Monday, January 16, 2017

முகவர்/தரகர்

தன் முழுநேர பணியாக இடைதரகர் வேலையை செய்வதென்று தீர்மானித்திருக்கிறார் வைகோ.. டெல்லி சென்று சில தலைவர்களை சந்திருக்கிறார்..மன்னார்குடி நடராசன் டெல்லியில் சிலரை சந்திப்பதற்கு #பேருதவி செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. இந்த தொழில்தான் இவருக்கு சரிபட்டுவருமென நினைக்கிறேன்.. ஏனெனில் அரசியலில் எல்லாம் இழந்து மானம் மரியாதை பதவி செல்வாக்கு என எல்லாம் இழந்து நடுதெருவிற்கு வந்துவிட்டபிறகு இவர் எடுத்திருக்கிற அடுத்த வேசம் சரியாக அமைந்திருக்கிறது.. முகவர்/இடைதரகர்... .. திடீரென எம்ஜிஆரின் மீதான பாசம் இவரின் அடிக்கடி மாறும் பழக்கதோசத்திற்கு எடுத்துகாட்டு எம்ஜிஆர் என்னை அதிமுகவிற்கு அழைத்தார் என்றார்.. எம்ஜிஆர் யாரைதான் அழைக்கவில்லை பொருளாளர் சாதிக் பாட்சா வை கூட அழைத்தார் அப்போது சாதிக் ..அவர்கள் நான் சாதிக் என்றார் உண்மையான விசுவாசம் உள்ளவன் (உண்மையாளன்) பொருட்பட பதிலளித்தார் ஏன் இனமான பேராசிரியரை அழைத்தபோது கூட நான் அன்பழகன் என்றார்.. ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் விசுவாசம் இனமானம் என்றால் என்னவென்று வைகோ இனியாவது அறிந்திருப்பது நல்லது.. .. தமிழக அரசியலிலிருந்து முற்றிலும் மக்களால் வெறுக்கப்பட்ட தலைவர்கள் வரிசையில் வைகோவும் சேர்கிறார் என்கிறபோது உண்மையில் வருத்தம் வரதான் செய்கிறது அதேவேளை பொய்யான ஒரு பிரம்மத்தை நீண்டநெடிய நேரம் கரையாமல் வைத்திருக்கமுடியாதென்பதற்கு சாட்சியாகிறார்.. திறமை இருப்பதாக துணிவிருப்பதாக தலைமைத்துவம் இருப்பதாக ஊடகங்களும் எங்களை போன்ற சிலரின் தாங்கிப்பிடித்தது எவ்வளவு பெரிய தவறென்று காலம் உணர்த்தியிருக்கிறது.. உ.பி க்கு ஒரு அமிர்ஷா போல தமிழகத்திற்கு ஒரு வைகோ..ஆனால் இவரின் தரகு வேலை சிலகாலம் பயனளிக்கலாம் ஆனால் தொடர்ந்து சிதைந்து போகிற பிம்பமாகவே இருப்பார்.. .. டெல்லியில் திமுகவின் ,கலைஞரின் தயவில் 18 ஆண்டுகாலம் எம்பியாக இருந்தது அங்குள்ள சிலரின் நட்பிற்கு வழிவகுத்ததும் இப்போது கைகொடுக்கிறது.. இவர் எம்பியாக இருந்த போது பேசியதைவிட சாதித்ததைவிட இப்போது மிக அழகாக சிலகாரியங்களை செய்து கொடுக்கும் தரகர் பிழைப்பு மிக ஜோராக நடக்கிறது.. துரோக அரசியலும் அதைதொடர்ந்து சிலகாலம் தன் வாததிறமையால் தன் கட்சியை சுக்குநூறாக்கியதும் வேறுவழிதெரியாமல் திரிந்த சிலரை/கட்சிகளை உறவாடி கெடுத்து அவர்களின் முகவரியை அழித்ததும் தான் அவரின் இப்போதைய வேலைக்கு மவுசு கூட்டியிருக்கிறது.. .. அவரை அறியாமலேயே அவர் தானிருந்த வாழ்ந்த தனக்கு வாழ்வளித்த திமுகவிற்கு நன்மை செய்கிறார்.. .. #புதியதொழில்_சிறக்க_வாழ்த்துகள்… .. ஆலஞ்சி மன்சூர்...

No comments:

Post a Comment