Saturday, January 7, 2017
இரு நிகழ்வுகள்
இரு நிகழ்வுகள்..
ஸ்டாலின் பரிதி இளம்சுருதி சந்திப்பும்
சம்பத் சசிகலா சந்திப்பும்.
முதலில் இனோவாவை பற்றி பேசுவோம்.. நாஞ்சில் சம்பத் இவரது இலக்கிய கூட்டங்களை கேட்டிருக்கிறேன்
தமிழோடு இவரின் வார்த்தைஜாலம் கட்டிப்போடும்..
இவரின் அரசியல் கூட்டங்களில் ஏறக்குறைய காளிமுத்துவைதான் ஞாபகம் படுத்துவார்.. திமுகவிலிருந்து பிரிந்து வைகோவோடு போனதும் இவரது நாணயம் போய்விட்டது.. நா நயம் மட்டுமே இவரை ஜெயலலிதாவோடு சேர்த்தது.. அதோடு இவரது நாவன்மை கேலிப்பொருளாக கிண்டல் செய்யுமளவிற்கு வந்தது .. கடைசியில் மரியாதை இழந்து விலைமகளைப்போல்.. கேவலப்பட்டு நிற்கிறார்.. அவரின் சமீபத்திய உளறல்கள் அவரின் நம்பகதன்மை காட்டும்.. சசிகலா ஏற்க மறுப்பதாக சொல்லி சில மணிநேர இடைவெளியில் சின்னம்மாவின் புகழ்பாடும் இவரின் செயல் அரசியல் அயோக்கியதனம்..
..
இளம் சுருதி..
இவரைப்பற்றி சொல்லவேண்டுமெனில் கழக முன்னோடி இளம்வழுதியின் பேரன் இன்னும் புரிகிறமாதிரி சொல்லவேண்டுமெனில் பரிதி இளம்வழுதியின் மகன்.. சிறிய பிணக்கம் கொண்டு சட்டென்று ஒருநாள் பரிதி திமுகவிலிருந்து பிரிந்துசென்று ஜெயலலிதாவிற்கு பூங்கொத்து கொடுத்த போது கொஞ்சம் ஆடிப்போனேன்..காரணம் திமுகவின் துணை பொதுசெயலாளர் வரை உயர்ந்து வந்தவர் எழுப்பூரின் செல்லப்பிள்ளை.. இக்கட்டான சூழலில் கூட கலைஞரோடும் இருந்தவர்... ஏதோவோரு சுந்தரபிணக்கு பெரிய இடைவெளியை தந்து அதில் சிலர் குளிர்காய இயக்கத்தை விட்டு சென்றார் அந்த நிலையில் கூட தளபதியோடு கரம் கோர்த்து நின்றவர்
இளம்சுருதி.. ..
..
கொண்ட கொள்கையில் தன் தாத்தனைப்போல
உறுதியோடு இருந்தவர்.. இளைஞர் அணியில் பகுதி செயலராக பணியாற்றுகிறார்.. இவரைப்போன்றவர்கள் இனம்காணப்பட வேண்டும்.. நிச்சயமாக தளபதி இவரைப்போன்றவர்களை நம்பலாம்..
சம்பத் போன்ற அரசியல் பிழைகளை கட்சியில் சேர்க்காமல் தளபதி காட்டிய மிடுக்கு மிகவும் கவர்ந்தது.. அதேபோல் இளம்சுருதியோடு காட்டும் இணக்கமும்
சிறந்த தலைமையை பறைச்சாட்டுகிறது..
..
#கொள்கைஉறுதியும்_அரசியல்பிழையும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment