Wednesday, January 11, 2017
கேலிசித்தரம்.
கார்ட்டூனிஸ்ட்..
கேலிசித்திரங்கள் மீதான கிறக்கம் ஆர்.கே வோடு போய்விட்டது .. திரு.ஆர்.கே. லட்சுமணன் you said it என்ற தலைப்பில் comman man கேரக்டர் (கதாபாத்திரம்) செய்யாத நையாண்டி இல்லை.. பாரதபிரதமர் தொட்டு யாரையும் விட்டுவைத்ததில்லை ஆனால் நையாண்டியும் எள்ளலும் மிகையாய் இருக்குமே தவிர யாரையும் புண்படுத்துவதாக இருக்காது.. பிரதமர் இந்திரா போன்றவர்கள் என்னை திரும்பி பார்க்கவைக்கும் லட்சுமணனின் தூரிகையென்பார்..
கார்ட்டூனிஸிட் கோபுலு (கும்பகோணம் கோபால்) செய்கிற குறும்புதனங்கள் ரசிக்கும்படியிருக்கும் அவரின் இலங்கை இன பிரச்சனையை தமிழ் சிங்களம் இரண்டையும் ரம்பம் கொண்டு அறுக்கும் கேலிசித்திரம் பிரபலம்.. ஆனந்தவிகடனில் நீண்டகாலம் பணியாற்றிய மதன் கூட கேலிசித்திரம் மூலமே பிரபலமடைந்தவர்.
நிறைய பேர்களுக்கு முன்னோடியாக இருந்த லட்சுமணன் கார்ட்டூனைப்பற்றி கூறும் போது சொல்லபடும் கருத்துக்களில் பிழை இருக்ககூடாது அதேவேளை சொல்லவந்ததையும் பொட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லிவிடவேண்டுமென்பார்.. பிரணாப்முகர்ஜி கூறும் போது அவரின் #பொதுஜனம் மக்களின் குரல் என்றார்..
..
இதை ஏன் சொல்கிறேனெனில் திரு.பாலா குமுதத்திலிருந்து வெளியேறுவதாக சொல்லி அதற்கு அவர் சொன்ன காரணம் சிரிப்பை தந்தது. அவரது கார்ட்டூன் சிரிப்பை தந்ததோ இல்லையோ
மோடியையும் சசியையும் விமர்சிக்க நிர்வாகம் ஒப்புக்கொள்ள மறுத்ததால் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.. அவரின் தூரிகைகள் தொடர்ந்து திராவிட இன விரோதபோக்கை கொண்டிருந்தாலும் மிக மோசமாக கலைஞரை கேலிசித்திரத்திலும் எழுத்திலும் கொண்டுவந்தாலும் அவரின் எழுத்த நிறுத்த வரைவதை நிறுத்த திமுகவோ அதன் சார்புடைய திராவிட இயக்களோ பணித்ததில்லை..
..
திரு.பாலா மிரட்டப்ப்டிருக்கிறார்.. திரு.மோடியை பற்றி கேலிசித்திரம் வரைந்தால் நடப்பதே வேறு என்று மனரீதியான அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.. வெகுகாலமாய் கலைஞரையும் திமுகவையும் மட்டும் குறிவைத்து தாக்கியபோதும் கூட பாலாவை யாரும் மிரட்டியதில்லை கருத்துசுதந்திரத்தின் ஒருபகுதியாகவே அதை கண்டோம்.. பாசிசத்தை கொண்டு நடப்பவர்களுக்கு பாலாவின் நிலைதான் வரும் என்பதற்கு இதுவே சாட்சி..
திருமதி இந்திராகாந்தியை லட்சுமணன் மூக்கை மட்டும் வரைந்து செய்த கேலிகளை கூட ரசனையோடு ரசித்து ஏற்றுக்கொண்டார்..
..
மோடியை விமர்சிக்க கூடாது என்கிற நிர்பந்தம் ஒரு வித அச்சத்தை கருத்தியலுக்கு எதிராக விதைத்திருக்கிறது.. குமுதம் போன்ற குப்பைகளோடு சேர்ந்து குப்பை கொட்டிய குப்பை வெளியேறியிருக்கிறது.. இனியேனும் குப்பையாகாமல் இருந்தால் சரி..
..
ஆலஞ்சி மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment