Sunday, January 22, 2017

ஆதியின் வேசம் கலைந்தது..

ஆதி நாராயணன் மீது கோவமில்லை.. அவர் அவரிடம் தரப்பட்ட வேலையை சரியாக செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.. ஹிப் ஹாப் ஆதி.. இந்த போராடிடத்தை வடிவமைத்தவர்கள் மக்களிடையை பிரிவினையை உண்டாக்கி மதத்தை புகுந்தி சாதீய தீண்டலை செய்து பாலியல் தொல்லைகள் தந்து அதை வைத்து காவி கொடியை ஏற்றலாமென்ற அஜந்தா தமிழர்களின் ஒட்டுமோத்த நம்பிக்கையால் ஒற்றுமையால் சிதைந்துப்போனது மெல்ல விசத்தை பாய்ச்சினார்கள் முஸ்லிம்களுக்கு ஜல்லிக்கட்டிற்கு என்ன சம்பந்தம் என்றார் ராசா கூடவே மாட்டிறைச்சி திங்கிறவர்களுக்கு மாட்டின்மீதேன் அக்கறையென்றார்.. கடைசியில் எல்லாம் வெளுத்துப்போனது.. பின் ஜாதியை சொல்ல திருமாவையும் கிருஷ்ணசாமியையும் கொண்டுவந்தார்கள் மசியவில்லை வழக்கம் போல் வைகோவை வேவுபார்க்க வைத்து .. மாணவர் போராட்டம் வீண் என்றெல்லாம் பேசவைத்தார்கள்..சீமானை கூட களமிறக்கினார்கள்.. கை மீறி போவது கண்டு நாடகமாட தொடங்கினார்கள்.. நடிகனெல்லாம் வந்து நடித்துவிட்டு போனான்..ஆனால் தமிழன் மதத்தை தூக்கியெறிந்தான் ஜாதியை வேண்டாமென வைத்தான்.. பண்பாட்டில் உயர்ந்து நின்று எம் கலாச்சாரத்தை அழித்தொழிக்க நினைக்கும் பாசிச சக்திகளை இனம் கண்டான்.. .. இனி.. செய்வதறியாது.. தங்களுக்கு உரித்தான பிரித்தாளும் சூழிச்சியை கையிலெடுக்கிறார்கள்..அப்படிதான் அவர்களின் #ஆதியை திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.. .. அரசியல் கட்சிகளே வரவேண்டாம் என்பதாலேயே திமுக உள்ளே வரவில்லையே தவிர... உணர்வாளர்களாய் கலாச்சாரத்தை பண்பாட்டை காக்க வெகு திராவிடர்கள் களத்தில் இருக்க கண்டிருப்பீர்.. கட்சி சாயமின்றி உணர்வால் கலந்துக்கொண்டவர்கள் ஏராளம் கொடி பிடித்து வரவில்லையே தவிர கருஞ்சட்டையோடு வலம் வந்தோம்.. எங்கே பாசிச சக்திகள் கையிலெடுத்து மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் கவனமாக அமைதியாக செயல்பட்டோம்.. .. அலங்காநல்லூரில் மூர்த்தியும் சென்னையில் ராதா கிருஷ்ணனும் போராட்டத்தை செம்மையாக நெறிப்படுத்தியதால் தான் போராட்டம் இந்த அரசுகளை ஆட்டிவைத்தது.. ஆளும் அரசுக்கெதிராக மக்களின் கோவத்தை சரியான திசையில் பயணிக்க செய்தது.. இப்போது சிலர் ஊடகங்கள் வாயிலாக இனி அரசு பார்த்துக்கொள்ளும் முலாம்பூச வருகிறார்கள்..சற்று உற்றுநோக்கி பாருங்கள் அவர்கள் அவாள்களாக காட்சி தருவார்கள்.. ராகவனும், ராசாவும் நாராயணனும் காட்சி தந்து உபதேசிப்பார்கள்.. .. நெறிபடுத்தப்பட்ட எந்த செயலும் வெற்றிகாணமல் இருந்ததில்லை.. .. எண்ணித் துணிக கருமம் ..என்றான் வள்ளுவன்.. #வீழ்வதில்லை_இனி... .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment