பண்பாட்டு மீதான தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைவோம்..
நம் கலாச்சாரத்தின் மீதான ஆரியதாக்குதலை முறியடிப்போம்..
..
#ஆரியத்தைவெல்வோம்..
..
ஆலஞ்சி மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment