Sunday, January 15, 2017

நூலகம்..

நூலகம்.. அறிவின் ஊற்றுக்கண்.. நூலகமில்லா ஊரில் குடியிருத்தல் பாவமென்று பாடியிக்கவேண்டும்.. வாசிப்பின் அருமை நம்மிடையே சிதைந்து போனது.. எங்களுரில் சிக்கந்தர் பாடசாலை இருந்தது சிறிய அளவே என்றாலும் எண்ணற்ற புத்தகங்களும் தினசரி நாளிதழ்களும் .. எனது எதிர்வீட்டு மச்சான் Jamal Mohammad Basheer Ahamed அவர்கள் இந்து நாளிதழை வருட சந்தாகட்டி வழங்கி வந்தார்.. நிறைய பேர் நாளிதழ்களை புத்தங்களையும் தந்துதவினார்கள்.. அது தொடர்ந்து பராமரிக்க முடியாமல் கரையான் செல்லரித்தது.. ஏன் இதை பதிவு செய்கிறேன் எனில் நூலகம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணராத சமூகமாகவே தமிழ் சமூகம் இருக்கிறது.. இந்தியாவில் அதிக வாசிப்பவர்களாக இருந்த தமிழர்கள் இன்று 14 வது இடத்தில் இருக்கிறார்கள்.. .. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் முதலில் அங்குள்ள நூலகத்தை கொளுத்து என்றான்.. நூலகம் ஒரு கலாச்சாரத்தின் பீடம்.. உலகிலேயே அறிவில் கலாச்சாரத்தில் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து விளங்கியவர் பாரசீகர்கள் அவர்களின் சிறந்தவிளங்க காரணமென்ன என்றாய்ந்தால் கல்விக்கு அவர்கள் தந்த முக்கியத்துவம்.. உலகிலேயே முதன்மையான நூலகத்தை அவர்கள்தான் நிறுவினார்கள்..ஆம் பக்தாத்தில் அவர்கள் நிறுவியதாக வரலாறு சொல்கிறது.. அதை தொடர்ந்து அலெக்ஸாண்டரியா என்ற பிரமாண்ட நூலகத்தை எகிப்த் நிறுவியது.. பாரசீகர்கள் பறந்துவிரிந்து தங்கள் ஆளுமையை கொண்டுவந்ததற்கு அவர்களின் அறிவே துணை செய்தது.. .. தனக்கு அறுவை சிகிச்சைக்கு நேரம் குறிக்கப்பட்டபோது கூட இன்னும் சிலபக்கங்கள் மீதமிருக்கிறது அதை வாசித்துவிட்டு வந்துவிடுகிறேன் என சொன்னார் எங்கள் ஆசான் அண்ணா.. உங்கள் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலைபார்த்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. அறிவாசான் பெரியார்.. ஏனெனில் ஒரு சமூகம் சிறந்து விளங்கவேண்டுமெனில் அது அறிவுடையோர் சமூகமாக இருத்தல் வேண்டும் அதற்கு அறிதல் மிக அவசியம்.. அறிதல் அறிவுகொண்டாயின் அதைவிட உலகில் வேறேதும் சிறந்ததில்லை.. மிகசிறந்த சமூகத்தை ஒரு நூலகம் தந்துவிடும் அதனால்தான் #லெனில் சொன்னான்.. மூன்றே மூன்று வார்த்தை பேசுகிறேன் படியுங்கள் படியுங்கள் படிக்கவையுங்கள்.. என்றான்.. .. ஆம் நம் கருத்தோடு மாறுபட்டவையாக இருந்தாலும் நம் கொள்கை கோட்பாட்டில் வேறுப்பட்டிருந்தாலும்.. எதை பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் படியுங்கள் .. அறிவில் தேடலை அது நின்றுவிட்டால் அந்த சமூகமே அழிவை தானாக தேடிக்கொண்டுவிடும்.. நிறைய எழுதலாம்.. .. பாரதிதாசன் வரிகளோடு முடிக்கிறேன்.. #கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment