Friday, January 20, 2017
அவர்கள் ஆயுதம்..
ப்ரீ செக்ஸ் என்றால் கூட 50 ஆயிரம் பேர் கூடுவார்கள் திருமதி ராதா ராஜன்..
இவர் மீது கோவம் வரவில்லை அவருக்கு தெரிந்ததை அவர் சொல்கிறார்.. ஏற்கனவே சொல்லியதுதான்.. திறக்கப்படாத கதவுகளும், மடிக்கப்படாத விரிப்புகளும் தான் அவர்கள் ஆயுதம்..
..
இதுதான் அவர்களின் ஆயுதம் எச்.ராசா கூட சேலத்து விக்னேஷ் ரயில் மறியலில் காயம்பட்டதை கூட மத மோதலை உண்டுபண்ண முடுயுமா என்று பார்க்கிறார்.. இவர்களின் நிஜ முகம் இதுதான்..
பீட்டாவை இந்தியாவில் அனுமதித்து அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த திரு.எல்.கே. அத்வானி அவர்கள் பேசும் மிருகவதையை தடுப்பதற்கும் மிருகங்களின் நலனும் பாதுகாக்க பட பீட்டா துணை புரியுமென்றார்.. அப்போதே சில அமைப்புகளும் திராவிடர்கழகமும் இதை எதிர்த்தது.. பீட்டாவின் செயல் அதிகாரிகளாய் முழுக்க முழுக்க பார்பனர் நியமிக்கப்பட்டபோதே அச்சத்தை பதிவு செய்தது.. பல இனங்கள் வாழும் நாட்டில் ஒரே ஒரு இனம் மட்டும் நம்பி பீட்டாவின் செயல்பாடுகள் இருந்ததன.. மற்ற இனத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைக்க பீட்டாவை பயன்படுத்துயது ஆர்எஸ்எஸ்..
..
தமிழனின் உணர்வோடு இவர்கள் விளையாடியது வினையாகி போகுமென அறியாமல் போனார்கள்..
தமிழ்நாட்டில் தொடர்ந்து இவர்களின் வேலை எதுவும் எடுபடாமல் போனதன் விளைவால் நமது பண்பாட்டை சிதைக்க துணிந்து செயல்பட்டு மிருகவதையை காரணம்காட்டினார்கள்.. ஜல்லிக்கட்டல்ல இவர்கள் பிரச்சனை .. ஒரு இனத்தை அழிக்க அதன் கலாச்சாரத்தை சிதைத்திட வேண்டுமென்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இருந்தது.. ஜல்லிக்கட்டுக்குள் ஜாதி இருக்கிறது மதமிருக்கிறது என்றெல்லாம் காரணம் சொன்னார்கள்.. #ராவுத்தர் வீட்டிலிருந்தும் வாடிவாசலுக்கு காளைகள் வருமென்பதை மறந்து போனார்கள்..
..
திருமதி ராதா ராசா..போன்றவர்கள் திராவிட இனத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அது அவர்கள் இயல்பு.. அவர்களை புறக்கணித்து நாம் ஒன்றுப்பட்டால் நம்மை வீழ்த்த எவருமில்லை
புரிந்துக்கொள்ளுங்கள்..
நம் பலவீனம் பிரிந்துகிடப்பதே..
#சாதிமதத்தைகடந்து_ஒன்றுபடுவோம்
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment