Sunday, January 8, 2017
ஸ்டாலின்...
ஸ்டாலின் செயல் தலைவரானது கலைஞருக்கு தெரியுமா.. அன்புமணி..
முதலில் அவர் அறியாமலேயே திமுக ஜனநாயக இயக்கம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.. ஏனெனில் அதிமுக வின் அடுத்த கட்ட தலைவராக யாராரோ ஆசைபடும் போது கூட விமர்சிக்காமல் திமுகவை விமர்சிப்பதிலிருந்தே திமுக மக்களுக்கான இயக்கம் என்பதை உணர்ந்திருக்கிறார்.. அவரின் அக்கறையை வரவேற்போம்..
..
ஏறக்குறைய நீண்டநாட்களாக பேசபட்டுவந்த விடயம் ஸ்டாலின் பொறுப்பிற்கு வரவேண்டுமென்று அதுவும் கலைஞரே தலைவர் பதவிக்கு என்னை யாரையேனும் பரிந்துரைக்க சொன்னால் நான் ஸ்டாலின் பெயரைதான் முன்மொழிவேன் என மக்கள் அரங்கிலேயே வெளிபடையாக சொன்னார்.. பேராசிரியர் பெருந்தகை ஸ்டாலின் வருவது எனக்கு பாதுகாப்பு என்று சொன்னார் இந்த இயக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஸ்டாலின்தான் சரியான தலைவரென்றார்..
..
திமுக பொதுக்குழுவைப்பற்றி அறிந்திருந்தால் இந்த கேள்வியே எழாது.. கலைஞர் கலைந்துக்கொள்ளாத முதல் பொதுக்குழு பேராசிரியர் மிகவும் மன இறுக்கத்தோடே வீற்றிருந்தார்.. ஏறக்குறைய 2 மணிநேரம் திரு.ஸ்டாலினோடு விவாதித்து.. துரைமுருகன் சுப்புலெட்சுமி போன்ற முன்னோடிகள் காலத்தின் கட்டாயத்திற்கு வழங்கி நிற்கவேண்டுமென்று வலியுறுத்தி.. கலைஞரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வார்த்தெடுக்க தளபதியை பணித்தார்கள்.. பொதுக்குழுவும் ஏகமனதாக ஏற்றது..
..
திமுக ஒன்றும் பாமக போல கொள்கை பிறழில் வந்த கட்சியல்ல நேற்றொன்று இன்றொன்று என மாறி மாறி பேசி திரிய இதொன்றும் சாதி சங்கமல்ல..
பொதுவாழ்வில் தன் சமுதாயமக்கள்முன் சத்தியம் செய்துவிட்டு பின் மாறி பேசி நிற்கும் தந்தையும் மகனும் அரசியல் பேசவே அருகதையற்றவர்கள்..
யாராக இருந்தாலும் திரு.ஸ்டாலின் செயல்பாட்டை அவர் கட்சியின் உயர்பதவிகளை அலங்கரிப்பதை கேள்வி கேட்க முடியாது..
ஏனெனில் நட்டதும் பூத்த ரோஜா அல்ல..
படிபடியாக வளர்ந்து பூத்து காய்த்து கனிந்து நிற்கும் பெருமரம்..
..
#திமுக_பேரியக்கம்_சாதி்கட்சியல்ல ..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment