Wednesday, January 4, 2017

காலம் இட்ட கட்டளை..

The Leader.. தலைமை பதவி எளிதில் கிடைப்பதில்லை அப்படி கிடைக்குமெனில் அது அறிவார்ந்த கூட்டத்தின் தலைமை அல்ல.. வேறுயாருமில்லாயா என சிலரின் கேள்விகளில் நியாயம் இருப்பது போல் தோன்றும்.. ஆம்.. தலைவர் பதவிக்கு தகுதியான ஆட்கள் நிறைய பேரை கலைஞர் உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மையும் இதில் வெளிப்படும். இங்கே அடிமைகள் இல்லை திறமையானவர்கள் கூட்டமிது அதனால் இந்த கேள்வி எழுகிறது.. அதோடு இங்கே டவாலிகள் கலெக்டராக முடியாது.. .. ஒரு இயக்கத்தில் அல்லது போராட்ட களத்தில் நிறைய செயல்வீரர்கள் இருப்பார்கள் எல்லோருமே திறம்பட செயல்பட்டு எதிரியை நிலைக்குலைய செய்யும் ஆற்றல்படைத்தவர்கள்..வியூகம் அமைத்து திறம்பட செயல்படுவோர் எண்ணிக்கையில் அடங்காதோர் இயக்கத்தில் உண்டு.. தலைமை பதவிக்கு வர இங்கே எல்லோருக்கும் தகுதியும் திறமையும் உண்டு.. அன்பின் மிகுதியில் ஆளுமை திறனை கருத்தில் கொண்டும் ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைக்கு தேர்வு செய்யப்படவேண்டும் கால சூழலும் கருத்தில் கொண்டு எதை எப்போது எவரை கொண்டு செய்து முடிக்க முடியும் ஆய்ந்து அவரை தேர்வு செய்தல் வேண்டும்.. அய்யன் வள்ளுவன் சொன்னதைப்போல #இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்.. .. திமுக பொதுக்குழு தலையாட்டிக்கள் சபையல்ல.. மேசைதட்டி ஆராவராம் செய்யும் அடிமைகள் கூட்டமல்ல அறிவுடையோர் சபை.. இங்கே எல்லோரும் கேள்வி எழுப்பலாம் ,எதிர்கருத்தை தைரியமாக சொல்லலாம்.. செல்லப்பட்ட வரலாறுகள் உண்டு அதை சரியென்றால் ஏற்று திருத்தம் செய்யபட்ட சரித்திர நிகழ்வுகளும் உண்டு.. அதைத்து அதிகாரத்தையும் தலைவருக்கு வழங்கும் அதிகாரஅமைப்பு அது.. அதனால் தான் நீண்டநாட்களானது.. நிறைய பேரின் ஆவலை பூர்த்தி செய்ய திரு.ஸ்டாலினை செயல்தலைவராக தேர்வு செய்திட...ஆம்.. #செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். என்றான் வள்ளுவன்.. அதாவது.. செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.... அதைதான் பொதுக்குழு இப்போது செய்துமுடித்திருக்கிறது. .. தலைவர்கள் தானாக திடீரென்று உருவாவதில்லை.. காலம் தீர்மானிக்கும் இவனே சிறந்த தலைவன் என்று.. அப்படி காலம் காத்திருந்து தந்த தலைவனை மக்கள் இருகரம் தட்டி வரவேற்பர் .. எதிரிகளும் இவரே தலைமைக்கு தகுதியானவர் என்பர்..ஆம்.. எதிராளிகளும் எதிர்கருத்தை கொண்டோரும்.. கருத்து வேறுபாட்டால் நிற்போரும் தளபதி தலைவரானதை மகிழ்வோடு ஏற்கிறார்கள்.. பெரும்மகிழ்ச்சி எமக்கு.. .. திரு.ஸ்டாலின் காலத்தின் கட்டளை.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment