Monday, January 30, 2017

பனை தமிழச்சி..

போராட்டம் செய்த மாணவர்களால் பெண் போலீசார் பாலியல் தொந்தரவிற்கு ஆளானார்கள் தமிழிசை.. நாகரீகமான மொழியில் பதில் சொல்லவேண்டுமென என்னை கட்டுபடுத்திக்கொள்கிறேன்.. சாமியார்கள் லீலைகளை பார்த்து பார்த்து பழகிபோனதால் அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திலேயே பலான படம் பார்க்கிறவர்கள் என்பதால் சிந்தனை அப்படியே இருக்கிறது.. .. மிக நாகரீகமாக நடந்துக்கொள்கிறவர்கள் நம் மாணவர்கள் இன்றைய இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.. போராட்டம் ஆரம்பம் முதலே பெண்கள் குழந்தைகள் என அதிகளவில் கலந்துக்கொண்டார்கள் விடியவிடிய மாணவிகளும் போராட்ட களத்தில் இருந்தார்கள்.. தமிழிசை சொல்வது போல அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.. எதையாவது சொல்லி பிழைக்கவேண்டி இருக்கிறதே இந்த #பனைதமிழச்சிக்கு என்பதை எண்ணும் போது வருத்தமுண்டு இலக்கியச்செல்வரின் #சிறந்தப்பிழை இவர்.. .. பாஜகவின் அஜந்தாவை நடப்பிலாக்க தமிழர்கள் மீதும் அவர்கள் வாழ்வியல்மீதும் கலாச்சார பண்பாட்டின் மீதும் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிற பாசிசம் அதற்கு தமிழர்களையே பயன்படுத்துகிற பழைய தந்திரத்தைதான் தொடர்ந்து செய்துவருகிறது.. அதில் சிக்கியவர்கள் நம்மை நம் கைக்கொண்டே கண்ணை குத்துகிறார்கள்.. .. பாஜக சங்பரிவார் ஆர்எஸ்எஸ்காரர்களின் காமகளியாட்டங்களை பார்த்து பார்த்து அதை நியாயபடுத்தும் தமிழசை போன்றவர்கள் இப்படிதான் பேசுவார்கள்... அவர்களின் மனம் எப்படியோ அப்படிதான் பார்வை இருக்கும்.. அதனால் அவரை குற்றம் சொல்லி பலனில்லை.. அவர்களுக்கு தெரிந்தவழி அதுமட்டும்.. தமிழிசையில் சுருதிபிழை இவர்.. .. #காமாலைகாரனுக்கு_காண்பதெல்லாம்_மஞ்சள்…… .. தோழர் ஆலஞ்சி....

No comments:

Post a Comment