Thursday, January 26, 2017

குடியரசு..

#குடியரசு.... இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கரின் தினமாக கொண்டாடபடவேண்டும் இந்திய அரசியல் சாசனத்தை ஒழுங்குபடுத்தி வடிவமைத்து தந்தவர்.. சுதந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு வெணிசாமரம் வீசியவர்கள்.. அவனை அடிதொழுதவர்கள் அதிகார மையத்தை கைப்பற்றிய பிறகும் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க இந்த தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தார்.. ராமர்கதையை எழுத வால்மீகி தேவைப்பட்டதைப்போல.. .. இன்றைய தினம் பெருவாரியாக தமிழகமெங்கும் மக்கள் கலந்துக்கொள்ளாத குடியரசுதினமாக கழிந்துக்கொண்டிருக்கிறது.. சென்றவருடம் முகநூலில் தங்கள் ப்ரோபைலில் தேசிய கொடியை வரைந்தவர்களில் 90 விழுக்காடு மௌனமாய் கடந்துச்செல்கிறார்கள்.. குடிமக்களுக்கான அரசாக இல்லாமல் ஒருசில கார்ப்பரேட்களுக்கான அரசாகவும் அவர்களின் தேவைக்காக மக்களை பிழிந்தெடுக்கிற அரசாக அமைந்ததும்.. மத்திய அமைச்சர்கள் கூட மதசார்ப்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே குரல் கொடுப்பதும்..நாடெங்கும் குரங்குகையில் கிடைத்த பூமாலைப்போல திடீரென்று ஒரு இரவு கையில் உள்ள காசெல்லாம் செல்லாது என அறிவித்து நடுதெருவில் நாள்கணக்கில் நிற்கவைத்ததும். அமைதி வழி அறப்போராட்டத்தை தடிக்கொண்டு கலைத்து செயற்கையான ஒரு பதற்றத்தை உருவாக்கியதும் .. போராடினால் இதுதான் கிடைக்குமென.. காவலரே தீவைக்கிற காட்சிகளை கண்டு.. மக்கள் மனதில் மாறாக வடுவை தந்திருக்கிறது சிறிய பிள்ளைகளை கூட தீவிரவாதிகளை தாக்குவதைப்போலதாக்கி ரத்தம் சொட்டசொட்ட ஓட விட்டதும் தமிழர்களை இந்தியத்திலிருந்து சன்னமாய் அறுத்தெடுத்தது.. .. கோமாளிகளும் கூத்தாடிகளும் வீரவசனம் பேசவைத்து தேசபற்றை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட நிலை மிகபெரிய அவலமாய் திரும்பி தாக்குகிறது. இந்த குடியரசு தினம் தமிழர்கள் மனதில் ரணத்தை/கீறலை வரைந்திருக்கிறது. ஆட்சியாளர்கள் அதை சரிசெய்ய வேண்டும் சிறிய கீறல் என விட்டால் அது மிகபெரிய அழிவைதரும்.. அதிகாரமும் பலமும் அடக்குமுறையும் நீண்டநாள் நிலைத்திருந்ததாக வரலாற்றில் எங்குமில்லை..இந்தியா நாடல்ல துணைகண்டம் பல்வேறு இனத்தின் மொழியின் வேர்களால் நிற்கிறது சில வந்தேறிகளின் கலாச்சாரத்தை தொடர்ந்து திணிக்க முற்பட்டால் அது வீங்கிவெடிக்கிற நிலையை ஏற்படுத்தும்.. அண்ணல் அம்பேத்கர் அரசியல்சாசன சட்டத்தை எழுதிமுடித்துவிட்டு சொன்னார் என் கைகளை பிடித்துக்கொண்டு சிலர் எழுதினார்கள்.. இதை கொளுத்தவேண்டுமென்றால் முதல் ஆளாக நான்தான் கொளுத்துவேன் என்றார்.. ஒருசாரராருக்கு மட்டுமே வளைந்து கொடுக்கிற சட்டம் .. ஒற்றுமையை சிதைக்கும்.. .. கொஞ்சமேனும் மற்றவர்களும் வாழ வகைசெய்த சட்டவடிவை தந்த அண்ணல் அம்பத்கரை இந்நாளில் நினைவு கூர்வோம்.. .. குடிமக்களுக்கான அரசாய் #ஒருகுடியரசுவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment