Saturday, November 2, 2019

திமுக தலைமை..

மத்திய அரசு கல்விக் கொள்கையை அறிவப்பதற்கு முன்பே முந்திக்கொண்டு ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு "பொதுதேர்வு" அறிவித்திருபிபதன் மூலம் நடப்பது அதிமுக ஆட்சியல்ல பாஜக ஆட்சிதான் என்பது தெரிகிறது .. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ..
இப்போதாவது புரிந்ததே திரு.ஸ்டாலின் அவர்களே அரசியலில் சரியான நேரத்தில் மிகச்சரியாக காய்நகர்த்தல் அது சூழ்ச்சியெனினும் செய்திருக்க வேண்டும் .. நேர்மையற்றவர்கள் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருகிறார்கள் அந்த கயமைத்தனத்தை மௌனமாய் அங்கரீத்தது மிகப்பெரிய தவறு ..எதிரி எந்த வழியை கையாள்கிறானோ அதே வழியில் சென்று வீழ்த்துவது கூட அறம் தான் .. இந்திய அரசியல் ஜனநாயகம் பாதையிலிருந்து மெல்ல விலகும் போது நீதி நேர்மை பேசிக்கொண்டு காலம் கடத்தியதன் விளைவு ஒவ்வொன்றாய் இழக்கிறோம் .. வாய்பிருந்தது இந்த அரசை வீழ்த்த வீட்டுக்கனுப்ப ஆனால் நாம் தான் தேர்தலில் வெற்றிப் பெற்று மக்கள் விருப்பத்தோடு ஆட்சிக்கு வருவோமென காத்திருந்ததால் இருக்கும் வரை ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து விடவாமென முடிவுகட்டி ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் ..
குனிய சொன்னால் படுத்தே விடுகிறவனிடம் நெஞ்சை நிமர்த்த சொல்வதெல்லாம் வீண் ..
..
காலம் கடந்த ஞானோதயம் பலன் தராது இன்றைய நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ திமுகவும் காரணமாகி போனது ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் இருந்தும் இந்த எடப்பாடி அரசு கலைய/கலைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும் ..
இன்றை தேர்தல் அரசியலில் பகுதி கெட்டுவிட்டது 
அதிகாரமிருந்தால் தான் எதையுமே சாதிக்க முடியுமென்ற நிலை அதற்காக எந்த இழிவையும் சுமக்க தயாராக இருக்கிற கூட்டத்திடம் தமிழகம் சிக்கி நிற்கிறது ..திமுக தோழமைகள் நம்பிக்கைகுரியவர்களாகவோ நட்பிற்குரியவர்களாகவோ இல்லை மிக சாதூர்யமாக கையாள வேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு வந்திருக்கிறது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதை செடியாக வளரவிட்டதால் .. விஷசெடியை வேரோடு பிடுங்க வேண்டிய நிலை 
அதற்கான ஆயத்தத்தை செய்தே ஆகவேண்டும் 
..
பாசிசத்தின் பிடியில் தமிழகம் மெல்ல மெல்ல முகமிழக்கிறதோ என வினவ வேண்டியிருக்கிறது 
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வகுப்புகள் பள்ளிகளில் நடக்கிறதெல்லாம் அறியாமல் திமுக தலைமை இல்லை ஆனாலும் ஏன் இந்த மௌனம் .. இந்திய அரசியலில் ஜனநாயகம் கேலிகூத்தாக்கபடும் வேளையில் .. இந்திய நீதிமன்றங்கள் கள்ளமௌனம் காக்கின்றன தேர்தல் ஆணையம் நெறிதவறி வெகுநாட்களாகிவிட்டது இந்த சூழலில் தான் நாம் "நீதிநேர்மை " பேசிக்கொண்டிருக்கிறோம் .. சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வது கூட அறம் தான் ..
விழித்துக்கொள்ளாவிடில் தமிழகமும் தமிழ் சமூகமும் நம்மை மன்னிக்காது 
..
ஆலஞ்சியார்

Sunday, October 20, 2019

அறமிழந்த ஊடகங்கள்

இந்த அரசும் ஆட்சியாளர்களும் ஏன் ஊடகங்களும் அறமிழந்து செயல்படுவதை வெளிப்படையாகவே காணமுடிகிறது .. 
லக்னோவில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி அண்மையில் கொல்லப்பட்டார். 
இந்த பிரச்சனை குறித்து டிவி சேனல் ஒன்று விவாதம் நடத்தியது. இதில் கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரியும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலேஷ் திவாரி படுகொலை, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பேச்சு என பல்வேறு கோணங்களில் பேசினார் மிக தெளிவாக கமலேஷ் திவாரியின் தாயார் இந்த பிரச்சனையை ஏன் திரும்ப திரும்ப இந்து/முஸ்லிம் விவகாரமாக்க முயல்கிறீர்கள் அது ரொம்ப தப்பு என கூறினார்.. கடைசியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தன் எதிர்ப்பை பதிவு செய்தார் குசும் திவாரி அம்மையாரிடமிருந்த
அந்த அறம் செய்தியாளரிடத்தில் இல்லை

இந்த நடப்பை நாம் சாதாரண நிகழ்வாக கருத முடியாது ..திட்டமிட்டு இஸ்லாமிய குரோதத்தை வளர்த்தெடுக்க முயல்வது தெரிகிறது ..
நாட்டின் வளர்ச்சியை பற்றியோ 6 கோடி பேர் இரவில் பசியோடு தூங்க செல்கிறார்கள் என்ற ஆய்வறிக்கை பற்றியோ அரசு கவலைபட்டதாக தெரியவில்லை.. இளஞ்சிறார்கள் "குழந்தை தொழிலாளர்களாக" இருப்பதன் பின்னணியைப் பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை ..
ஆனால் "ஜெய்ராம்" சொல்லாமல் போனால் தேச விரோதி என்று நாடு முழுவதும் பரப்பபடுகிறது ..
..
இந்த நாட்டிற்கு கோவில்கள் தேவை இல்லை கல்விநிலையங்கள் தான் தேவை.. 13% விழுக்காடு ஆரம்ப கல்வியோடு நிறுத்தபடுவதைப்பற்றி ஏதேனும் திட்டமுண்டா இந்த அரசிடம் .. நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமாகி கொண்டிருக்கிறதென அறிந்த "பொருளாதார நிபுணர்கள்" சொல்லியும் கடந்த அரசின் திட்டங்களே காரணமென திசை திருப்புவதால் ஒரு பலனுமில்லை என டாக்டர் மன்மோகன் சிங் சொல்வதை கவனமாக இந்த அரசு செவிமடுக்க வேண்டும் .. முஸ்லிம் விரோத போக்கு மட்டுமே வாக்கு வங்கியாக மாற்ற முடியுமென மக்கள் மனதில் விஷத்தை மெல்ல ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் .. பண்டித ஜவகர்லால் நேரு .. அரசாங்கம் தவிர்த்து வேற பிற அமைப்புகள் ஆயுத பயிற்சி எடுப்பது ஆபத்தானதென்று சொன்னது இப்போது தான் புரிகிறது .. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆயுத பயிற்சியை சின்னஞ்சிறார்களுக்கு கூட அளிப்பது பேராபத்தில் முடியும் .. 
..
இந்த அரசு நிச்சயமாக மனித விரோத அரசாகதான் காண நேரிடுகிறது  ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே பயன் பெற,பலன் பெற, பிற சமூக மக்களிடையே பகையை உண்டாக்கி குளிர்காய்கிற பாசிசத்தின் பிடியில் நாடு .. ஜனநாயகத்தின் பிரதான தூணாக விளங்கவேண்டிய ஊடகங்கள் மக்களிடையே பகை உணர்வை ஊட்டுவதில் குறியாக இருக்கிறது.. நாட்டில் எத்தனையோ விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய  விரோத போக்கை கையிலெடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமென நம்புவதை புகழ்ச்சியோடு மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் "பெருந்தொண்டு " ஆற்றுகின்றன ஊடகங்கள் .. மிசா காலத்தில் கூட அஞ்சாத ஊடகவியலாளர்கள் கண்ட இந்தியா தான் இன்று கேடுகெட்ட அடிமைத்தனத்தில் ஊறிப்போனவர்களை ஊடகத்தில் காண முடிகிறது 
அறமிழந்தது நிற்கிறது ஜனநாயகத்தின் நான்காம் தூண்..
..
ஆலஞ்சியார்

Friday, October 18, 2019

முரசொலி நிலம் விவாதமாக்கியிருக்கிறார் ராமதாஸ் .. பஞ்சமி நிலம் அதை ஆக்ரமித்து முரசொலி கட்டிடம் உள்ளது .. சென்னை போன்ற பெருநகரங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை ஆனால் ஆக்ரமிப்புகள் நீர்வள பகுதிகள் ஏரிகள் என அதிவேகமாக நடந்தேறியது எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் தான் .. ஒரு குற்றசாட்டை சொல்கிறவன் யோக்கியனாக இருக்கவேண்டும் .. ஆனால் ராமதாஸ் போன்ற அயோக்கியர்களுக்கு 
அதற்கான தகுதி இல்லை ..
..
வன்னியர் அறக்கட்டளை சார்பில் கட்டபட்ட கல்லூரிக்கு தன் மனைவியின்
(சரஸ்வதி அம்மாள்) பெயரை வைத்தவர் 
அது கூட விளை நிலத்தில் அமைக்கபட்டதாக குற்றசாட்டு எழுந்தது அப்போது இதே ராமதாஸ் தான் அது பயிர்விளையும் நிலமென ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டால் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன் என "வீரவசனம் பேசினார் .. அப்போதைய திமுக பொருளாளர் ஆற்காட்டார் 
பதிவு எண் உள்பட வெளியிட்டு அந்த இடம் தற்போதைய நிலைவரை விளைநிலம் தான் என வெளியிட்டபோது இந்த ராமதாஸ் பேச்சையே காணோம்..  சில நாட்கள் கழித்து தனிப்பட்ட முறையில் ஆற்காட்டாரை "செவிடன்" என தாக்கி பேசினார் .. அதற்கு கொஞ்சமும் கோபபடாமல் ஆம் "மிசா"வில் கைதான போது அறைந்ததில் காது சவ்வு கிழிந்ததில் கேட்கும் திறன் குறைந்தது ..ஆனால் ஜெயலலிதா கைது செய்த போது மனைவியை விட்டு கெஞ்சியதை போல இல்லை ..மன்னிப்பு கேட்கும் பழக்கம் எமது இனத்திற்கே இல்லை காலில் விழுவதும் பெற்ற தாயை கூட அசிங்கபடுத்துவதும் ராமதாஸூக்கு வேண்டுமானால் இருக்கலாம் மானகெட்டு காலில் விழவில்லை என பதில் தந்தார் .. 
..
இப்போது கூட தளபதியார்  வழி வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான நிலம் என்பதை உறுதிபடுத்த ஆவண எண் உள்பட வெளியிட்டிருக்கிறார்..  பஞ்சமி நிலம்  என நிரூபித்தால் விலக தயார் என்று சொல்லியிருக்கிறார் .. எதையும்,ஆதாரத்தோடு வெளியிடுவது திமுகவினரின் செயல் ஆனால் இந்த மானங்கெட்ட ராமதாஸ் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை நமக்கென்று தரம் உள்ளது அரசியலில் தரங்கெட்ட அரசியலை வியாபாரமாக்கி சொந்த சமுதாய மக்களையே ஏலம் விடும் அயோக்கியத்தனத்தை கொஞ்சம் கூச்சமின்றி செய்து பிழைப்பு நடத்தும் மக்களால் புறக்கணிக்கபட்டவரோடு அரசியல் செய்ய தேவையில்லை .. அரசியல் ஓழுக்கமற்ற அறமற்ற பொய்யரோடு விவாதிப்பது கூட வீண்வேலை
..
தமிழக அரசியலில் இப்படி ஒருவரை நாடு சந்தித்ததில்லை ராமதாஸ் அரசியலை உற்று கவனித்தால் சுயநலம் மட்டுமே,மிஞ்சும் சாதிவெறியை இளைஞர்களிடத்தில் விதைத்து 
கலவர பூமியாக்கி குளிர்காய்கிறவர் தன் மகனுக்காக தன்னோடு இணைந்து செயலாற்றியவர்களை கூட கழுத்தறுக்க தயங்காதவர் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு வின் இறுதி காலம் மிக மோசமான இருந்ததும் 
அப்போலோவில் இருந்து உடலை பெற மூன்று லட்சம் வரை வீரவன்னியர் பேரவை செலவு செய்ததும் அப்போது பேசபட்டது தான் தன் மகனுக்கு இடைஞ்சலாக குரு இருந்துவிடுவாரோ என பயந்தவர் ராமதாஸ் .. மிக மிக கேவலமான அரசியலை செய்பவர் ராமதாஸ் அரசியலில் இருந்தே துடைத்தெறியபட வேண்டிய "குப்பை" திரு.ராமதாஸ் ..
..
ஆலஞ்சியார்

Monday, October 14, 2019

காந்தி

காந்தி எப்படி தற்கொலை செய்துக் கொண்டார்..? தவறாக அச்சடிக்கபட்டதாக கடந்து போக முடியாது கவனகுறைவென்றோ அதிகாரிகளின் அலட்சியமென்றோ திசை திருப்ப முயற்சிக்கலாம் திட்டமிட்டே பரப்பபடுகிறது கோட்சேவை "தேசதந்தை" என சில ஆர்எஸ்எஸ் எடுபிடிகள் சொன்னபோதே செவிட்டில் அறைந்து வழக்கு பதிவு செய்து தேசதுரோகம் என செய்திருந்தால் இன்று காந்தி "தற்கொலை" வரை வந்திருக்காது .. திட்டமிட்டு குறிப்பாக குழந்தைகளின் மனதில் காந்தியைப் பற்றி தவறான கருத்தை விதைக்க முயல்கிறார்கள் நாளை கோட்சேவை புனிதராக்கி பள்ளிக் குழந்தைகளின் மனதில் ஒரு நல்லெணெணத்தை விதைக்க முற்படலாம் .. பாசிசத்தின் திட்டமே வரலாற்றை திரித்து எழுதுவதுதான் இல்லாத ஒன்றை "புராணம்" வேதமென்ற பெயரில் எழுதி மக்களை பிரித்தாள்கிறவர்கள் இன்று இந்திய சுதந்திர வரலாற்றை அதை தொடர்ந்து இந்திய மண்ணின் ஒற்றுமையை சிதைத்து மாற்றி எழுத முயற்சிப்பதின் வெளிபாடுதான் காந்தி தற்கொலை .. விடுதலை போராட்டத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து பகிரங்க மன்னிப்பை எழுதிகொடுத்து சுதந்திரமாய் திரிந்தவர்கள் .. நாட்டை காட்டி கொடுத்தவர்கள் தேசபக்தர்களை போல வேசம்கட்டுகிறார்கள் .. தேசத்தின் விடுதலையில் ஆர்எஸ்எஸ் காரர்கள் யாராவது பங்கேற்றிருக்கிறார்களா என்ற தொடர்ந்து எழுப்பபட்டும் இதுவரை பதில்லை ..அடிமை இந்தியாவில் என்னை புதைக்க விரும்பவில்லை என்ற ஒருவரையாவது காட்டமுடியுமா தேசவிடுதலைக்காக தன் சொத்து முழுவதும் எழுதிக் கொடுத்த ஒரு ஆர்எஸ்எஸ்/பார்பனரையோ காட்டமுடியுமா .. இதெல்லாம் செய்தவர்கள் இன்று தேசதுரோகிகளாய் சித்தரிக்கபட்டதுதான் கொடுமை திட்டமிட்டு இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள்.. வருங்கால சந்ததிகளிடத்தில் "பொய்" செய்திகள் மிக நுணுக்கமாக கொண்டு சேர்த்து இந்திய வரலாற்றையே இந்துராஷ்ரீய வரலாறாக்க முயற்சிக்கிறார்கள் .. ஆனால் மக்கள் மனதில் "மகாத்மா" வாக நிறைந்து நிற்கிறார் காந்தி .. இது போன்ற ஈனச்செயல்களில் ஈடுபடுவோர்களை கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் இதன் பின்னில் யார் இருக்கிறார்களென கண்டறிந்து மக்கள் மன்றத்தின் இத்தகைய "போலிதேசியவாதிகளை" நிறுத்தவேண்டும் .. ஆர்எஸ்எஸ் இந்த நாட்டிற்கு தீங்கு.. .. குஜராத் அரசின் மீதும் பாடநூலில் இடம்பெற செய்த சக்திகளின் மீதும் கடும் நடவடிக்கை தேவை .. காந்தியார் மீது கடும் கருத்துவேறுபாடு இருந்த போதும் அவரை மதிக்க தவறியதில்லை.. காந்தியின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை ஆனால் காந்தி தேசதந்தை என்பதிலோ மகாத்மா என்பதிலோ மாற்று கருத்தே இல்லை நம் தேச தந்தையை கொன்ற கூட்டம் இன்று அதிகாரத்தில் இருப்பதால் இத்தகைய அலுச்சாட்டியங்கள் நடைபெறுகிறது ..இதை இப்படியே விட்டால் காந்தி தேசதுரோகி என்று கூட நாளை பேசபடுவார் .. காந்தி #மகாத்மா .. .. ஆலஞ்சியார்

Monday, October 7, 2019

பெண்கள் மீதான கட்டுபாடுகள்

சவுதி தன் பிடியை தளர்த்துகிறது இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து திசை திரும்புகிறது நிறைய கட்டுபாடுகள் தளர்த்தி பெண்களுக்கு விதிக்கபட்ட ஒழுங்குகளை திரும்ப பெற்றிருக்கிறது உடை விடயத்திலும் தனியாகவோ தன் கூட்டாளியுடனோ தங்க இனி சான்றிதழ் சரிபார்ப்பெல்லாம் தேவையில்லை முதலில் வெளிநாட்டவர்களுக்கு விதிகள் தளர்த்தபட்டு படிபடியாக உள்நாட்டினருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் திருத்தபடும் .. .. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல்களில் இனி வெளிநாட்டினர் திருமணம் ஆகாத ஆண் , பெண்கள் ஜோடியாக தங்கலாம் என்று சவுதி நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. குறிப்பாக 49 நாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அடிப்படையில் விஷேச சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு திருமணம் ஆனவர்கள் என்கிற ஆவணம் சமர்பிக்க தேவையில்லை சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டு பெண்கள் அவர்கள் விரும்பும் உடைகளை அணியலாம்.. .. சிலர் இஸ்லாமிய கோட்பாடுகளை தகர்க்குமென விமர்சிக்கிறார்கள் கூடவே ஒழுக்கம் கெடும் என்ற வார்த்தையை மறக்காமல் பதிவு செய்கிறார்கள் ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே என்பது பொதுவாக எல்லா சமூகத்திலும் இருக்கிறது வேலை செல்லும் பெண்களை விபச்சாரிகள் என்றழைத்த மத குருமார்கள் எல்லாம் இப்போது எதுவும் கதைப்பதில்லை .. பெண்கள் மீதான அடக்குமுறைகள் காலபோக்கில் செயலிழந்து நிற்கும் என்பதற்கு இந்த அறிவிப்பு சான்றாகும் ..இஸ்லாமிய நாடுகளில் எல்லா நாடுகளும் (சவுதியை தவிர) பெண்களுக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது அந்த பட்டியலில் சவுதியும் இணைகிறது அவ்வளவுதான் .. .. சில அடிப்படைவாதிகள் பிற்போக்கு சிந்தனையை தூக்கிபிடித்து முனக தொடங்கியிருக்கிறார்கள் ஷரியத் சட்டத்தில் சொல்லபட்டதை மீற யாருக்கும் உரிமையில்லை .. மதம் கூறும் ஒழுக்க பண்பாடுகள் நேர்வழிக்கானது என்கிறார்கள் மறுப்பதற்கில்லை அது ஒருவழிபாதையாக இருப்பதைதான் சரியில்லை என்கிறோம் .. பெண் தவறு செய்துவிடுவாள் அதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றெல்லாம் சில நண்பர்கள் பதிவிடுகிறார்கள் .. அதே தவறை ஆண் செய்கிற போது மௌனம் காக்கிறார்கள் ஒழுக்கம் இருபாலருக்கும் பொருந்தும் என்பதை மறந்து போகிறார்கள் ..கட்டுபாடுகள் இருந்த போதும் இவர்கள் சொல்கிற "தவறுகள்" நிகழாமல் இல்லை ஆனாலும் பெண்கள் மீதான "சுமத்தல்கள்" இவர்களின் கூப்பாடாகவே இருக்கிறது .. ஆணுக்கு பெண் அடிமை என்கிற மனநிலையை தூக்கியெறிந்துவிட்டு சிந்தித்தால் இவர்கள் இதுவரை சொல்லிவந்ததெல்லாம் அபத்தம் என புரியும் .. பெண்கள் எல்லாதுறைகளில் மிளிர்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கி கொள்கிற சூழல் அமைந்தாலே போதும் ஆண்களை விட தாங்கள் திறமையால் சாதித்து காட்டுவார்கள் .. .. ஆலஞ்சியார்

Thursday, October 3, 2019

கொடுங்கோன்மை

இந்து கிருஸ்துவ ஜைன,சீக்கிய அகதிகள் பயப்பட தேவையில்லை இஸ்லாமிய அகதிகள் மட்டுமே வெளியேற்றபடுவார்கள் என்று வெளிப்படையாக இன அழிப்பிற்கு வித்திட்டிருக்கிறார் அமித்ஷா ..என நடிகர் சித்தார்த்த் ட்விட் செய்திருக்கிறார்.. இதை எந்த கட்சிகளும் இதுவரை கண்டிக்கவில்லை மிக தெளிவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் இந்த அரசு செயல்படுமென அறிவித்திருக்கிறார் இஸ்லாம் அல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்பதே அதன் சுருக்கம் .. .. முதலில் இந்தியாவிற்கு நுழைந்த அகதிகளை வெளியேற்ற வேண்டுமென்ற கருத்தே சர்வதேச அரங்கில் இந்தியாவின் முகத்தை மாற்றிவிடும் இதுவரை இந்தியாவின் மீதான மதிப்பு இவரின் பேச்சால் தரந்தாழ்ந்துவிடும் .. பிற சமூக மதத்தை சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்ளும் போது இஸ்லாமிய அகதிகளை மட்டும் வெளியேற்றபடுவார்கள் என்பதிலிருந்தே எவ்வளவு வன்மத்தோடு இந்த ஆட்சியாளர்கள் இருப்பதை உணர்த்துகிறது .. ஆனால் வரலாறு வேறுவிதமாக பதிவு செய்திருப்பதை அறியாமல் பேசுகிறார் .. இஸ்லாத்தை அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி செயல்பட்டவர்கள் இருக்குமிடம் தெரியாது போனதாகதான் வரலாறு ..இதுபோன்ற செயல்களால் இஸ்லாத்தை நோக்கி நிறையபேர் வருவதற்கே வழிவகுக்கும் இதனால் எதிர்மறையாக இஸ்லாம் வளரும் .. .. இஸ்லாத்திற்கெதிராக குறிப்பிட்ட பிரிவினரை (பார்ப்பனர் தவிர்த்து) ஏவிவிடுவார்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு நம் இளைஞர்கள் சிறை வழக்கென சீரழிவார்கள்.. ஒரு சமுகத்தின் மீதான தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது மனித மாண்புகள் சிதைத்து மனிதநேயமற்ற கொடுங்கோலர்களின் ஆட்சியை போல நடத்துவது இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தும் "இந்துத்துவா" கொள்கை பெரும்பான்மை இந்துக்களாலேயே வெறுக்கபடுகிற ஒன்றாய் இருக்கிறது ..மதவெறிபிடித்த செயல்களை யாரும் ஏற்பதில்லை பாகிஸ்தானை காட்டி பயமுறுத்துதல் சமீபகாலமாக பலிக்காமல் போகிறதென்பதே உண்மை .. பாகிஸ்தானை பலம்பொருந்தியதாக சித்தரிப்பதால் "இந்துத்துவா " வெறியேற்ற பயன்படுமே தவிர இந்தியாவின் பலத்தை கொச்சைபடுத்துவதாகதான் அமையும்.. அமித்ஷாவின் இந்த பேச்சு இஸ்லாமிய மக்களுக்கெதிராக பிற சிறுபான்மையினரை ஒருங்கிணைக்க உதவும் ஆனால் அதே கத்தி பிறகு அவர்களையும் குத்தி குதரும் .. பாஜக ஆர்எஸ்எஸின் நோக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மதகலவரம் வரவேண்டும் என்பதே .. ஆனால் விழிப்புணர்வு பெற்ற கல்வியறிவு பெற்றவர்களாய் இந்திய மக்கள் இருக்கிறார்கள் ... இவர்களது எண்ணம் ஈடேறாது.. .. இன்னும் சிலகாலம் பாசிசத்தின் கையில் நாடு இருந்தால் துண்டாகும் .. மக்கள் தன்னெழுச்சியாய் இந்த அரசை அகற்ற முன்வருவார்கள் இந்திய பன்முகதன்மைக்கெதிராக ..ஒரு குறிப்பிட்ட இன மத மொழிக்கு எதிராக செயல்பட்டால் காலம் நல்ல படிப்பினையையே தரும் .. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. என்றான் வள்ளுவன் நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் #கொடுங்கோன்மை .. ஆலஞ்சியார்

Tuesday, October 1, 2019

தமிழ்க்குடி

கீழடி நாகரீகம் தமிழர் நாகரீகம் அல்ல பாரத நாகரீகம் பாண்டியராஜன் .. கீழடி தமிழ் கலாச்சாரமல்ல .. இந்து கலாச்சாரம் ..பொன்னர் .. ஒரே குரலில் ஒலிக்கிறார்கள் பின்னால் இருந்து இயக்குவதும் எழுதிகொடுத்த திரைகதையை வார்த்தை பிசகாமல் பேசுவதும் புரிகிறது .. அதிமுக அமைச்சர்களுக்கோ அல்லது அதிமுக தலைவர்களுக்கு இப்படி பேசவராது ஆனால் மாபா.பாண்டியராஜன் பேசுகிறாரென்றால் அவர் யார் எப்படி அதிமுகவிற்கு வந்தார் அவரால் இவ்வளவு சீக்கிரம் அமைச்சர் பதவியை அடைய முடிந்ததென்றால் அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது .. .. இந்து /பாரத நாகரீகம் என்ற சொல்லே தவறு அப்படியெனில் இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி இருந்திருக்கவேண்டும் அது தமிழாக இருந்திருக்கவேண்டும் இந்து நாகரீகமெனில் எந்தவொரு அடையாளமாவது இருந்திருக்கும் கோவில்களோ வழிபாட்டுமுறைகளோ அதற்காக சுவடுகளோ இருந்திருக்கும்.. எதுவுமே கிடைக்காத போது எங்கே தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் பண்பாடு இந்திய கலாச்சாரத்தை சேதபடுத்திவிடும் அல்லது இதுவரை கட்டிவைத்த பண்பாட்டு பொய்களெல்லாம் உண்மையில்லை என்றாகிவிடும் என அஞ்சி சில விசுவாசமான அடிமைகளை கொண்டு கூர்தீட்டுகிறார்கள் .. .. தமிழன் தொன்மையானவன் என்ற உண்மை அவர்களை சுட்டெரிக்கிறது ஆரிய கலாச்சாரத்தை இந்து கலாச்சாரமாக மாற்றி அதுவே இந்திய கலாச்சாரமென நம்பவைக்க சூழல் அமைந்திருக்க வேளையில் அதை சுக்குநூறாக்கியது கீழடி அகழ்வாய்வு முடிவுகள் இதுவரை கட்டிவைத்தது தகர்ந்ததால் வேறு வழியின்றி கீழடிக்கு மத சாயம் பூசி .. பாரத கலாச்சாரமென பரப்ப முயல்கிறார்கள் மொத்தத்தில் அவர்களின் பொய் புராணங்களும் நம்பிக்கை என்ற பெயரில் நம்பவைத்த மூடங்களும் தகர்ந்து தமிழர்களின் வாழ்வியல் மிக தெளிவாக மதங்களற்ற.. சாதியற்ற பெரும் சமூகமாய் வாழ்ந்த வரலாறு உலகுக்கு உணர்த்தியிருக்கும் வணிகத்திலும் நீர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கிய தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது ஒவ்வொரு தமிழனும் மதம் கடந்து சாதி மறந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டும் ஆம் உன் வரலாறு இவ்வுலகின் தொண்மையானதென்ற உண்மை நிரூபிக்கபட்டிருக்கிறது .. ஏனோ தமிழர்கள் மௌனமாய் இருக்கிறார்கள் .. பிரதமரின் கனியன் பூங்கன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பெருமை பேசுகிறார் தமிழை ஆட்சிமொழியாக அறிவித்து தமிழை பெருமைபடுத்துங்கள் என திமுக தலைவர் திரு.தளபதி.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார் ..இது தமிழர்களின் உள்ளத்தின் எழும் ஆசை இது ஒட்டுமொத்த கோரிக்கை ..இதை மத்திய அரசு சாதி மதமற்ற தமிழ் பெருங்குடியை வரலாறு உணர்த்தும் உண்மையை தொல்பொருள் ஆய்வு தரும் சேதியை உலகமே வியந்து நிற்கும் தமிழனின் ஆற்றலை அறிவை ஏற்று மரியாதை செய்திட வேண்டும்.. தமிழை ஆட்சி மொழியாக்கி வரலாறுபடைக்கவேண்டும்.. .. தமிழன் மூத்த பெருங்குடி.. .. ஆலஞ்சியார்

Sunday, September 29, 2019

கலைஞர்

கலைஞர் தமிழரில்லை என்று சிலர் பேசுகிறார்கள் பலமுறை சொன்னதுதான் 1951 ல் அரசு சாதி குறித்த கெஜட் வெளியிட்டது ராகவாச்சாரி தொகுத்து வந்ததில் "சின்னமேளம் "பிரிவினர் தமிழ் மரபினர் என்றும்.. அவர்கள் பெருமளவில் கீழிதஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என பதிவாகியிருக்கிறது .. உண்மை இதுதான் .. பெரிய மேளம் பிரிவினர் தான் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் இசைவேளாளரில் பெரிய மேளத்தின் ஆதிக்கமிருந்தது.. இன்னும் சொல்லபோனால் அவர்கள் தாயின் பெயரை தான் தங்கள் இன்ஷியலாக வைத்துக்கொள்வார்கள் .. ஆனால் சின்னமேளம் பிரிவினர் தந்தையின் பெயரை தான் இன்ஷியலாக வைத்துக்கொள்வர் .. முத்துவேலர் கருணாநிதி இதெற்கெல்லாம் பதில் சொல்லும் .. தெலுங்கு கீர்த்தனைகளை பாடி கோவிலில் சேவகம் செய்வதுதென்பது கட்டாயமானதால் தெலுங்கில் பாடினார்கள் சின்னமேளம் பிரிவினர் பெரிய சபாக்களில் கோவில் திருவிழாக்களிலோ பாடமுடியாது அதை "பெரியமேளம்" பிரிவினரே ஆதிக்கம் செலுத்தியதாக ராகவாச்சாரி சொல்கிறார் அவர்களுக்கு உறுதுணையாக பக்க வாத்தியங்களை இசைத்ததாக குறிப்பிடுகிறார் .. கலைஞரை புறக்கணித்து தமிழ் தேசியம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் நண்பர் தமிழ் மறவன் மொழியில் சொல்லவேண்டுமெனில் திருட்டு அரசியல் .. கலைஞரைப்போல தமிழுக்கு தொண்டாற்றிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை வாழும் வரை தமிழை மூச்சாக கொண்ட மாபெரும் ஆளுமையை இழிவுபடுத்தயெண்ணி தங்களின் தெளிவின்மையை காட்டுகிறார்கள் .. கலைஞரை தமிழரில்லை என சொல்லும் அறிவற்றவர்கள் பார்பனீயத்திற்கு ஒத்தூதுவதைதான் பார்க்கலாம் இப்போது கூட கீழடி ஆய்வில் முடிவுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் பெ.மணியரசன் திராவிட நாகரீகம் என்று சொல்வதற்கான எந்தவொரு இலக்கிய ஆதாரமும் இல்லை என்கிறார் . தமிழ்..தெலுங்கு..மலையாளம் ..கன்னடம் ஆகிய மூன்றும் தமிழ் மொழிதான். ஆனாலும் தமிழ் தேசியமும் , திராவிடமும் தொடர்ந்து மோதல் போக்கை கையாளுகிறது என்பது தான் உண்மையாகும்.. தந்தை பெரியார் தெலுங்கில் மலையாளத்தில் கலந்துள்ள சமஸ்கிருத சொல்லை நீக்கிவிட்டால் அது தமிழாகதான் இருக்கும் என்றார் ஆம் தமிழின் கிளை மொழிகள் வட்டாரவழக்கில் தோன்றியவை.. அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தமிழரின் அளவுகோலை எதில் கணக்கிடுகிறார்கள் சாதியை வைத்து தானே தவிர வேறெதும் அவர்களிடத்தில் இல்லை .. ஆனால் தமிழரின் வரலாறு மதத்திலோ ஜாதி பிரிவிலோ இல்லை அதற்கான எந்த ஆதாரமும் சங்கநூல்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ தொல்பொருள் ஆய்விலோ கிடைக்கவில்லை இயற்கையாய் வாழ்ந்தவன் இயற்கையை வணங்கி நின்றவன் சாதி மதம் அவனிடத்தில் ஆரிய வரவிற்கு பிறகே வந்தது .. அதோடு கல்வி மறுக்கபட்டதும் தீண்டாமை தீண்டியதும் கலாச்சாரம் சிதைக்கபட்டதும் வரலாற்றை திரித்தெழுதியதும் ஆரிய வருகை பிறகுதான் என்ற உண்மையை உணராமல் பேசுகிறார்கள்.. .. கலைஞரை மறுத்த தமிழின் பெருமை தமிழனின் வரலாறென்பது மடத்தனம் இந்த அரைகுறைகள் எதற்கோ ஆசைபட்டு அல்லது பயந்து உளறுவதை கணக்கில் கொள்ள தேவையில்லை.. .. #கலைஞர்_செந்தமிழ் .. ஆலஞ்சியார்

Monday, September 23, 2019

அறிவிலிகள்

கே.டி.ராஜேந்திர பாலாஜி.. உண்மையிலேயே எப்படி இவரை மந்திரியாக்கினார்களென தெரியவில்லை தமிழனை முட்டாளாக சித்தரிக்கவேண்டும் என்பதற்காக தமிழனுக்கு அறிவில்லை இவ்வளவுதான் தமிழனின் "தரம்" என பறைசாற்ற வேண்டுமென்று இவரை கொண்டுவந்ததாகதான் எண்ணுகிறேன் .. நான் அப்பலோவில் இருந்தபோது அம்மா கசாயம் போட்டு கொடுத்தனுப்பியதாக சொன்னபோது கூட ஜெயலலிதாவின் "பெருமை" சொல்லவேண்டுமென்ற ஆசையில் அடித்துவிடுகிறாரென்று என்றுதான் நினைத்தோம் மோடி எங்கள் டாடி என்ற போது பயத்தில் சொல்லி வைக்கிறார் பாவம் என்றிருந்தோம் ‍‍ ராகுலுக்கு தாய்மாமன் மடியில் தான் காது குத்தியிருப்பாங்க எனக்கு என் தாய்மாமன் மடியில் தான் காது குத்தினார்கள் என்ற போது அறியாமையில் உளறல் என்றிருந்தும் நகைச்சுவையாக கடந்துபோனோம் நெறியாளர் வாய்பொத்தி நக்கலாய் சிரிக்கிறார் அமைச்சரும் அதுபுரியாமல் ..? ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டபோது பச்சை அறிக்கை தருகிறோம் .. வெள்ளை அறிக்கை என்றால் என்ன ..? வெளிப்படையான அறிக்கை என்றதும் நான் பச்சையாக சொல்ல சொல்கிறேன் என்று தன் அறிவிலித்தனத்தை கண்டு நாடோ சிரிக்கிறது.. இவரின் அரசியல் மேடை பேச்சும் நாகரீகமற்றதாக ஒருமையில் விளித்தே பேசும்தன்மை அவரின் தரத்தை பறைசாற்றும்.. .. இவரென்றில்லை ஒட்டுமொத்த அதிமுக கூடாரமும் அடிமைகளையை பொறுக்கி உருவாக்கியது கொள்கையே அடிப்படை சித்தாந்ததமோ தெளிவான அரசியல் புரிதலோ அற்ற கட்சி ..இதில் கவர்ச்சியை மூலதனமாக கொண்டு திமுகவை பிளவுபடுத்த கருணாநிதி எனும் ஆளுமையை சிறுமைபடுத்த ஆரம்பிக்கபட்டு கடைசியில் இவரை போன்ற அறிவிலிகளால் அசிங்கபட்டுநிற்கிறது. ஊடகங்களுக்கோ கொண்டாட்டம் இவரை வைத்து அதிமுக எனும் "இமேஜை" கண்ணாபின்னாவென சிதைக்கிறார்கள் நோக்கம் இதுதான் பார்பனர்களை புத்திசாலிகளென நம்பவைக்க இவர்கள் போன்ற அரைகுறைகளை பெரிதுபடுத்தினால் போதும் என்றெண்ணுகிறார்கள் .. அதுதான் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை திறம்பட செய்கிறார்கள் அதை உணராமல் அடிமைகள் உளறிக்கொட்டுவதுதான் கொடுமை .. அதிமுக நிறுவனரே தன் ரசிகர்களை பாதுகாப்புகாக கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர்தான் .. அன்றைக்கு பார்பனர்களின் அரசியல் குரு சோ தன் துக்ளக் பத்திரிக்கையில் இரண்டு சிறிய பெரிய அளவிளான கத்தியை காட்டி அமைச்சர் திருநாவுகரசரிடம் எதை வைத்துக் கொள்ள சொன்னாரென கேட்டதெல்லாம் வரலாறு இவ்வளவுதான் இவர்களின் அரசியல் .. தனித்திறமையோ அரசியல் புரிதலோ கொள்கையோ நாட்டின் மீதும் நாட்டுமக்கள் மீதும் நலன்சார்ந்த அக்கறையோ இருந்ததில்லை எந்தவொரு தொலைநோக்கு திட்டமும் வகுத்ததில்லை/ செயல்படுத்தியதில்லை சமூகநீதியை நிலைநாட்டியதில்லை .. கவர்ச்சியை மட்டுமே நம்பி அவர் விதைத்தெல்லாம் சொத்தையாய் நிற்கிறது இவர்களிடத்தில் வேறெதை எதிரிபார்க்கமுடியும்.. .. ஆலஞ்சியார்

Saturday, September 21, 2019

கீழடி

#கீழடி.. .. கீழடி சொல்லும் சேதி இதுதான் தமிழன் எந்த மதங்களையும் கடவுள்களையும் தூக்கி சுமக்கவில்லை.. 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வாழ்வியலுக்கு சொந்தகாரன் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியதும் தெரிகிறது .. தமிழன் வரலாறு மிக தொன்மைவாய்ந்தது அவன் பேசிய மொழியே முதல்மொழியாக இருக்ககூடும் மொழி வழக்கம் வருவதற்கு முன்பு சைகை ஒலியெழுப்பல் சில நூற்றாண்டு பின்னோட்டு இருந்திக்கவேண்டும் கீழடியில் வெளிவரும் உண்மை இந்திய கலாச்சாரம் இந்து கலாச்சாரமென்பதென்லாம் பொய் என்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழனின் வரலாறு என்பது "புராணங்களை" போல கட்டிசமைத்ததல்ல என்பது தெளிவாகிறது .. .. கீழடி மற்றொரு விடயத்தை நமக்கு சொல்கிறது இந்திய துணைகண்டத்தில் முதல் நாகரீக வாழ்வை வாழ்ந்தவன் என்பதும் ஆரிய வரவிற்கு முன்பே செமையா வாழ்ந்தவன் என்பது சாதி பேதம் வர்ணகோட்பாடு மதம் என எதுவுமில்லாத இயற்கையை போற்றி வாழ்ந்ததும் தெளிவாகிறது .. கீழடி சொல்லும் மற்றொரு சேதி திராவிட சித்தாந்தம் சொல்லும் சாதி மதம் எல்லாம் கட்டுகதைகள் மனிதனை பிரித்து தங்களை முன்னிலை படுத்த ஆரியர்கள் செய்த சதி என்பதும் புலனாகும் ..எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள் சதுரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.. மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.. மதம் சார்ந்து கடவுள் சிலைகளோ குறியீடுகளோ கிடைக்கவில்லை .. இதிலிருந்தே தமிழ்குடியின் தொன்மை விளங்கும் மதம் சார்ந்தில்லை என்பதும் புரியும்.. .. இந்த மாதம் 30ந்தேதி ஐந்தாம் அகழாய்வு நிறைவு பெறுகிறது.. இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம் வேகவேகமாக ஆய்வுபணிகளை முடிக்க நினைக்கிறது அரசு தமிழனின் பெருமையை யாராலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ஒருவிடயத்தை சொல்கிறார் நாம் 10% விழுக்காடு தான் ஆய்வு செய்திருக்கிறேன் 110 ஏக்கரில் 10 ஏக்கர்தான் அதுவும் 10 அடி தான் ஆய்வு செய்திருக்கும் இன்னும் ஆழபடுத்தினால் இன்னும் நிறைய கிடைக்கலாம் என்கிறார் ஆம் இன்னும் தமிழர்களின் நாகரீக வரலாற்றைப்பற்றிய தரவுகள் கிடைக்கும் அரசு தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும் .. .. #கீழடி_எமது_தாய்மடி .. .. ஆலஞ்சியார்

Friday, September 20, 2019

திமுக..

திமுக போராட்ட அறிவிப்பிற்கு பின் அமித்ஷாவே விளக்கமளிக்க நேர்ந்ததை மறைக்க திமுகவின் மீதும் தலைவர் தளபதி மீதும் பயத்தின் காரணமாக பின்மாறியதாக பிரச்சாரம் செய்கின்றன .. நாட்டின் உள்துறை அமைச்சர் பயத்தின் காரணமாக விளக்கம் தந்ததாக ஏன் விவாதம் நடத்தவில்லை ஊடகங்களில் வலதுசாரிகள் என்ற போர்வையில் பாஜக ஆதரவு "நடுநிலைகள்" திமுக பயந்து நடுங்கியதாக உளறுகின்றன வேறெந்த கட்சியை சொல்லியிருந்தாலாவது நம்புவார்கள் .. போராட்டம் என்றாலே மஞ்சள்பையில் சட்டை வேட்டியை எடுத்துக்கொண்டு தயாராக செல்கிற கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டதாக சொல்வது நகைப்பிற்குரியது .. .. மிசாவிற்கு அஞ்சாதவர் ..அடுக்குமுறை உச்சத்தில் இருந்தபோதே கொஞ்சமும் நடுக்கமின்றி இருந்தவர் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய போது வருமானவரித்துறை ரெய்டு வந்தபோது நடைபயிற்சி சென்றிருந்த தலைவர் வீடுவந்ததும் உதயநிதியை அழைத்துக்கொண்டு வரித்துறை அலுவலகம் சென்று ‌ HAMMER வாகனத்தை வெளியில் நிறுத்தியிருக்கிறேன் .. நான் இல்லாதபோது வீட்டிற்கு அதிகாரிகள் வந்ததாக சொன்னார்கள் உங்கள் விசாரணை முடிந்து வாகனத்தை கொண்டுவந்தால் போதும் என்று நெஞ்சுயர்த்தி சொன்னவர் .. பயமென்பது எங்கள் அகராதிலேயே இல்லையென அறியாதவர்கள் இல்லை ஆனாலும் இவர்கள் நோக்கம் அமித்ஷாவின் முகம் கருத்துப்போனதை அறியாமல் செய்யவேண்டுமென்பதே.. .. திமுகவின் மீது வீண்பழியை சுமத்தவதென்பது தொடர்ந்து பாசிசவாதிகளால் அவர்கள் அடிமைகளால் செய்துவருவதுதான் எம்ஜிஆர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து குற்றசாட்டுகளும் பழிகளையும் கண்டுவருகிறோம் ஒவ்வொன்று மீண்டு பழி துடைத்து "தங்கமாய்" மிளிர்கிறோம்,.. இதோ இப்போது ராமதாஸ் திமுக மீது கொலைப்பழி சுமத்தி அரசியல் செய்கிறார் குருவின் குடும்பத்தாரிடம் கேட்டால் இவரின் நிஜம் தெரியும் .. தன் மகனுக்காக அரசியல் எந்தநிலைக்கும் தாழ்ந்து சுயமரியாதை இழந்து நிற்கும் அவலநிலையிலும் தற்போதைய "எஜமானுக்காக " வாலாட்டுகிறார்.. .. நிறைய பார்த்தாயிற்று வீண்பழிகள் ஊழல்குற்றசாட்டுகள் மிரட்டல்கள் எல்லாவற்றையும் நீதிமன்றம் மூலம் வென்று இதோடு முடிந்தது திமுக சகாப்தம் என்றவர்களுக்கு எழுந்துநின்று துணிவிருக்கிறதா என கேட்கும் ஆற்றல் எமது இயக்கத்திற்கும் தலைவர்களுக்கு உண்டு .. பகுத்தறிவு வழியில் அறிவின் துணைக்கொண்டு ஆற்றல் மிகு தலைமையில் இந்த இயக்கம் செயல்படும் .. சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுவதில்லை "யாம்" தமிழர்களின் தேவை ஆம் தமிழ் மண்ணின் தமிழர்களின் கவசம் திமுக .. ஆலஞ்சியார்

Wednesday, September 11, 2019

எடப்பாடி

திமுக தடுப்பணைகளை கட்டியதுண்டா என சேக்கிழார் புகழ் எடப்பாடி கேள்வி கேட்கிறார் .. ஊர்பெயரை கூட உச்சரிக்க தெரியாமல் ஊர்ச்சுற்றி வந்தவர் .. அறியாமை தவறில்லை அறிந்துக்கொள்ள முயற்சி செய்யாமை தான் தவறு .. ஒரு பேட்டியில் அண்ணாவிற்கு பிறகு நான் தான் அதிக புத்தங்களை படித்தவன் என்று சொன்னவர் இந்த எடப்பாடி.. உண்மையில் கேவலமாக இருக்கிறது முட்டாள்கள் கூட்டத்திடம் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறோம்.. ஒட்டுமொத்த கூட்டமும் மடையர்களாக இருந்தால் என்ன செய்வது வெள்ளை அறிக்கை கேட்டால் மஞ்சள் அறிக்கை கூட தருவோம் என அறிவிலி ஒன்று உளறுகிறது .. எதற்காக வெளிநாடு பயணமென்று அவருக்காவது தெரியுமா என்றால் இல்லை .. .. தலித் பிணம் எடுத்துச்செல்ல தடுக்கபட்டு வேலூர் பாலத்தில் கீழிறக்கபட்ட சம்பவத்தை தாமாக முன் வந்து உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ததது .. அந்த வழக்கில் தமிழக அரசு தலித்களுக்கு தனி சுடுகாடு ஏற்படுத்தபடுமென அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது .. இந்த கேடுகெட்டவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும் .. எதை செய்கிறோம் எதை சொல்கிறோமென்ற அறிவுகூட இல்லை கடும்கண்டனத்தை பதிவு செய்வோம் .. .. அரசியலில் கொஞ்சம் கூட தெளிவோ அறிவோ இல்லாதவர்கள் முன்பிருந்த ஆட்சியாளர்கள் செய்த நலத்திட்டங்கள் மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தபட்ட விபரங்களை அரசு அதிகாரியிடம் கேட்டு அறிக்கையோ பேட்டியோ தரலாம் கலைஞர் ஆட்சியில் 42 தடுப்பணைகள் கட்டபட்டிருக்கிறது அதுமட்டுமல்ல நீர்வளம் பற்றிய அறிவும் தெளிவும் நீர்மேலாண்மை பற்றிய அனுபவமும் தமிழக ஆட்சியாளர்களிடையே கலைஞரைப்போல தெளிவும் ஞானமும் வேறு எவருக்குமிருந்ததில்லை என்பதுதான் உண்மை .. எதையாவது சொல்லி வைப்போம் ஊடகங்கள் கேள்வி கேட்கவா போகிறதென்று நினைக்கிறார் எடப்பாடி .. உண்மையில் தமிழகம் கண்ட கேடுகெட்ட ஆட்சி துளி கூட அரசியல் தெளிவற்ற, அறமற்றவர்களிடம் சிக்கி சீரழிகிறது கால சக்கரம் சுழலும் போது எழவே முடியாதவாறு புதைந்து போவார்கள் .. தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள் இந்த கோமாளிகள் .. .. சிரிப்பாய் சிரிக்கிறது .. .. ஆலஞ்சியார்

Tuesday, September 10, 2019

திராவிடமே தேவை

பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவின் கண்ணன் கோபிநாத்,தமிழ் நாட்டின் சசிகாந்த் செந்தில்,அருணாச்சல பிரதேச கோஷ் மிட்டல்,நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்ங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும். ஐ ஏ எஸ் அதிகாரிகள் .. இந்த பட்டியல் நீள கூடும் அரசுதுறையில் அதிகாரமிக்க பதவிகளில் மூன்று விழுக்காடு அத்துமீறி மூக்கை நுழைப்பதும் அதிகார மையம் நாக்பூரை சுற்றி இயங்குவதால் மீறபடுகிற மரபுகள் சட்டங்கள் எல்லாம் மநுவின் பார்வையில் சரியாகும் என்பதால் நேர்மையான அதிகாரிகள் விலக தொடங்கியிருக்கிறார்கள் .. .. நீதிமன்ற செயல்பாடுகளில் பாசிசம் அத்துமீறி நீதியை வளைத்தொடிக்கிறது .. மிரட்டுகிறது தொடர் இடைஞ்சலை தந்து தானாகவே பதவி விலக வைப்பதன் மூலம் தங்கள் இனத்தவர் அல்லது தங்களுக்கு வேண்டபட்டவர் ,தலையாட்டுகிற பொம்மைகளை கொண்டு நிரப்பப்படலாம் .. உயர்நீதிமன்ற நீதிபதியே தாமாக பதவி விலகும் அவலம் .. எத்தகைய மனஅழுத்தம் வெறுப்பு பயம் இருந்திருந்தால் விலகி இருப்பார் என்பது புரிகிறது .. முற்போக்காளர்கள் ,துறைசார்ந்த வல்லுநர்கள்,மண்ணை நேசிக்கிற மனிதநேயமிக்கவர்கள், வேட்டையாட படுவது இந்த ஆட்சியின் அவலத்தை படம்பிடித்துகாட்டுகிறது .. .. 36 வது நாளாக கஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை தந்தை மகனை பார்க்க மகளை பெற்றோரை பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டியிருக்கிறது .. ஜனநாயகம் கொடூரம் .. மிருகபலத்தோடு ஆட்சியாளர்கள் செயல்படும்போது ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கபடுவது இயல்பு ..மிக சிறந்த ஜனநாயகவாதிகள் மட்டுமே பொறுப்புணர்ந்து செயல்படுவர் அதை பாசிசத்திடம் எதிர்ப்பார்க்கமுடியாது .. பொருளாதார மந்தநிலைக்கு ப.சி யை காரணம் காட்டி ஒளியலாமென்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் .. ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு OLA uber நிறுவனம் வந்ததுதான் காரணம் என்ற அறிவார்ந்த நிதியமைச்சரை பெற்றது நமது பாக்கியம் .. .. இன்னும் நிறைய சோதனைகள் வரும்.. அதற்குள் நமக்கு பழகிவிடும் சொற்ப பணத்திற்கு வாக்கை விற்று யாராண்டால் என்ன என்று நாம் கடந்து போவோம் .. நாளைய தலைமுறைக்கு மண்ணை கூட நஞ்சாக்கிவிட்டு நமக்கென்ன என்று இருப்போம்.. வாக்குபதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் பாசிசபிடியில் .. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் .. மக்களே இந்த ஜனநாயக கேடுகளை கண்டு சிவந்தெழ வேண்டும் ஜனநாயகத்தின் வேர்களில் இன்னமும் ஈரமிருக்கிறது .. இந்த நாட்டிற்கு பெரியாரிய மொழியே தேவை .. அதுமட்டுமே சரியான நீதியை சமநீதியை சமூகநீதியை தரும்.. ஒருங்கிணைந்த இந்தியாவின் இன்றைய தேவை பெரியார் .. திராவிட சித்தாந்தம் அதுவே ஒருமுகபடுத்தும் உயர்விற்கு வழிவகுக்கும் ஏற்றதாழ்வுகளை களையும் சுயமரியாதையை கற்பிக்கும் .. .. ஆலஞ்சியார்

Friday, September 6, 2019

மதம் தவிர்ப்போம்

இந்த படம் நிறைய கதைக்கிறது .. நம்பிக்கை பயம் தெய்வபக்தி சாஸ்திரம் அதெல்லாம் ஒரு இழவுமில்லை .. கொண்டாடி தீர்க்க ஒரு பண்டிகை அவ்வளவுதான் .. இந்த பண்டிகை என்றில்லை எல்லா மத விழாக்களும் பண்டிகைகளும் மூடத்தனத்தில் என்பதை மக்கள் அறிவார்கள் ஆனாலும் கொண்டாட ஒரு விழா அவ்வளவுதான் ஆனால் இதை வைத்து மதவெறியர்களும் மதத்தை வைத்து பிழைப்போரும் அரசியல்வாதிகளும் மதத்தின் பெயரில் கலகமூட்டுவோரும் தங்கள் நிலைநிறுப்பை தக்கவைக்க மக்களிடையே மதத்தின் மீதான பார்வையை கூர் தீட்டுகிறார்கள் .. .. தனிமனித வாழ்வில் பண்டிகைகள் மகிழ்ச்சி தருவதை விடுத்து பொருளாதார ரீதியாகவும் மதத்தின் பெயரிலும் அழுத்தத்தை தந்து வழிகேட்டில் நிறுத்துகிறது.. எந்த மத பண்டிகையும் மனிதனுக்கு பயனுள்ளதாக அமைந்ததே இல்லை அவனை மூடத்தின் வாயில் நிறுத்தி வெறியேற்றுகிறதே தவிர வேறெதுவும் சாதிக்கவில்லை வேறு பயனுமில்லை .. ஆனால் மண்சார்ந்த விழாக்கள் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் விழாக்கள் இனத்தின் மொழியின் பண்பாட்டின் மேன்மையை உணர்த்துவதோடு இன மொழி மத வேறுபாடுகளை கலைந்து மனிதனுக்கு நேசிக்க கற்று தருகிறது .. ஆனால் எல்லா மத விழாக்கள் பண்டிகைகள் மனிதனை சிந்திக்க விடாமல் ஒருவித பயம்/பக்தியில் நிறுத்தி கடைசியில் அவனே சடங்குகளை மீறுகிற நிலைக்கு அல்லது அவனுக்கு சௌகரியத்திற்கு ஏற்றாற்ப்போல் மாற்றிக்கொள்ள/ மாறிக்கொள்ள வழிவகுக்கிறது இதிலிருந்தே நம்பிக்கை என்பது பொய் என சொல்லலாம் அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பதை உணரலாம் .. இனம் மொழி மண் சார்ந்த விழாக்கள் (பொங்கல் போன்ற விழாக்கள்) சகோதரத்துவத்தை நன்றியோடு வாழ வேண்டுமென்பதை உழைப்பவனை நேசிக்க வேண்டுமென்பதை விடுமுறையை பயனுள்ளதாக்க கலாச்சார மேடைகள் கூத்துகள் என பழங்கதைகளை பேசி மண்ணின் பெருமையை பறைச்சாற்றி நல்வாழ்வு வாழ போதிக்கிறது .. வெறிச்செயல் இல்லை பகையோடு திரியவில்லை அடுத்தவரை அடைக்கியாள சொல்லவில்லை .. பிரித்து பேசி வர்ணம் பூசவில்லை சாதிமதமில்லை .. இயற்கையோடு வாழ்ந்த வாழ்வை.. வாழும்நெறியை உணர்த்துகிறது .. ஆனால் மதசாயம் பூசபடும் எந்த நிகழ்வும் விழாவும் பண்டிகைகளும், உண்மையில் வேற்றுமையை பகையை வளர்க்கிறது .. பணேபாட்டை போதிக்கவில்லை.. .. மதம் தவிர்த்து மனிதம் சமைப்போம் .. ஆலஞ்சியார்

Wednesday, September 4, 2019

ஆசிரியர்

ஆசிரியர் தினம்.. .. நிறைய பேரை எழுத வேண்டி வரும் ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே மூவாயிரம் வார்த்தைகளை தன் தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறது.. .. தாயே சிறந்த ஆசான்.. .. என் தாயார்.. எளிமையான வாழ்வு வாழ்ந்த பெருமகள்.. தமிழ் மீது தனிபற்று கொண்ட பெருமாட்டி.. சீறாபுராணமும் முஹையத்தீன் மாலையும், நூறுமசலாவும்,.. ராகத்தோடு.. பாடி ஓதும்.. #ஓதுவார்.. தமிழ் மீது எனக்கு பற்றுவர காரணமானவர்களின் முதலாமர்.. .. தமிழாசான்.. ம.க maka ம.கலியபெருமாள்.. திராவிடம் பேசிய தமிழாசான் எனக்கு முரசொலியை அறிமுகப்படுத்திய புலவர்.. பெருமைக்குரிய தமிழ்பற்றாளர்.. கொஞ்சம் பெரியாரையும் பேசுவார் நிறைய கலைஞரை... .. அ.அப்துல்காசீம்.. நான் படித்த பள்ளியின் தலைமையாசிரியர்.. சீறாபுராணம் இவர் நடத்தினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. கம்பனை இளங்கோவை இவர் பாடி கேட்டால் அமுதம் தேவையில்லை.. அத்தனை அழகாய் தொடுத்து எடுத்தியம்பியவரை நான் கண்டதில்லை.. .. கலைஞர்.. தமிழ் உரை வீச்சு.. தமிழால் எளிதில் எதிரை வீழ்த்திவிட முடியும் என்ற சூசமத்தை சொன்னவர்.. தொல்காப்பியத்தை இத்தனை எளிதாய் யாரும் தரவில்லை.. தமிழால்எல்லாம் முடியும் என்பதை இவரின் எழுத்துச்சொல்லும்.. புதிய முயற்சியை புதிய உத்வேகத்தை இவரின் எழுத்தும் பேச்சும் சொல்லும்.. .. மற்ற மூவரும் உடனிருந்து என்னை செப்பனிட்டவர்கள்.. ஆனால் கலைஞர் என் கட்டவிரலை காணிக்கை கேட்காத துரோணர்.. .. ச.செல்லபெருமாள் அய்யா உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் .. கருத்து சுரங்கம் தகவல் களஞ்சியம் பெரியாரிய பாதையில் பயணிக்கும் என்னை இழுத்துவந்து களம் அமைத்து தந்தவர் .. உடனிருந்து இயக்கும் பேராற்றல் .. .. சிலம்பாட்ட குரு ஹபீபுல்லாஷா.. மிக நேரித்தியாக சிலம்பமாட சொல்லிதந்தவர் .. என் ஆட்டத்தில் குறைகளை கண்டு களைந்து செம்மைபடுத்திய "வாழக்காய்" வியாபாரி.. புனிதமென்று எதுவுமில்லை எல்லாம் மாயை என்ற வழிப்போக்கன் .. இப்படி..நிறைய பேர்.. வழிநநெடுகிலும் ஏதோ ஒன்றை கற்று கொடுத்தே இருக்கிறார்கள்.. அறிவில் சிறியது பெரியது என்று எதுவுமில்லை.. எல்லாம் அறிவு.. ஒவ்வொரு செயலும் .. ஒவ்வோரு மனிதனும் ..ஏதோ ஒன்றை கற்றுக்கொடுத்து கொண்டேதான் இருக்கிறார்கள்.. #வாழ்வின்_வழிநெடுக .. #ஆசான்கள்.. .. ஆலஞ்சியார்

Sunday, September 1, 2019

கவர்னர் தமிழிசை

பாரம்பரிய காங்கிரஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று மாநிலத் தலைவர் வரை உயர்ந்து ..விடாது துரத்திய கேலிகளையும் கிண்டல்களையும் தன் பலமாக்கி உரத்து நின்றவர்.. தமிழின எதிரிகளின் பக்கம் நிற்கிறாரே என்ற வருத்தம் தவிர அவரை கோபித்துகிகொள்ள ஒன்றுமில்லை .. பொதுவாழ்வில் பெண்கள் பங்கேற்பது பயணிப்பதென்பது இப்போதும் ஒருவித இடைஞ்சல் தரும் பொதுசமூகத்தில் விடாபிடியாக இயங்கியவர் .. அபத்தமானாலும் தொடர்ந்து தன் நிலைநிறுப்பை உறுதிசெய்துக்கொண்டே இருந்தவர் ..அவரின் உடல்மொழியை உயரத்தை கூட சமூகம் கேலிசெய்த போதும் அதை ஒருபொருட்டாகவே கருதாமல் தொடர்ந்து களப்பணியாற்றியவர் .. .. கொள்கைப்பிழை அரசியல் அறியாமை வீம்புக்கென்றே ஏதையாவது சொல்லிவைப்பது என தான் சார்ந்த கூட்டத்தின் உண்மை முகத்தை தோலுரிக்க பயன்பட்டார் .. அங்கே அறிவுடையோருக்கு வேலையில்லை அபத்தங்களுக்கும் அர்த்தமற்றவர்களுக்கும் மத விசுவாசிகளுக்கும்/வெறியர்களுக்கும், பாசிசத்தை தூக்கிபிடித்து நிற்போருக்கும் சனாதனவாதிகளுக்கும் தான் பாஜக என்றறிந்தும் தொடர்ந்து பயணித்து தலைவர் பதவிவரை வந்து இப்போது தெலுங்கானா கவர்னராகியிருக்கிறார் .. பாஜகவின் பார்பனர் பிரிவு (பாஜக என்றாலே பார்பனர்கள் தான்) தொடர்ந்து தொல்லை தந்தபோதும் எஸ்.வி சேகர் போன்ற கூமுட்டைகள் வெளிப்படையாக எதிர்த்துநின்ற போதும் விசு போன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தபோதும் அஞ்சாமல் அவர்களை கதறவிட்ட திராவிடச்சி.. உண்மையில் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை பெரிதாக எதிரியாக கருதியதே இல்லை.. மாறாக மௌனமான புன்னகையோடு கடந்துச்சென்றார்கள் .. கடுமையாக விமர்சிப்பதாக நினைத்து அபத்தம் காட்டிநின்றபோதும் பெரிதாக யாரும் எதிர்வினையாற்றியதில்லை .. .. பெண்கள் பொதுவாழ்விற்கு வருவதே மிக அரிதான செயலாக இன்றைக்கும் காணபடுகிறது அப்படி வரும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்க்க நேரிடிணும் களத்தில் கடுமையாக எதிர்க்கிறபோதும் கொண்டாட வேண்டும் அதனால் தான் ஆசிரியர் "அன்புமகள்" மாநில ஆளுநராக பதியேற்பது மகிழ்ச்சியளிக்கிறதென்று சொல்கிறார்.. தி.மு.க தலைவர் தளபதியும் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார்.. கொள்கை வேறெனினும் பாசிசத்தில் நிழலில் நின்று கதைக்கிறாரெனினும், இந்த மண்ணின் மக்களின் வெறுப்பை கொண்டவர்களின் அடியொற்றியே பயணிக்கிறாரெனினும் .. அரசியலின் தெளிவின்மையும் எதையாவது சொல்லி தொலைக்க வேண்டியிருக்கிறதென அறிந்தும் அவரை யாரும் பகையோடு பார்த்ததில்லை.. தான் ஏற்றுக்கொண்ட கொள்கை கட்சிக்கு விசுவாசமாகவே செயல்ப்பட்டார்.. மிகவும் ஒடுக்கபட்ட இனத்திலிருந்து வந்து பார்பனர்களின் கடுமையான எதிர்பபையும் மீறி தலைவராக வலம்வந்தவர் .. இன்று தெலுங்கானா ஆளுநராகிறார் .. வாழ்த்துவோம் ..இந்த தமிழச்சியை.. முதல் தமிழ்ப் பெண் ஆளுநர் தமிழிசை வாழ்த்துகள் .. ஆலஞ்சியார்

Saturday, August 31, 2019

திராவிடம் தேவை

ரூபாய் என்பது ஒரு தேசத்தின் நாணயம் மட்டும் அல்ல. அது ஒரு நாட்டின் #கௌரவம். நாணயத்தின் மதிப்பு விழ ..விழ, நாட்டின் கௌரவமும் வீழ்கிறது எங்கோ யாரோ பேசியது போல் தெரிகிறதா .. மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்பிமை சுஷ்மா சுவராஜ் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய வார்த்தைகள் தான் இவை.. .. ஆனால்இன்றைய நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறது.. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கி .. பாஜக ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்தியரூபாய் 40 ஆகுமென்ற "பொருளாதார நிபுணர்" குருமூர்த்தி இப்போது என்ன சொல்கிறார் ₹71 ஐ கடந்து ஏறுமுகமாக போகிறதே.. 30% விழுக்காடு பெண்கள்தான் பெண்மையோடு இருப்பதாக சொல்லி திசை திருப்புகிறார் .. பொருளாதார நிபுணர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு "வேண்டியவர்களை" நியமித்து ரிசர்வ் வங்கி இருப்பை மத்திய அரசிற்கு மாற்றியதை ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் .. வங்கிகளை இணைப்பதால் ₹5 ttillion வருமென நிர்மலா சீதாராமன் சொல்கிறார் எந்தவிதமான policy கொள்கையும் வகுக்காமல் என சுப்ரமணியசுவாமி கூட கலாய்க்கிறார். .. முட்டாள்கள் கையில் நாடு சென்றதன் விளைவு தேசத்தின் மதிப்பும் வெகு தாழே போய்க்கொண்டிருக்கிறது.. ஒற்றை இரவில் ₹1000..₹500 ஐ செல்லாதாக்கிய போது சில அறிவாளிகள்..? சபாஷ் புதிய இந்தியா பிறந்ததென்றும் .. சில மோடி ரசிகர்கள் ஆஹா இவரல்லவா இரும்புமனிதர் ஒரே இரவில் கருப்புபணத்தை ஒழித்த கர்வயோகி என்றெல்லாம் கதைத்தனர்.. மக்கள் நடுத்தெருவில் நின்று தான் உழைத்து சிறுக சிறுக சேமித்ததை கூட எடுக்கமுடியாமல் வழியும் கண்ணீரோடு நின்ற போதும் .. ஐம்பது நாட்கள் நாட்டிற்காக பொறுத்துக்கொள்ள கூடாதா.. நாட்டை காக்க ராணுவவீரன் எல்லையில் மாத கணக்கில் நிற்கிறானே என்று ராணுவத்தில் தன் இனத்தையே சேர்க்காதவனெல்லாம் புத்தி சொன்னான்.. தன் உடல்நலிவிற்றிருந்த போதும் .. திரு.மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு வந்து தவறான முடிவை பிரதமர் எடுத்துவிட்டார் நாட்டின் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுவிடும் சிறுதொழில்கள் முடங்கும் என துள்ளியமாய் கணித்து .. கடைசியில் நாட்டுமக்கள் மாண்டுபோவார்களென்றார் .. ஆம் எத்தனை உயிர்கள் போனது ..எவ்வளவுபேர் உடைமைகளை (தொழில்களை)இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள் .. கள்ளநோட்டை ஒழிப்பதற்கும் கருப்பு பணத்தை மீட்பதற்கும் என சொல்லி கலர்கலராக நோட்டடித்தவர்கள் இனி கருப்பே இராது கள்ள பணமே வராதென்றவர்கள் இப்போது ₹500 கள்ளநோட்டு அதிகமாக புழங்குவதாக சொல்கிறார்கள் .. செல்லாதென்று அறிவிக்கப்பட்ட ரூபாய்களில் 99.3 விழுக்காடு நோட்டுகள் வங்கிக்கே திரும்ப வந்துவிட்டது .. அதாவது ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற துணைபோனதுதான் நாம் கண்டது .. முதன்முறையாக ஒரு முட்டாளை பிரதமராக தேர்வு செய்தமைக்காக உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது ..13,000 கோடி திரும்பவராத கருப்புபணத்திற்காக பணத்திற்காக 2,00,000 கோடி செலவு செய்த "ஞானக்கிறுக்கனை" நாம் பெற்றிருக்கிறோம்.. பொய் பேச்சை நம்பி அறிவாளிகளை வீட்டுகனுப்பியதற்கு நாடு அவதிப்படுகிறது .. சிறுதொழில்கள் நசுங்கி வேலைவாய்ப்பின்மையால் பிற தொழில் தேடி செல்கிறார் பெரும் தொழில்களும் மெல்ல மெல்ல வேலைநாட்களை சுருக்கியும் ஆட்குறைப்பையும் செய்கிறது .. உங்கள் பழையதை கொடுத்துவிட்டு புதியதாக இருசக்கரவாகனம் வாங்கி தொழிற்துறையை காப்பாற்றுங்களென நிதியமைச்சரே சொல்லும் அவலநிலை .. இதுதான் இன்றைய இந்தியா.. .. நாடு ..மதம் வர்ணம் மூடம் பேசுவோரிடம் சிக்கி தன் முகத்தை இழந்து நிற்கிறது .. பாசிசத்தின் கோர பிடியில் தன் பன்முகத்தன்மையை மெல்ல இழக்கிறது இனியும் இவர்களை அனுமதித்தால் இந்தியா சிதறுண்டு போகும் .. நாசக்காரர்கள் கையிலிருந்து இந்திய தேசத்தை காக்க போராட வேண்டியிருக்கிறது .. காங்கிரஸ் கூட தயங்குகிற நிலையில் இந்தியாவே திமுகவின் நிலைப்பாட்டை வெகுவாக உற்றுநோக்குகிறது .. தளபதியார் கலைஞரின் மறுஉருவாக மிளிர்கிறார் .. திராவிடச் சித்தாந்தமே இந்த நாட்டை செம்மைபடுத்தும் நேர்வழியாக்கும் வெகுமுன்னேற்றத்தை தரும்.. இந்தியாவிற்கே திராவிடம் தேவை.. .. ஆலஞ்சியார்

Friday, August 30, 2019

நீதி..?

நீதியரசர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு "கருத்து" சொல்கிறார்கள் அது சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை அதிர்வை ஏற்படுத்துகிறது. ஏன் நீதிபதிகளுக்கென்று சொந்த கருத்து கூடாதா அவருக்கென்று மத நம்பிக்கை கூடாதா.. தன் கருத்தை சொல்வதில் தவறில்லையே என நினைக்கலாம் .. அவரின் சொந்த விருப்பு வெறுப்பை சொல்லுமிடமாக நீதிமன்றங்களை பயன்படுத்துவது நீதிபரிபாலனத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கவே செய்யும் .. .. சமீபமாக உயர்நீதிபீடங்களில் தங்களின் கருத்தை எண்ணத்தை வெளிப்படையாக சொல்வதும் பிறகு பி்ன்வழிப்பதும் தொடர்வது கவலைக்குரியது .. கிருஸ்துவகல்வி நிறுவனங்களின் மீது பெற்றோர்கள் அச்சம் சொல்வதாக நீதியரசர் கருத்து வலுவான எதிர்ப்பிற்கு பிறகு திருத்தம் செய்யபட்டது .. யாகூப் மேனனின் தூக்குத்தண்டனை மறுபரிசீலனையின் போது அட்டர்னி ஜெனரல் நள்ளிரவில் கூடிய உச்சநீதிமன்ற அமர்வில் மநுநீதியை சுட்டிகாட்டியது அப்போது விவாதமானது உச்சநீதிமன்ற பதிவாளர் விலகி செல்லநேரிட்டதெல்லாம் இந்திய நீதிமன்றங்களில் "நீதி" யை குறித்த பார்வையாக கருதினார்கள் .. செல்வி. ஜெயலலிதா வழக்கில் நீதியரசர் கிருபாகரன் " மக்களுக்கா நான் " என்ற சொத்துகளை ஏன சிலவற்றை ஏழைகளுக்கு வழங்ககூடாதென கேள்வி எழுப்பியிருக்கிறார் .. ஜெயலலிதா இருந்த போது அவர் தன் சொத்துகளைப் பற்றி தனக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கோ அல்லது யாருக்கு அதை அனுபவிக்க உரிமை உண்டென்று சொல்லாத போது கருத்தை சொல்வது வழக்கை அதன் நோக்கத்தை பாதிக்கும் .. .. கலைஞர் கருணாநிதி தனக்கு பிறகு தன் இல்லத்தை தயாளு அம்மாள் உயிரோடு இருக்கும்,வரை அனுபவிக்கலாம் அவருக்கு பிறகு மருத்துவமனையாக்க வேண்டுமென தனது வாரிசுகளிடம் கையெழுத்து பெற்று (ஏற்கனவே எழுதிவைத்ததை திரும்ப பெற்று) வழங்கியிருக்கிறார் .. அரசு பதவி வகித்தவர் இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக அரசியல் போக்கையே வடிவமைத்தவர் அவரின் இல்லம் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என்பதை அவரே முடிவு செய்திருக்கிறார் அதுபோல ஜெயலலிதா எதுவும் செய்திடாத போது ..ஏன் கருத்தென்ற பெயரில் வழக்கின் போக்கை மாற்ற வேண்டும் .. .. தண்டிக்கபட்ட குற்றவாளி வழக்கின் மேல்முறையீட்டு காலத்தில் மரணமடைந்திருக்கிறார் வழக்கின் தீர்ப்பு கீழ்நிலை நீதிமன்ற தீர்ப்பையே உறுதிசெய்திருக்கிறது அவரின் அபராத தொகையை எப்படி வசூலிப்பதென்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் சொத்தை சொந்தம் கொண்டாட உரிமை உள்ளவர்கள் யாரும் முயற்சியெடுக்கவில்லை காரணம் அபராத தொகையை எங்கே செலுத்த நேரிடுமோ என அஞ்சி கண்டுக்கொள்ளவில்லை இந்நிலையில் அரசுடைமையாக்க வேண்டுமென்பதும் .. குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்டவரை அரசு கொண்டாடுவதும் அதை மக்கள் வரிப்பணத்தி செய்வதும் யாரும் கண்டிக்கவோ செய்யாதது வியப்பளிக்கிறது .. இந்திய நீதிமன்றங்கள் நீதி எதை காட்டுகிறதென்பதற்கு இது உதாரணமாகலாம் .. .. நீதிமன்ற செயல்பாடுகள் காலதாமதமாவதும் தகுதி நீக்கம் வழக்கில் வருடங்களாக விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக காத்திருப்பதும் அரசு ஆட்சிகாலம் வரை அமைதியாக இருப்பது ஆள்வோரின் கண்ணசைவிற்காக காத்திருப்பது அரசிற்கு ஆள்வோருக்கும் தேவைபடும் போது விரைந்து தீர்ப்பை தருவதென்பது .. சொந்த கருத்தை வழக்கு விசாரணையின் போது சொல்லி வழக்கின் போக்கை மாற்றுவது .. நீதியின் மீதான மதிப்பிழக்க செய்யும் .. .. பூம்புகாரில் கலைஞர் வசனம் நல்லவனுக்கா நீதி இங்கே வல்லவனுக்கானதே நீதி என்பார் .. ஆம் வல்லவனுக்காக தான் இங்கே நீதி பீடங்கள் .. .. ஆலஞ்சியார்

Thursday, August 29, 2019

திராவிடம்

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் திராவிடம் கழகம் பவளவிழா கொண்டாடுகிறது திராவிடம் அறியணை ஏறி 50 ஆண்டுகள் ஆகிவிட்டனவே என்ன செய்திருக்கிறதென்றார்.. நண்பர்.. சிரித்துக்கொண்டே சொன்னேன் அம்மணசாமியார் சட்டமன்றத்திற்குள் வராமல் பார்த்துக்கொண்டோமே .. நிச்சயமாக மீண்டும் பரிசோதனை செய்யவேண்டியிருக்கிறது .. சாதிய வேர் பலமாக முறிக்கபடாமல் விட்டதன் விளைவு பிணத்தை சுடுக்காட்டிற்கு கொண்டு செல்ல கூட இன்னமும் எமது "ஜனம்" போராடவேண்டியிருக்கிறது .. இன்னமும் வீரியமாய் மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டியது அவசியம் இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சனாதனத்தின் கொடிய பிடியில் சிக்கி சீரழியாமல் காக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது .. என்பதை ஒப்புக்கொண்டாலும் திராவிடம் சாதித்ததை மறுத்து தமிழக வரலாற்றை எழுதிட முடியாது .. மிகபெரிய கால அளவுதான் ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக எங்களை அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து மீண்டுவந்த சுயமரியாதையோடு இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறோமே.. ஆட்சியில் இருந்ததாக சொல்லபடும் ஆண்டுகளில் ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் கூட திமுக ஆட்சியில்இல்லை ..அதிமுகவை நீங்கள் திராவிட இயக்கமாக கருதமுடியாது.. .. இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜரை அவரின் ஆட்சியை புகழ்ந்துக்கொண்டிருக்கிறோமே அதற்கு காரணம் பெரியார்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ராஜாஜியின் (பார்பன) கட்டுபாட்டியிலிருந்த காங்கிரஸை தமிழர்களின் தலைமைக்கு கொண்டுவர வேண்டுமென எண்ணி குடியாத்தம் இடைதேர்தலில் காமராஜரை நிற்க சொல்கிறார்.. காமராஜரோ நான் மிகவும் பின்தங்கிய நாடார் வகுப்பை சார்ந்தவன் குடியாத்தத்தில் முதலியார்களும் முஸ்லிம்களுமே,அதிகம்..என்ற போது நான் சொல்கிறேன் நீ நில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழர்கள் காமராஜரை ஆதரியுங்கள் என்றார் திக விலிருந்து பிரிந்து திமுக கண்ட அண்ணாவும் , கண்ணியமிக்க காயிதே மில்லத்தும் பெரியார் சொல்லிவிட்டார் என்று ஆதரித்தார்கள்.. அப்படிதான் தமிழக அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கியது.. .. திமுக ஆட்சியிலிருந்த போதுதான் .. சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க திட்டங்களும் சட்டங்களும் வந்தன.. 1950 களில் அண்ணல் அம்பேத்கர் வீட்டிலும் நாட்டிலும் ..எல்லா மத ஜாதியிலும் பெண்கள் அடிமைகளாகதானியிருக்கிறார்கள்.. அவர்களுக்கென்று உரிமைகளில்லை சொத்தில் பங்கில்லை எனவே அதை சட்டமாக்க வரைவை கொண்டுவருகிறேன் என நாடாளுமன்றத்திலே பேசிய போது பண்டிதஜவகர்லால் நேரு தலைமையிலான அரசு இருந்த போதே ஆதிக்க மேட்டுக்குடி பார்பனர்கள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்தார்கள்.. என்னால் முடியாமல் போனது எப்போதாவது ஒருதலைவன் பெண்களுக்கான உரிமையை கொண்டுவருவான் என கூறி ராஜினாமா செய்துவிட்டுபோனார்.. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கை கொண்டுவந்து சட்டமாக்கியது திராவிட இயக்கம் தான் திமுகதான் #கலைஞர்தான்.. இப்போது.. இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது .. .. இன்றைக்கும் இடஒதுக்கீட்டில் 69 சதவிகிதத்தை செயல்படுத்துவதும் ..சாதிமத கட்டமைப்பை உடைத்து சமத்துவபுரம் கண்டதும், மலம் அள்ளுவோர் என ஒதுக்கி வைத்த அருந்தியினருக்கு உள்இடஒதுக்கீட்டை வழங்கி இன்றைக்கு மருத்துவம் பொறியியல் என உயர்கல்வி பெற வழிவகை செய்ததும்.. இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட்டுக்கொண்டு சரிசமமாக அமர்ந்து பேச வைத்ததும்...சமூகநீதியில் இன்றுவரை இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் இருப்பதும் திமுகவால் திராவிடத்தால் கிடைத்தது.. .. குளத்தில் தண்ணீர் அள்ளி குடிக்கவோ குண்டி கழுவவோ விடமாட்டேன் என்கிறான் என் இனத்தவனை அறநிலையத்துறை அமைச்சராக்கி கருவறை வரை செல்ல வைத்தது திராவிடம்தான் பெரியார்தான் என பெருமையோடு சொன்னார் #அம்பேத்கர் பரமேஸ்வரன் என்ற பட்டியலின சகோதரனை பெரியார் சொன்னார் என்பதற்காக அமைச்சராக்கினார் காமராஜர்.. .. திராவிடத்தை உச்சரிக்காமல் இங்கே அரசியலே செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவந்திருப்பதும் மற்றமாநிலங்களை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் முன் உதாரணத்தை உருவாக்கியிருப்பது திராவிடம்தான்.. .. காரல் மார்க்ஸ் சொன்னார்.. குரங்கையும் மாட்டையும் தெய்வமாக மதிக்கிற/கும்பிடுகிற நாட்டில் ஒரு கலாச்சார புரட்சியோ பொருளாதார புரட்சி வராதென்றார்.. இன்றைக்கு தமிழகத்தில் மாட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு நவநாகரீக சீர்திருத்த சிந்தனையை கொண்டுவந்ததும் .. கலாச்சாரம் என்ற பெயரில் மூடத்தனமும் எடுபடாமல் போனதற்கும் திராவிடம்தான் காரணம்... தமிழகத்தில் சுயமரியாதையோடு வாழ முடிகிறதே.. , உணர்வால் ஒன்றுப்பட்டு நிற்க முடிகிறதென்றால் பெரியாரும், பெரியாரின் கொள்கைகளை தாங்கி அதை அரசியலாய் சட்டவடிவாய் மாற்றிக்காட்டிய பெருமை திமுகவை கலைஞரையே சாரும்.. இன்றைக்கு சிறிது சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் வேர் ஆழ ஊன்றி நிற்பதாலும் விழுதுகளால் தாங்கி நி்ற்பதாலும் ஆலமாய் நிற்கிறது திராவிட தரு.. .. இன்றைக்கு பாஜகவினர் படித்த பதினெட்டு அடவும் நடத்திப்பார்த்தும் ஒன்றும் முடியவில்லையே..காரணம் திராவடத்தின் தாக்கம் மனதில் வேரூன்றி இருப்பதே சாட்சி .. நமஸ்காரம் என்ற ஆதிக்கதிமிரில் இருந்தும் கும்பிடுறேன் சாமி என்ற அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வணக்கம் என்று சுயமரியாதையோடு கதைக்கவைத்தது திராவிடம் தான்.. இன்னும் நிறைய... .. #திராவிடம் .. ஆலஞ்சியார்

Tuesday, August 27, 2019

எது கருத்து சுதந்திரம்

எது கருத்து சுதந்திரம்.. கொள்கை ரீதியான விமர்சனம் கொண்ட கருத்தை எதிர்ப்பவர்களை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பது ..சரியோ தவறோ தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் பகை உணர்வோடு செயல்படுவது தவறான செயல் எனினும் அதில் உறுதியோடு நிற்பதென்பது வேறு .. கருத்தியல் ரீதியாக பொய்யான தகலல்கள் கூட சிலநேரம் கடந்து போய்விடலாம் ஆனால் இல்லாத ஒன்றை அதிலும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக தவறான தகவல்களை தந்தால் அதை கருத்து சுதந்திரமென சப்பைகட்டினால் திருப்பி அடிக்க வேண்டியிருக்கிறது தகுதியில்லாத தற்குறியென்று விட்டுவிட்டால் பொய்யை திரும்பதிரும்ப சொல்லி சட்டென்று நம்பிவிடுகிற மக்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக்க எண்ணுவார்கள் .. முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது அவசியம் .. .. நம்புகிற மாதிரி கூட சொல்ல தெரியவில்லை வீண்பழி சுமத்தி அதில் குளிர்காயலாம் வெளிச்சம் பெறலாம் என நினைப்போருக்கு திமுக தரும் பதில் வழக்காக இருக்கவேண்டும். இதை ஆரம்பத்திலிருந்தே செய்திருந்தால் திமுக மீதும் கலைஞர் மீதும் வீண்பழிகள் வந்திருக்காது சுமக்க தேவையிருந்திருக்காது .. பொய்யை மட்டுமே மூலதனமாக செயல்படும் பாஜவினருக்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. தேசபக்தி போர்வையில் நாலுகாசு பார்க்கலாமென எண்ணுவோருக்கும் கடைசியில் மன்னிப்பு கேட்டுவிடலாமென எண்ணி செயல்படுவோருக்கும் திமுகவின் நகர்வு அச்சக்தை தந்திருக்கிறது .. விளம்பரபிரியர்களின் செயல்கள் சுயமரியாதை இயக்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது.. ஆனால் மக்கள் பெறும் பலன்கள்/பயன்கள் காலங்கடக்க செய்யமுடியும் .. இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் தமிழ் விரோதபோக்கும் சனாதனத்தை திணிக்க நினைக்கும் பாசிசவாதிகளுக்கு வெண்சாமரம் வீசி வாய்பொத்தி கைகட்டி நிற்கிற கேவலமானவர்களின் அதிகார மோகத்தால் எதையும் சாதித்துவிடலாமென பகைவர் எண்ணி செயல்படும் வேளையில் திமுகவை பலவீனபடுத்த எடுக்கும் சிறு காரியங்களை கூட கண்காணித்து செயல்படவேண்டியது அவசியம்,.. .. யாராக இருந்தாலும் குற்றம் சாட்டினால் அதற்கான ஆதாரமிருந்தால் வழக்கை சந்தித்து எதிர்கொள்ளவேண்டுமே தவிர எனக்கு சுதந்திரமிருக்கிறது எதை வேண்டுமானாலும் பேசுவேன் என்றால் .. எதிர்க்கவும் மறுக்கவும், வழக்கு தொடுத்து தோலுரிக்கவும் சட்டம் எங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது .. உண்மையில் ஜனநாயக இயக்கம் என்பதால் தான் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் நாடியிருக்கிறது .. பெரும் தொண்டர்படை கண்ணசைத்தால் போதும் வேரோடு பிடிங்கியெறிந்துவிட கூடும்.. .. இனியும் பொறுப்பதில்லை .. பொறுத்ததால் சுமந்த பழிகள் போதும்.. சட்டப்படியான நடவடிக்கை நமதுரிமை.. .. ஆலஞ்சியார்

Monday, August 26, 2019

காதல்

#காதல்.. .. காதல் உள்ளின் உள்ளில் உருகும்.. மெல்லிதாய் படரும் மோகனம் கொள்ளும்.. மௌனமாய்.. மனதை கொல்லும்.. கசக்கி பிழிந்து.. கனிந்துருகி.. கண்ணில் நீர் சுரக்கும்.. கண்கள் உண்மை பேசும்.. பேசினால்.. கவிதை வரும்.. பேசாது போனால்.. கவிதையாகும்.... .. அன்பின் அடர்த்தியல்ல காதல்.. அன்பை.. இளகுவாக்கும்.. மனதை... இளமையாக்கும்.. பார்வையை அழகாக்கும்.. பரசவமாய்.. பறக்க நினைக்கும்.. பேச்செல்லாம்.. இனிமையாகும் அழகிய உணர்வு.. காதல்.. .. நேற்றுவரை பார்த்ததை பார்க்காத கோணத்தில் பார்ப்பாய்.. பழைய குளத்தடி கூட பளிங்காய் தெரியும்,.. பேசாத மரங்கள் உன்னோடு பேசும் வீசும் காற்று வாசனை தரும் பொய்கள் கூட அழகாய் சிலநேரம் .. நடை அழகாகும் .. ஆண்மை நளினம் கொள்ளும் .. உன்னையே நீ ரசிப்பாய் .. .. ஆதலால் காதல் செய்வீர்.. .. ஆலஞ்சியார்

Sunday, August 25, 2019

விஜயகாந்த்

#விஜயகாந்த் அரசியல் தெரியாத அரசியல் செய்யாத அரசியல் தலைவர்.. திடீரென்று ஒருநாள் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் வெற்றி என புதியதொரு தொடக்கம் குறித்தார்.. நிறைய எதிர்பார்ப்பை தர கூடுமென சிலரும் மிளிர மாட்டாரென சிலரும் கருத்துக்களை பகிர்ந்தார்கள் ..ஆனால் தமிழகம் புதியதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை என்று கூட சொல்லலாம் ஏனெனில் திராவிட இயக்கத்தின் வேர்கள் அவ்வளவு பலமாக ஆழமாக வேரூண்டிருக்கிறது.. .. அரசியலுக்கு தகுதியானவரா என்பதை விட சரியாக திட்டமிடாதததாலும் சிலரின் சூழ்ச்சியாலும் வேரோடு பிடிங்கியெறியப்பட்ட செடியை போல கிடக்கிறார்.. தனித்து தொடர்ந்து களம் கண்டிருப்பாரேயானால் ஒரளவு மெச்சப்பட்ட நிலையை எட்டியிருக்கலாம்.. அரசியல் சகுனி சோவின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவை ஆதரிக்க போய் கடைசியில் ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிட்டார்.. அரசியலில் சமகால நிகழ்வுகளுக்கு தகுந்தாய்போல காய் நகர்த்தப்படவேண்டும் இல்லையெனில் அடுத்தமுறை என்ற சொல்லே இல்லாமல் செய்துவிடும் .. .. சட்டமன்ற தேர்தலில் வைகோவோடு இணைந்தது அவரது அரசியல் வரலாற்றில் கருத்தபக்கங்களானது.. தனித்து களம் கண்டிருக்கவேண்டும் அல்லது திமுகவோடு சேர்ந்து ஜெயலலிதாவை வீழ்த்திருக்கவேண்டும்.. அப்படி வீழ்த்திருந்தால் தமிழகத்தில் வருங்காலங்களில் திமுக தேமுதிக என இருகட்சிகள் மட்டுமே இருந்திருக்கும்.. அரசியல் தெளிவின்மை சமகால அரசியலில் நகர்வை பற்றிய புரிதல் இல்லாமை அவரது பலவீனமானது .. நல்ல ஆலோசகரை கொண்டிருக்கவில்லை..தன் மனைவி மைத்துனரின் கைபாவையாக மாறியது அவரது வீழ்ச்சியின் தொடக்கமாகியது .. அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதும் அதை குடும்பத்தினர் கிடைக்கும்வரை லாபம் என்ற நிலைக்கு கட்சியை வியாபாரமாக்கிவிட்டார்கள் .. ஆம் கட்சியை கம்பெனி லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் .. அவரின் கூட இருந்தவர்கள் ஒவ்வொருவராக அணி மாற கூட இருப்பவர்களை இழுத்துபிடிக்க கூட சக்தியற்றவராக தெரிகிறார் .. அவரது ரசிகர்கள் மட்டுமே அதிலும் அரசியல் அறியாதவர்கள் இருக்கிறார்கள் .. .. அரசியலில் சூழ்ச்சியறிந்து செயல்படவேண்டும்.. செயல்பாடுகளில் தொய்வில்லாத நிலைவேண்டும் மக்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் திருவிழாவிற்கு மட்டும் வரும் சந்தையாக இருக்ககூடாது .. நாள்தோறும் பரபரப்பாக இயங்கவேண்டும்.. தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள் நினைவுக்கு வருவதும், அதை ஆதாயமாக்க முடியுமா என நினைப்பதும் அழிவை நோக்கி நகர்த்தியது .. நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பது அறிவீனசெயல் .. காத்திருந்து நேரம் வரும் போது அதன் பயனை அனுபவிக்கும் பொறுமை வேண்டும்.. விஜயகாந்த் எனும் தனிப்பட்ட நபரோடு தமிழக மக்கள் வெறுப்பை தரவில்லை மாறாக அவரின் செயல்பாடுகளின் மீதும் குடும்பத்தாரின் தலையீடு மீதும் தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. இன்னும் காலமிருக்கிறது.. என சொல்ல தோன்றுகிறது ..ஆனால் பலனில்லை.. .. பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயகாந்த்.. .. ஆலஞ்சியார்

Saturday, August 24, 2019

பொருளாதாரம்

பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்தபோது தேசம் திவாலாகிவிட்டது சிக்கன நடவடிக்கை வேண்டுமென்றபோது தேசம் தானே திவாலானது நமக்கென்ன? என்று கேட்டார் பிரெஞ்ச் பேரரசி #மேரி_அண்டோனெட் .. .. அதே சுதியில் மாண்பிமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார் நாங்கள் என்ன செய்யமுடியும் . உலக பொருளாதாரமே சரிந்துள்ள நிலையில் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பதில் தந்து கொண்டு இருந்த நிலையில் , ஒரு நிருபர் பளிச்சென்ற கேள்வியொன்றை எழுப்பினார். எதற்காக மூன்று மாத காலம் பொருளாதாரம் சரியட்டும் என்று காத்து இருந்தீர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார் நிர்மலா சீதாராமன்..அது அவர் முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. உடனே பதில் தந்த நிர்மலா சீதாராமன தொழில்துறை சரிவுகள் தொடர்பாக இப்போது தான் விவரம் கிடைத்தது. யாராவது பொருளாதாரம் சரிவு அடையட்டும் என்று பார்த்து கொண்டு இருப்பார்களா" என்று கறாராக பதில்சொல்லி விட்டு, அடுத்த கேள்வியைக் கேட்குமாறு, நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.. உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்திக்கிறது ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மெச்ச தகுந்த நிலை என்கிறார்.. இந்தநிலைக்கு என்ன காரணமென இவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை தவறை சரி செய்ய தெரியாமல் விழிபுதுங்குவது நிர்மலா பேச்சில் தெரிந்தது பொருளாதார சரிவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டாமா ..அதற்கென்ற துறைகள் நிபுணர்கள் அதிகாரிகள் ஆலோசகர்கள் என்ன செய்தார்கள் .. .. பணமதிப்பிழப்பை திடீரென ஒரு இரவில் அறிவித்து தன்னை "ராஜாவாக" காட்டிக்கொண்ட புதிய இந்தியாவின் மன்னர் ஊழல் ஒழிந்தது கருப்புபணம் பிடிப்பட்டது இனி யாரும் தப்ப முடியாதென்று சொல்லி சில நாட்களிலேயே கருப்பெல்லாம் கமிஷனில் வெள்ளையாகி பல்லிளித்தது கூட்டுறவு வங்கியில் மிக சுலபமாக மாற்றி தந்தார்கள் .. ₹500 கோடி கண்டெய்னரில் வாகன போலி எண்ணில் கடத்தபட்டும் வழக்கோ விசாரணையோ இல்லை பணம் பாரதவங்கிக்கு சொந்தமென முடித்துவைத்தார்கள் .. இன்று மீண்டும் ஊழல்வாதிகளை விடமாட்டோம் என திரும்ப பேசிகிறார் மாண்பிமை பிரதமர் .. பணமதிப்பிழப்பின் போதே தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மாநிலங்களவையில் நீண்ட நேரம் விளக்கம் கொடுத்தார் பொருளாதார நிபுணரும் மேனாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங்.. அவசரகதியில் துறைசார்ந்த வல்லுநர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு சில காலம் சென்று பெரும் வீழிச்சியை தருமென சொன்னார் .. GST வரி விதிப்புமுறை முற்றிலும் தவறானதென்றும் சிறுதொழில்களை பாதிக்குமென்றும் மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் நீண்ட உரை நிகழ்த்தினார் .. வரும் முன் எச்சரித்தார்கள் நாலும் அறிந்தவர்கள் ..ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிறவர்களிடம் எதை சொன்னாலும் புரியாது .. இந்த நாட்டில் தான் பொருளாதார அறிவு இல்லாதவர்கள் நிதித்துறையை கையாள்வார்கள் .. .. உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தைபோக்கோ காரணம் என்கிறார் அமைச்சர் அதற்கு நிரஞ்சன் இந்திய ஏற்றுமதி என்பது1% 2% தான் இது தாக்கத்தை தராது என்கிறார் .. ஆட்டோமொபைல் கடும்வீழ்ச்சி அதனால் உங்கள் பழைய வண்டியை கொடுத்துவிட்டு புது வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார் எமது நிதியமைச்சர் .. .. பொருளாதாரம் சரிவில் தான் சரியாகிவிடும் என நினைத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்கிறார் வரலாறு படித்துவிட்டு ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பு வகிக்கும் .. ரிசர்வ் வங்கியின் கௌரவ இயக்குனர் குருமூர்த்தியை காணோம்.. என்ன படித்தாரென்றே தெரியாதவர் (டிகிரியா +2 வா என்று விவாதமே நடந்தது) மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகலாம் .. வரலாறு படித்துவிட்டு பொருளாதாரத்தை கையாளலாம் கணக்கன் வங்கி கவர்னராகலாம் ..இதுதான் இவர்கள் லட்சணம்.. அறிவாளிகளையும் சிறந்த நிர்வாகிகளையும் வேண்டாமென வைத்ததின் விளைவு .. இந்த நிலை வள்ளுவன் தெளிவாக சொல்லியிருக்கிறார் .. இதனை இதனால் இவண்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் .. .. ஆலஞ்சியார்

Friday, August 23, 2019

தளபதி

"களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே" போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.. .. ஆம்.. பெருவீரன் கையில் கழகம்.. இ்ந்தியாவே உற்றுநோக்கும் வல்லமை கண்டேன் .. தளபதியாய் படையோட்டம் நடத்த தயார்.. பகைவர்களே ஓடியொளிந்துக் கொள்ளுங்கள்.. மிரட்டல்கள் .. தடையென கிறுக்குத்தனமாய்உளறாதீர்கள்.. மீறினால் செயல்பட எண்ணுவீர்களாயின் இருப்பும் அவிழ்ந்து போகும்.. இனி அஞ்சுவதில்லையென அஞ்சுகத்தின் பேரன் தயாராகிறான்.. நாடு விரும்பும் தலைவனாய் .. நல்லதொரு விடியலை தர.. ஜனநாயகத்தை ஒற்றை உயர்த்திபிடித்து உலகுக்கு பறைச்சாற்றியவர் நாடும் இயக்கமும் மக்களுக்கானதென்ற மகத்தான நெறிகளோடு அரசியல் செய்பவர் .. .. ஒப்பாரி வைப்போரே.. ஊதுகுழலாய் சங்கிகள் குரல் ஒலிப்போரே.. பாசிசத்தின் அடிவருடிகளே.. திராவிடத்தின் பெயர் சொல்லி தீங்கிழைக்கும் கயவர்களே.. இது உண்மையான திராவிடத்தலைவன் உதயமாகியிருக்கிறான் தமிழர் நலம் காக்க.. தமிழனின் போர்வாளாய்.. தமிழர்படை நடத்தும் தளபதியாய்.. பகையறுக்க தயாராகிறார்.. எதிரிகளே.. பலமறியாது மோதாதீர்.. இயக்கத்தை விட்டே திராவிட பெருங்கிழவனால் விரட்டப்பட்டவர்களை வைத்து புதிய சூழ்ச்சி செய்ய நினைத்து மூக்குடைந்து போகாதீர் .. கலைஞரிடம் நேரடி பயிற்சிப்பெற்ற தளபதியாய் நீண்ட நெடிய அனுபவமும் தேர்ந்த முதிர்ச்சியும் நன்நெறியும்.. விடா முயற்சியும் எதிரியை சமயமறிந்து வீழ்த்தும் விவேகியாய்.. தலைநிமிர்ந்து நிற்கிறார்.. அகந்தையில்லா நற்குணமாய் ..அரவணைத்து செல்லும் பாங்கோடு.. எதிர்த்து நிற்போரின் சிம்மசொப்பனமாய் திகழ்கிறார்.. மீண்டும் சொல்கிறேன் புறநானூற்று சொல்லெடுத்து.. "எம்முளும் உளன் ஒரு பொருநன்! திங்கள் வலித்த கால் அன்னோனே!!” .. ஆலஞ்சியார்

Thursday, August 22, 2019

அளவோடு ஆர்ப்பரி

அமைதி தரும் அருமருந்து வேண்டுமென்றேன்.. .. நிசப்தம் நிம்மதியாகாது நிழல்.. தெளிவாகாது.. .. சூழ்ச்சியில் விழுந்து.. சிதறுகிறேன்.. கழுகுகள் எனை கொத்தி தின்கிறது.. கேள்வி கேட்கவே வழியில்லை.. என் செய்ய அமைதி வேண்டுகிறேன்.. .. கொஞ்சம் ஆர்ப்பரி அளவோடு திமிர் கொள் தேவைக்கேற்ப ஆசைபடு சிலநேரம் அடங்க மறு.. அடங்கியிருந்தால் அரித்துவிடும் எறும்பு கூட அள்ளிபோகும்.. சிலிர்த்தெழு.. எழும் உயரம் நீ.. அறிய வேண்டும்.. நின்று சுழல்.. சுழற்சி நிறுத்தவும் அறியவேண்டும்.. .. பறக்காத சிறகால் பயனில்லை.. மண்ணை கிழிக்காத விதை..முளைப்பதில்லை .. ஆடு.. நின்று ஆடு நிலை நிறுத்தி ஆடு கால் நிலத்தில் வேண்டும் கவனம் கொள்.. .. வேட்டைக்கு வந்த பின் புலிக்கு அஞ்சுவதால் பயனில்லை.. மோது.. மடிந்தாலும் பேசப்படுவாய்... .. அஞ்சாதே அஞ்சினால்.. அடக்கிவிடும்.. .. #அளவோடு_ஆர்ப்பரி .. ஆலஞ்சியார்

Monday, August 19, 2019

சாதிய நிலை மதுவந்தி

ஒய் ஜி.மகேந்திரஅ மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் '' நான் பிராமண பெண் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமா சாதி உள்ளது .அதில் எந்த சந்தேகமும் இலலை என்கிறார். குறிப்பாக பூணூல் எல்லோரும் அணிய முடியாது . அதற்கான முறையான பயிற்சி வேண்டும். வைணவப் பேராசியர் வெங்கிட கிருஷ்ணன் தவறாக ஒன்றும் பேசவில்லை. நிச்சயாக நான்கு பிரிவுகள் உள்ளது. இதில் உசத்தி, தாழ்வு என்ற பிரிவு கிடையாது. எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய முடியாது. சத்ரியன் தான் போர் செய்ய முடியும். பிராமணரால் தான் முறைப்படி பக்குவமாக வேதமந்திரங்களை அதற்குரிய ஒழுங்கு அடிப்படையில் கற்று அதன்படி வாழ முடியும் என்கறார் மதுவந்தி அருண்.. .. சனாதன தர்மப்படி பார்ப்பனர் பிச்சை எடுத்துதான் ஜீவனம் நடத்தவேண்டும் - அதைச் செயல்படுத்தத் தயாரா.. பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில் - என்று சொன்னவர் ஜகத்குரு காஞ்சி சங்கராச்சாரியார் (மகாபெரியவா).. இவர்கள் நடத்தும் கல்விநிலையங்களில் முறைகேடுகள் கட்டண கொள்ளை இதெல்லாம் பிராமணீயம் ஏற்காதே.. வர்ணதர்மப்படி, சனாதன நெறிப்படி, வைதீக வழிப்படி, சத்திரியன், வைசியன், சூத்திரன் செய்யும் தொழில்களை இன்று பிராமணர்களும்'' செய்கிறார்களே; அதைக் கைவிட்டு பழைய முறைக்கே திரும்புவார்களா இந்து சனாதனப்படி, கடல் கடக்கக் கூடாதே; வெளிநாட்டில் கணினிப் பொறியாளர், டாக்டர், ஆடிட்டர் மற்றும் ராஜதந்திர பதவிகளில் இருக்கிறார்கள் இதெல்லாம் விதி மீறல் இ்ல்லையா.. உணவு உடைகளில் கூட பிராமணர்களுக்கென்று தனிஒழுங்கு உள்ளதே .. அதுபோல் தான் மதுவந்தி வகையறாக்கள் இருக்கிறார்களா .. .. வேலைக்கு செல்லும் பெண்களை சாஸ்திரம் விபாச்சாரி என்கிறதே .. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்ற பார்பனர்களின் ஜகத்குரு சங்கராச்சாரியார் சொன்னதை ஏற்கிறாரா.. இவையெல்லாம் மீறப்படலாம் சாஸ்திர வேதங்கள் மீறப்படலாம் ஆனால் வர்ணகோட்பாடு சாதீயநிலையும் வேண்டும் என அதை பெருமையாக சொல்லிக்கொள்கிறார் .. இவரது பாட்டி ராஜலட்சுமி பார்த்தசாரதி இயக்குனர் பாலசந்தருக்கு அளித்த பதிலில் அந்தரங்கம் பட விவகாரத்தில் .. கட்டுபாடுகளும் சம்பரதாயங்களும் மீறப்படுவது காலங்காலமாய் நடப்பதுதான் பணம் புகழ் பதவி நோக்கி நகரும் வாழ்வில் இழப்புகளும் விதி மீறல்களும் (சாஸ்திரம்) ஏற்படுவது தவிர்க்கமுடியாது .. புதியவைகள் புகதான்செய்யும் கலப்பிடமில்லாதது ஏதுமில்லை என்றார்.. தனித்துவம் என்பதும் மூன்று தலைமுறை ஒரே பிரிவில் என்பதெல்லாம் மிகப்பெரிய பொய் .. இதையெல்லாம் ஆய்ந்தால் அதிர்ச்சியே தரும் .. இவையெல்லாம் அறிவார் .. ஆனாலும் தங்களை உயர்ந்தவர்கள் என சொல்லிக்கொள்வதில் கர்வம் .. .. ஆலஞ்சியார்

Sunday, August 18, 2019

ஒப்பில்லா தலைவர்..

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா என சிலர் கூவுகிறார்கள் பரிதாபம் தோன்றுகிறது .. யாரிவர்கள் அரசியல் அறியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நீந்திக்கொண்டே ஆழ்கடலின் ஆழம் தெரியாமல் கதைக்கிறார்கள் .. .. கலைஞரை போன்ற ஒருவரை தமிழக அரசியல் இதுவரை கண்டதில்லை என்ற யதார்த்தம் கூட அறியாத அறிவிலிகள் .. அவரின் நிழலை கூட நெருங்க முடியாதென தெரியாமல் உளறுவது காலக்கொடுமை இந்திய துணைகண்டம் கண்ட ஒப்பற்ற தொலைநோக்கு அரசியல்வாதி சமூகநீதியை கையிலேந்தி பாசிசத்திற்கெதிராக வாள் சுழற்றியவர் .. அவர் தொடாத துறையில்லை பல்வேறு தளங்களில் தன் ஆளுமையை பறைச்சாற்றியவர் ..பன்முக ஆளுமை ஒவ்வொன்றிலும் பேராளுமை .. கொண்ட கொள்கையில் சமசரமற்ற தெளிவான பாதை பகுத்தறிவு பகவலனின் பார்வைகொண்ட அஞ்சாநெஞ்சன்.. இவர் ஆற்றிய சமூக அரசியல்பணிகள் காலங்கடந்தும் இ்ந்தியா முழுவதும் இப்போதும் பேசபடுகிறது.. வியப்போடு அரசியல்நோக்கர்கள், ஆய்வாளர்கள் அறிவுடை சான்றோர்கள் சாமானியர்கள் பார்க்கிறார்கள் இவரின் ஒற்றை வார்த்தை இந்த சமூக அவலங்களை புரட்டி போட்டுவிடும் ஆளும் அரசுகள் நடுங்கும்.. பாசிசம் குலைநடுங்கி நின்றதெல்லாம் வரலாறு .. தெளிவான அரசியல் அரிச்சுவடி இவரை படிக்காமல் அரசியலில் நிலைக்க முடியாது எதிர்த்தோ ஆதரித்தோ தான் இந்திய அரசியலே ஐம்பதாண்டு நகர்ந்தது .. உள உறுதியோடு ஜனநாயகதிற்கெதிரான செயல்கண்டு அஞ்சாமல் எதிர்த்துநின்று போராடும் குணம் .. இந்திய அரசியலிலேயே இப்படியொரு தலைவனை காண்பதறிது .. விமர்சனங்களை காழ்ப்புணர்ச்சிகளை கண்டு அலட்டிக்கொள்ளாமல் "அறம்வெல்லும்" என்று நடைபோட யாரால் முடியும் .. எத்தனை சூழ்ச்சிகள்,துரோகங்கள் அத்தனையையும் தன் அறிவால் வென்றவர் .. இவரோடு ஒப்பீடென்பதே அறியாமையில் வருவது .. .. திருமா என்றில்லை யாராலும் நிரப்ப முடியாது ஆர்வமிகுதியில் உளறுவதை திருமாவே விரும்பமாட்டார் .. சனாதன எதிர்ப்பில் உறுதியும் பகைவரையும் எதிர்கருத்தாளர்களையும் மதித்தல் என சிலவிடயங்களில் கலைஞரை ஒத்திருக்கிறார் மறுப்பதற்கில்லை கலைஞரின் பாதிப்பில்லாமல் எந்தவொரு அரசியல்வாதியும் இல்லை .. சனாதன எதிர்ப்பென்பது தான் அவரது அடிப்படை அரசியல் சாதீய அடுக்களுக்கெதிரான போராடல் .. திருமாவின் அரசியல் என்பது சமூகநீதி அமர்ந்து பயணித்தாலும் சாதீய குறுக்கீடுகளிலிருந்து மீறி வர எக்காலத்திலும் முடியாது இன்றைக்கும் இதுதான் நிலை என்பதை அனைவரும் அறிவர் அதையும் மீறி கொண்டாட என்ன காரணம் .. ஒடுக்கபட்ட மக்களின் குரலாய் இருப்பதுதான் ..நிறைய பேர் தலித் அடையாளங்களோடு வந்தாலும் குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி பயணிக்க முடியவில்லை அதை திறம்பட கையாண்டாடு தம் மக்களால் கொண்டாடப்படுகிறவராய் இருப்பது தான் திருமாவின் வெற்றிக்கு பின்னில் .. தனித்து களம் கண்டால் நிலைமை வேறுமாதிரியாகவே போகும் இதையெல்லாம் அறியாதவர்களில்லை ஆனாலும் புகழ வேண்டுமென்பதற்காக எதையாவது சொல்லி வைப்போமென கதையளக்கிறார்கள் .. .. கலைஞர் பெருமகனிடத்தில் ஏன் நீங்கள் பிரதமராக கூடாது என கேட்டபோது "என் உயரம் எனக்கு தெரியும் " என்றார் .. அதே தான் ஒவ்வொருவரும் அவரவர் உயரம் அறிந்திருந்தல் நன்று .. .. ஆலஞ்சியார்

Saturday, August 17, 2019

மாறன் திருமா

இன்று இவர்கள் பிறந்தநாள் மாறன் திருமா.. .. திராவிட அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் மாறன் திமுகவின் இயக்கசெயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர் .. அண்ணா முதல்வரான பிறகு அந்த இடத்தை (நாடாளுமன்றஉறுப்பினர்) நிரப்ப மாறனை தான் தேர்வு செய்தார்.. ராஜாஜியும் காயிதே மில்லத்தும் தான் இவரை முன்மொழிந்தார்கள்.. நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் முறைப்படுத்தவும் காரணமானவர்.. சிறந்த படிப்பாளி பன்முகதிறமையாளர் இவர் இயக்கிய மறக்கமுடியுமா திரைப்படம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.. மிசாவில் சிறையிலிருந்த போது திராவிட இயக்கவரலாறு என்ற சிறப்புமிக்க வரலாற்றுநூலை எழுதினார்.. கலைஞரின் மனசாட்சியென அறியப்பட்டவர்.. .. திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக போர்வாளாக வலம் வந்தாலும் முதலில் இவர் இருந்ததென்னவோ திமுகவில் தான்.. ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் பேராசிரியர் பெருந்தகை என்ன செஞ்சுகிட்டு இருக்கே என்ற போது லா படிக்கிறேன் என்றார் முதல்ல படி பிறகு பார்க்கலாமென்றார்.. அப்போது சென்றவர் தான் தன் சமுதாயமக்களின் நலனுக்காக ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் .. .. நிறைய விமர்சனங்கள் இருவரின் மீதும் உண்டு மாறனின் சில தவறான முடிவுகளால் பாசிச சக்திகளோடு கைகோர்க்க, சில அருவறுப்புகளை ஆட்சியில் அமர்த்த வேண்டியிருந்தது .. சுப்ரமணி அய்யர் மகள் மல்லிகாவை மணந்தும் தன் இருமகன்களுக்கு குடகுவிலிருந்து காவேரியையும் தி இந்து விலிருந்து ப்ரியாவையும் கொண்டுவந்தாலும் திராவிட கொள்கைகளில் சமூக சமதர்ம கோட்பாடுகளில் கடைசிவரை இருந்தார் திராவிட சிந்தனையோடு செயல்பட்டார்..தொலைகாட்சி ஊடகத்தில் வெற்றிகொடிகட்டிய முதல் தமிழன் .. அவருக்கு பிறகு சன்குழுமம் பார்பனப்பார்வையிக்கு சென்றதை மறக்கமுடியுமா.என்ன .. இவரின் சமூக பங்களிப்பும் புறந்தள்ளிவிட்டு திராவிட வரலாற்றை எழுத முடியாது.. .. திருமா ஆரம்பகாலங்களில் இருந்த திடம் இப்போதெல்லாம் இல்லை நிறைய சமசரங்களை செய்துக்கொள்கிறார்.. சிலரோடு சேர்ந்து சில தவறாக முடிவுகளை அவசரகதியில் எடுத்ததின் விளைவு இன்றைய அவலங்களுக்கு காரணமென்பதை மறந்துவிட முடியாது.. இன்றைய தமிழக அவலங்களிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிற செயல் பாராட்டுக்குரியது அடங்கமறு அத்துமீறு என்ற ஆரம்பகாலங்களில் பயணித்தாலும் இப்போது மிகவும் பக்குவப்பட்டவராக தமிழக அரசியலில் பயணிக்கிறார்.. இவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து சாதிய தலைவராக காண முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.. நல்ல இளந்தலைவர்கள் வரிசையில் இவர் பெயரும் இடம் பெறும்.. கால்நூற்றாண்டு தமிழக அரசியலில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தவர் இவரை மறுத்தும் தமிழக அரசியல் இல்லை.. .. இருவருக்கும் இன்று பிறந்தநாள்.. மாறனை நினைவுகூறுவோம் திருமாவை வாழ்த்துவோம்.. .. ஆலஞ்சியார்

Friday, August 16, 2019

ரஜினியெனும் மாயை

ரஜினியை வைத்து தமிழ் நாட்டில் கால்பதிக்க அமித்ஷா திட்டமிடுவதாக செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன.. அமிர்ஷா நாங்கள் நினைத்தால் ஒரு பொய்யை கூட அதிகளவில் பரப்ப முடியும் சமூகவலைத்தளங்களில் முன்று கோடி பேரை இதற்காகவே வைத்திருக்கிறோம் என்கிறார் உண்மையில் அடிக்கடி பொய்களை மட்டுமே பேசி வரும் எச்.ராசா தமிழிசை அர்ஜூன் சம்பத் பொன்னர் மற்றும் பார்பன கும்பல் ஊடகமென்ற பெயரில் ரவீந்திரன் போன்றோர் அதைதான் செய்துவருகிறார்கள் .. தமிழகத்தில் சாத்தியமா என்றால் கொஞ்சம் புளிக்கும் .. ரஜினி காந்த் அரசியல் கட்சி தொடங்கினாலும் அதற்கான சாத்தியம் நிச்சயமாக இல்லை என்பதை நாம் உறுதியாக கூற முடியும். 1972ல் எம் ஜி ஆர் அரசியலில் கால்பதித்த காலத்திற்கு பிறகு ஆந்திராவில் என் டி ராமராவ் சினிமா கவர்ச்சியின் மூலம் வெற்றி பெற்றார். அன்றைக்கு சினிமா மீதான மோகம் கதாநாயகனென்றால் நல்லவன் என நம்பிய பிம்பமெல்லாம் அடித்து தூள்தூளாகிவிட்டது .. அதனால் தான் தமிழ் நாட்டில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன்.. ஆந்திராவில் சீரஞ்சிவி உட்பட யாரும் வெற்றி பெறவில்லை. ஒரு வேளை ரஜினி காந்த் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெறலாம் ஆனால் நிச்சயமாக சில தொகுதிகளை கூட அவர் பெறுவது கூட கடினம் அவரே தோற்க கூட செய்யலாம் பிராமணர்கள் வாழும் மயிலாப்பூரை அவர் தேர்வு செய்தால் கட்டிவச்ச காசு மிஞ்சலாம் அதிலும் பாஜகவோடு கூட்டென்றால் கட்டிய கோவணமும் பறிபோகும் நல்ல மரியாதையை.. நடிகராக அவர் அடைந்த புகழ் பணம் எல்லாம் போகும் .. வியாபார ஊக்தியோடு அரசியல் செய்தாலும் பணத்தை காத்துக்கொள்ளலாமே தவிர மற்ற எல்லாம் போகும்.. இந்த நிலையில் தமிழ் நாட்டில் பாஜக ஆட்சி என்பது கனவு .. .. அதிமுகவில் பன்னீரும் மகனும் பாஜக வில் இணைந்து விட அதிக வாய்ப்பு உள்ளது .. எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்படலாம் சசிகலா வந்தவுடன் நடப்பதற்கான ஆயத்த கூறுகளை அறியமுடிகிறது .. ரஜினி பாஜகவோடு சேர விரும்பமில்லை என்றே தெரிகிறது அவரது உற்ற நண்பர் வி.சி.சண்முகம் பாஜகவே எனது தோல்விக்கு காரணம் என சொன்னது கூட ரஜினியின் அறிவோடுதான் என்கிறார்கள் .. ரஜினியின் அரசியல் கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் எதிர்வினையை தருகிறது .. பணமதிப்பிழப்பாகட்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு .. கஷ்மீர் 370 பின்வழித்தல்.. போன்றவற்றில் அவரது கருத்து தெளிவின்மையையே தருகிறது .. முழுமையான அரசியல் அறிந்திராதவராக .. இந்திய தமிழக அரசியலின் வேறுபாடுகள் இணைந்து செயல்படும் சாத்தியகூறுகளைப் பற்றிய அறிவில்லாதவராகவே தெரிகிறார் .. தமிழர மண்ணில் பக்தியும் பகுத்தறிவும் சேர்ந்த நேர்கோட்டு பயணம் சில நேரங்களில் எதிரிகளுக்கு புரியாததாக தெரியும் .. தனிப்பட்ட வாழ்வில் பக்திபழமாக தெரிகிறவன் கூட அரசியல் தெளிவும் திராவிடமே நம்மை காத்துநிற்கும் சுயமரியாதையாக வாழ வழிவகை செய்யும்.. நமது உரிமை காக்கும் போராடி தரும் ..எல்லைச்சாமியை போல் பாசிசத்தை அண்டவிடாமல் அரணாய் திகழும் என உறுதியாய் தெரிந்து வைத்திருக்கிறவன் .. அத்திவரதரை தரிசித்தாலும் .. எங்கள் #புத்திவரதரை தானே அப்பனென்று அழைக்கமுடியும் கும்பிட முடியுமென ஊருக்கு பறைச்சாற்றியவன் தமிழன் .. இன்று பெருமையோடு செருக்கோடு சுயமரியாதையோடு அறிவோடு வலம் வர முடிகிறதென்றால் பேராசான் பெரியார் செதுக்கிய /பயணித்த / வழிநடத்திய பாதையே சரி என்ற தீர்மானமான எண்ணம் மக்களிடையே இருப்பதுதான் .. அதனால் தான் விழிப்புணர்வோடு கேளிக்கைகாரர்களை துரத்திவிட்டு கொள்கைகாரர்களை தேர்வு செய்கிறார்கள் .. இதை கொஞ்சம் உணர்ந்திருப்பதால் தான் ரஜினி அஞ்சுகிறார் .. மதிப்பிழந்து கெட்டழிய நேரிடும் என்று உணர்ந்து தவிர்க்கிறார் .. வலுகட்டாயமாக மிரட்டி வரவழைத்தாலும் அதிவேகம் அரசியலில் கரைந்துபோவார்.. .. ஆலஞ்சியார்

Tuesday, August 13, 2019

எடப்பாடி

விமர்சிப்பதெற்கு தகுதி வேண்டும் அதைப்பற்றிய அல்லது அவரைப்பற்றிய அறிவு வேண்டும் சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம் தான் தங்கள் அறிவு என்பது தெரியும் பிறகெதற்கு தரகுறைவான விமர்சனம் பூமிக்கு பாரம் .. .. எல்லோரும் பாரம் தான் இந்த மண்ணில் செத்து விழுந்து மக்கி மண்ணாகி போகிறவர்கள் தான் வாழும் போது என்ன சாதித்தோம் எதை செப்பனிட்டோம் வாழும் தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் எதாவது மிச்சம் வைத்தோமா .. அறிவுடைச் செயலால் ஏதேனும் சொல்லிவிட்டு போனோமா என்றிருக்கவேண்டும் .. யாரை விமர்சிக்கிறோம் அவரது ஆளுமை என்ன அவரின் கடந்தகால சிறப்பென்ன என்ன அவர் ஆற்றிய பணி நாடாளுமன்றத்தில் அவரின் செயல்பாடுகள் அமைச்சராக அவர் செய்த பணிகள்/திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவகையில் உதவியது .. என்றெல்லாம் பார்த்தால் எடப்பாடி வாய்மூடி மௌனம் காக்கவேண்டிவரும் .. அவரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கவே கூடாதா என்றால் அப்படி இல்லை எதற்கும் லாயக்கில்லாத அரைகுறைகள் விமர்ச்ப்பதுதான் சகிக்கவில்லை .. ஒரு முறை அவர் சொன்னார் நான் பொருளாதார நிபுணர் இல்லை நிபுணரென்றால் அது டாக்டர் மன்மோகன் சிங் தான் நான் நிர்வாகி என்றார் அது தான் தன்னடக்கம் .. .. யாரிந்த எடப்பாடி அவரின் அரசியல் செயல்பாடுகள் இதற்கு முன்பு பேசபட்டிருக்கிறது .. முப்பது அடிமைகளில் ஒரு அடிமை அவ்வளவுதான் ..ஓபிஎஸ் மௌனம் காத்திருந்தால் சகிகலா கண்ணில் தெரிந்திருக்கவே மாட்டார் சகிகலா தயவில் கால்நக்கி வந்தவர் பதவி வந்தவுடன் மத்திய எஜமான விசுவாசத்தை காட்டி குலைந்து நின்று தன்னை உயர்த்தியவரை முதுகில் குத்தி அதிகார மோகத்தில் ஆடுகிறார் .. மத்திய அரசின் கடைக்கண்பார்வை கொஞ்சம் மாறினால் காலமெல்லாம் கழி தின்ன நேரிடும் .. .. ப.சி அரசியல்வாதியாக தன் திறமையை பலமுறை நிரூபித்தவர் தெளிவான பேச்சாற்றல் அறிவார்ந்த சொல்/செயல் ஆதாரங்களோடு தவறுகளை சுட்டிகாட்டும் திறமை ஆட்சியில் பதவியில் இருந்தபோதும் இல்லாது எதிர்வரிசையில் இருந்தபோதும் அவரின் சொல் இந்த நாட்டிற்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது அரைகுறையாய் பேசி திரிந்ததில்லை அவர் .. நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை இன்னும் போய் பார்க்ககூட இல்லை .. ஸ்டாலின் ₹10 கோடி எம்பிக்கள் நிதியிலிருந்து தந்தால் அதை வைத்து என்ன செய்வதென்கிறார் உண்மையில் முதல்வர்தானா.. சென்ற ஆண்டு உடைந்த முக்கொம்பு அணை இதுவரை கட்டபடாமல் நீர் வர தொடங்கியவுன் கட்ட தொடங்குகிற அதிமேதாவி ‍.. மத்திய அமைச்சர் கை நீட்டி பேச முதல்வர் அறையில் எழுந்துநின்று பதலிளிக்கும் கோழை .. தன்மானமில்லா கொள்கையில்லாத அரைவேக்காடு .. ப.சிதம்பரத்தை பேசுவதெல்லாம் கொடுமை .. .. கனிமொழி சொன்னதைப் போல தமிழ்நாட்டிற்கு யார் பாரமாக இருக்கிறார்களென மக்களுக்கு தெரியும் .. .. ஆலஞ்சியார்

Sunday, August 11, 2019

ரஜினி பாசிச நரி

ரஜினி கருத்து விவாதமாகியிருக்கிறது .. அரசியல் தெளிவற்ற அவரின் பார்வை நமக்கு புதிதல்ல .. அவர் நிழல் கூட பார்பன கரிசனம் கொண்டதாகதான் இருக்கும் .. அவரை உயர்த்தி பிடிக்கவேண்டிய கட்டாயம் பாசிசத்திற்கு தேவை ,ொ அவரின் சினிமா இமேஜ் கவர்ச்சி கைக்கொடுக்கும் என இன்னமும் நம்புகிற நிலையில் ஊடகங்கள் அவரை வலுகட்டாயமாக உயர்த்திபிடிப்பதும் அவர்களுக்கு தரப்பட்ட வேலையை அவர்கள் சரியாக செய்கிறார்கள் அவ்வளவுதான் .. .. பார்பனர்களின் நவீன அரசியல் குரு. துக்ளக் குருமூர்த்தி ஒரு புறம் மோடி மறுபுறம் ரஜினி படம் வைத்தால் போதும் தமிழகத்தை வென்றுவிடலாமென பேசியும் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை .. வேறுவழியின்றி கமலை களமிறக்கி மயிலாப்பூர்வாசிகள் வாக்குவங்கியை தவிர வேறெதையும் அசைக்கமுடியவில்லை என்ற அறிவுபிடிபட பிக்பாஸோடு காலம் தள்ளுகிற நிலை.. தமிழக அரசியல் களமென்பது விவரம்தெரிந்தவர்கள் ஏனென்று கேள்வி எழுப்பும் சுயமரியாதைகாரர்களால் பக்குவபடுத்தபட்டிருக்கிறது பெரியாரெனும் பெரும்மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை விதைத்துவிட்டு போயிருக்கிறார் .. கருத்துவேறுபாடு கோபம் என மாறுபட்டு நின்றாலும் பாசிச எதிர்ப்பில் பார்பன எதிர்ப்பில் தன்னை கீழ்படுத்தும் தன் உரிமையை பறிக்கும் ஆரிய போக்கில் கடும் எதிர்ப்பாளனாக எப்போதும் ஏற்காதவனாகவே இருந்துவந்திருக்கிறான் இனியும் அப்படிதான் .. .. ரஜினியை தூக்கிபிடித்து வரும் பார்பனர்கள் இதை உணர்ந்தே இருக்கிறார்கள் ரஜினியால் எதையும் பிடுங்க முடியாதென அறிவார்கள் ஆனால் திராவிட இயக்கத்திற்கு மாற்றை கொண்டுவர ஏதெல்லாம் வழிகள் உண்டு என தொடர்ந்து பயணித்து கொண்டே இருப்பார்கள்.. திமுகவை உடைத்து பார்த்தார்கள் உடைந்து வந்தவன் கூட திராவிடத்தை விட்டு விலகினால் மக்கிபோவோமென என்பதை உணர்ந்து விழித்துக்கொண்டான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே இதற்கு சாட்சியம் வகிக்கிறார்கள் ரஜினியின் தெளிவற்ற இந்த பார்வை/பயணம் கரைசேர்க்காது என்பதை யாவரும் அறிவர் .. .. ரஜினி பணமதிப்பிழப்பின் போது புதிய இந்தியா பிறந்ததென பிதற்றியவர்தான் ..இப்போது கஷ்மீர் விடயத்திலும் அமிர்ஷாவை புகழ்கிறார் அர்ஜூனன் கிருஷ்ணனென .. பாவம் அவருக்கும் பசிக்குமில்ல இல்லையெனில் வருமானவரி ரெய்டு வரலாம் அமிர்ஷா இப்போது யாரென்று தெரிகிறதென்கிறார் இவரின் முகம் தமிழகம் அறிந்தது தான்..அரசியல் தெளிவற்றவர் சமூகநீதிக்கெதிரானவர் .. பார்பன நலம்விரும்பி மநுநீதிக்கு ஆதரவானவர் ..உள்ளத்தில் ஆர்எஸ்எஸ் எனும் விஷமேறிய சித்தாந்தத்தை கொண்டவர் பார்பனீயத்தின் நிழல் .. .. சினிமா கவர்ச்சி என்பதெல்லாம் 90 களிலேயே கைக்கொடுக்கவில்லை சினிமாவெனும் மாயபிம்பம் உடைத்தெறியபட்டு வெகுகாலமாகிறது தெளிவற்று வந்தால் இருந்த இடம் தெரியாமல் போய்விட நேரிடும் ..மதமோ ஜாதியோ உயர்த்திபிடித்தால் உள்ளதும் போகும் .. இங்கே திராவிட இயக்கங்கள் மீது பிணக்கு வந்திருக்கிறது வெறுப்பு வந்ததில்லை இதையெல்லாம் உணர்ந்தால் நல்லது .. இந்த அடிமைகளை வைத்து நீண்டநாள் பயணிக்க முடியாதென்பதை உணர்ந்து வேறொரு முகத்தை கொண்டுவர திட்டமிடுகிறது மக்கள் எச்சரிக்கையாகதான் இருக்கிறார்கள் என்பதை பொதுவெளியில் உணர்த்துகிறார்கள் .. நடிகர் விஜய்சேதுபதிக்குள்ள அரசியல் தெளிவு கூட ரஜினிக்கு இல்லை என்று நிறைய குரல்களை கேட்க முடிகிறது இது தான் தமிழகம் .. .. எச்சரிக்கை: பாசிச நரி எட்டிபார்க்கிறது .. ஆலஞ்சியார்

Saturday, August 10, 2019

தமிழிசை இம்சை

திமுகவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழிசை.. சில நடுநிலைவாதி..? களும் இதே கருத்தை சொல்லி வருகிறார்கள் .. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு வாக்கு வித்தியாசம் என்றாலும் அது வெற்றிதான் .. அதிபர்முறை தேர்தலில் தான் 50% விழுக்காடு வேண்டுமென்று முதல் இரண்டு இடம் பிடித்தவர்களை மீண்டும் மக்களிடையே வாக்கு கேட்க செய்வார்கள் ஈரான் போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது .. வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் மனபக்குவம் வேண்டும் ..குறைவான வாக்குகளில் தோற்றவர்களையும் வென்றவர்களை நாடு கண்டிருக்கிறது .. .. சென்ற சட்டமன்ற தேர்தலில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 30 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றிப்பெற்ற போது யாரும் அதை தோல்வி என்று சொல்லவில்லை .. எம்ஜிஆர் (ம.கோ.ரா) உடல் நலியுற்றிந்த போது 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அறுபதுமேற்பட்ட இடங்களில் வென்றார்.. இதெல்லாம் அவசரகதியில் அரைகுறை தெளிவில் அரசியல் செய்பவர்களுக்கும் ஊடகவியலாளர் என்றால் என்னவென்றே தெரியாத நேர்மையாளர்களுக்கும் தெரியாது .. தமிழிசை ஜெயகுமார் போன்றவர்கள் மைக் கிடைத்தால் எதையாவது உளறவது வாடிக்கையாகிவிட்டது தெளிவற்ற அரசியல் பார்வை கொண்ட நடுநிலையாளர்கள் கடந்தகால அரசியலைப்பற்றி அறிவற்றவர்களின் உளறல்கள் நிறைய கேட்க முடிகிறது .. .. சென்ற தேர்தலை விட திமுக பெற்று இருக்கும் வாக்கு விகிதம் கூடுதல் என்பதும் ஏ.சி.சண்முகம் கடந்த தேர்தலில் தனி செல்வாக்கோடு பெற்ற வாக்குகள் எண்ணிக்கையோடு அதிமுக வாக்குகளை சேர்த்தால் சில லட்சம் வித்தியாசங்களில் வென்றிருக்கவேண்டும் .. அதே நேரம் திமுக இன்னும் அதிக வாக்குகளை பெற்று வென்றிருக்கவேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை .. எங்கு தவறு நடந்ததென திமுக பரிசோதனை செய்யவேண்டியதும் அவசியம் .. .. ஏதாவது ஒரு இடத்தில் வென்றுவிட்டு வந்து கருத்து சொல்லட்டும் என்ற கனிமொழியின் கருத்து கடந்து போக முடியவில்லை ஏனெனில் எதற்கெடுத்தாலும் தாங்கள் மட்டுமே தெளிவுள்ளவர்கள் தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்கிற மனபான்மையோடு மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால் எதைச் சொன்னாலும் ஊடகம் அதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என்பதால் உளறிவைக்க கூடாது .. கருத்து சொல்வதற்கு உரிமை உண்டெனினும் பொய்களும் போலித்தனமும் உளறலும் கருத்தாக கொள்ளமுடியாது .. ஒருதலைபட்ச செயல்பாடுகள் நடுநிலை என்பதும் அதை ஊடகங்கள் தொடர்ந்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு பேராபத்து .. .. அரிசயல் தெளிவற்றவர்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது .. தமிழகம் போன்ற நேர்கொண்ட அரசியல் பார்வை கொண்ட தமிழகத்தில் திட்டமிட்டே இது போன்று உளறல்களையும் அரைகுறைகளையும் உலவவிடுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது தொடர்ந்து இது போன்று திரும்ப திரும்ப பேசினால் இது தான் அரசியல் என நம்ப வைக்கமுடியுமென எண்ணுகிறார்கள் .. ஆனால் அதற்கான இடம் இதுவல்ல என்பதும் தமிழிசை எச்.ராசா சர்மா பொன்னர் போன்றவர்களை நகைப்பிற்குரியவர்களாகவே தமிழகம் பார்க்கிறதென்பதும் தான் உண்மை.. பேராசான் பெரியாரின் பணி அப்படி .. திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளும் தெளிவான அரசியலும் இதுபோன்ற அரைகுறைகளால் ஒன்றும் செய்திட முடியாது .. வேண்டுமானால் உளறி திரியலாம் .. தமிழிசை இம்சை .. .. ஆலஞ்சியார்

Friday, August 9, 2019

நன்றி வேலூர்

வேலூர்.. நம்மை நாமே பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும் .. அலட்சியம் கவனகுறைவு வெற்றி கிடைத்துவிடுமென்ற திமிர் உழைப்பவனை அரவணைக்க தவறுதல் இவையெல்லாம் வருங்காலங்களில் தவிர்க்கவேண்டியதை உணர்த்திய தேர்தல் இது பொது தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்துவிட்டார்கள் இதிலும் அது கிடைத்துவிடும் என்ற இறுமாப்பு சறுக்கலுக்கான காரணம் .. எதிரிகளின் பலம் செயல்பாட்டை கூர்ந்து கணிக்க தவறியதும் பெரும் பின்னடைவுக்கு காரணம் .. உண்மையில் இதுபோன்ற ஒரு நிகழ்வு கட்சிக்கு தேவை உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அலட்சிய போக்கு தான் தோன்றித்தனம் எதிரியை எள்ளல் செய்வது தளபதி உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்லாதது யாரை புறக்கணிக்காமல் அரவணைத்து அழைத்து செல்லவேண்டியவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தது இந்த நிலைக்கு காரணம் துரைமுருகனின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை தொண்டர்களை அரவணைக்கும் செல்லும் பழைய நிலையை மறந்து போனார் அலட்சியமாக எண்ணுகிற போக்கு.. தொண்டன் வந்து பொன்னாடை தந்தால் அதை உடன் சாரதியிடம் தருகிற நிலை உயரத்திற்கு வந்த பிறகு ஏற்பட்டது சென்ற தேர்தலில் வாக்குகளை விட அதிகவாக்குகளை பெற்றிருந்தாலும் ஏசிஎஸ் பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலில் தனித்து 3லட்சத்திற்கு மேல் வாங்கிருந்தார் அதிமுகவோடு சேரும் போது அது அதிகரிக்கும் என்ற யதார்த்ததை உணராமல் அதற்காக வழிகளை ஆராய தவறியதெல்லாம் ஆய்வு செய்திட வேண்டும் வேலூர் வாணியம்பாடி ஆம்பூர் சிறுபான்மையினரின் பேராதரவு நிலையை மெச்சபடுத்தி வெற்றிக்கு வழிவகுத்தது .. .. தளபதி தனி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது வரும் காலங்களில் தேர்தலில் செயல்பாடுகளில் புதிய உக்தியை கையாளவேண்டும் வெற்றி பெறும் தொகுதிகள் இழுபறி தொகுதிகள் கைகொடுக்காதென்ற தொகுதிகள் சமமான தொகுதிகளென பிரித்து இப்போதிலிருந்தே பணியை தொடங்கிட வேண்டும் .. தொடர்ந்து காட்பாடியில் வெற்றி பெறும் துரை ஆரம்பத்திலிருந்தே தொகுதி நலனில் அக்கறையை கொண்டவராக இருந்ததைப்போல தன் முதல் வெற்றி பயணத்தை தொடர்ந்து நிலைநிறுத்த கடுமையாக உழைக்கவேண்டும் .. கழக உடன்பிறப்புகளோடு நல்லதொரு தொடர்ப்பை நட்பை தொடர்ந்தாலே நல்லது துரை மகன் என்ற தகுதி மட்டுமே கரைசேர்க்காது உழைப்பே மக்கள் சேவையே உயர்வை தருமென்ற சிந்தையோடு கடின உழைப்பை வழங்கிட வேண்டும் .. தொடர்ந்து வெற்றியை தரும் தமிழக மக்களுக்கு நன்றி! தளபதியின் தலைமையில் நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழகம் .. நம்பிக்கை வீண்போகாதென்ற உறுதிமொழியை தருகிறோம் .. நன்றி வேலூர் .. ஆலஞ்சியார்

Wednesday, August 7, 2019

மு.க.

என்பதாண்டுகாலம் எமை சூழ்ந்த காரிருளை நீக்கிய சூரியனே உழைத்து உழைத்து களைத்து போய்விட்டாயா இனியேனும்.. தம்மை காத்துக்கொள்ள தம்பிகளே தயாராகிக்கொள்ளுங்களென சொல்லி ஓய்வெடுக்கிறாயா.. நீச்சல் கற்று கொள்ளும் வரை தான் கட்டுமரம்.. இனி.. எதிர்நீச்சல் போடு என சொல்லாமல் சொல்லி போனாயா.. .. அய்யனே.. அமுதே.. அழகுகோனே.. அமிர்தமே.. அன்பே.. எமதருமை தமிழே எமதாளுமையே.. ஆசானே என்ன அவசரம்.. நூறை கடக்க இன்னும் சில ஆண்டுகள் தானே அதற்குள்.. என்ன அவசரவேலை.. என் உயிரை யாராலும் பறிக்க முடியாதென்றாயே.. யாசித்து பெற்றால்தான் உண்டென்றாயே.. வாசில் நின்று அழுது யாசித்தானா.. கொடுத்துவிட்டாயா.. ஒராண்டாகிவிட்டதே ஒருநாளும் உம்மை மறவாமல் தமிழகம் என்ன மாயம் செய்தாய் தினம் தினம் அணிவகுக்கிறார்கள் நன்றிகடன் செலுத்த.. .. தன் இறகை கொண்டே கூடு கட்டும் பறவைப்போல உன் நினைவுகளால் கவிதை கட்டுகிறேன்.. பெரியாரின் பெருஞ்சீடனே.. ஆசானை மிஞ்ச கூடாதென்று முப்பத்தி மூன்றுநாள் முன்னதாகவே சென்றுவிட்ட மூப்பனே.. எம் இன காவலே.. தேன் மதுர சொல்லெடுத்து எதிரியையும் மயக்கும் பேராற்றலே ஏழைக்கும் இன்பவாழ்வளிக்க எந்நாளும் சிந்தித்த செம்மலே.. .. எங்கள் சூரியனே.. எதிரிகளை சுட்டெரிக்கும் உன் பேச்சு.. உன் இருப்பு எம் பகைவரை இருப்புகொள்ளாமல் தவிக்க வைத்ததே.. இனி .. நீ கற்று தந்ததை நாங்கள் சுழற்றுவோம்.. பெரியாரின் சீடரே பேரறிஞரின் தம்பியே.. எம் இனத்தின் காவலே.. நின் பணி தொடர்வோம்.. நீ.. வகுத்து தந்ததே எமது பாதை.. நீ.. மறையவில்லை காலமாய் எம்மோடு இருக்கிறாய்.. .. எங்கள் வானில் நிரந்தர சூரியன்.. நீ.. அதன் ஒளி போதும் எம்மை அண்டவரும் கயமையை வேரறுப்போம் உன் அடிச்சுவட்டில் எமது பயணம் .. அதுவே எமது பாதை பாசிசம் கண்டு அஞ்சும் பாதை .. நீ.. தொடாத உச்சமில்லை. இனி எவரும் உன் உயரத்தை தொட போவதுமில்லை.. உன் உச்சம் இயற்கை தந்தது.. .. நன்றி!.. மு.க.. இத்தனை காலம் காவலாய் நின்றெமை காத்தமைக்கு.. .. ஆலஞ்சியார் #Thankyou_MK #Thankyouகலைஞர்

Tuesday, August 6, 2019

எம் தலைவ..

கலைஞர் எனும் ஆளுமையை இரு கூறுகளாக பிரித்துபார்த்தால் அவர் ஆற்றிய தொண்டு சமூகநலன் கொண்டதாகவே இருக்கும் மற்றொன்று அவரின் அரசியல் சாணக்கியம்.. சமகாலத்தில் இந்திய துணைகண்டம் கண்டிராத அதிசயமாக அமையும், ஒவ்வொரு விடயத்திலும் பகுத்தறிவு துணைக்கொண்டு மிக சாதூர்யமான காய்நகர்த்தல் ..ஒரிரு வார்த்தைகள் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்து புதியதொரு பாதையை வகுத்து தந்துவிடும்.. காலம்கடந்தும் செயல்படுகிற தேவைபடுகிற திட்டங்களாக அமைந்திடும்..52 ல் திரைபடத்தில் மனிதனை மனிதன் இழுக்கலாமா என்று கேள்வி கேட்டு ..நீங்க சென்னை மேயரா வந்தவுடன் மாத்திடுங்க என்பார் .. ஆம் எழுபதுகளிலேயே மாற்றி சாதனை புரிந்தவர் இந்தியா நடப்பிலாக்க 30 ஆண்டுகள் ஆனது.. இதொரு எடுத்துக்காட்டுதான்.. .. தமிழக அரசியலை துல்லியமாக கணித்தவர்.. எந்தவொரு அமைப்போ கட்சியோ ஆரம்பிக்கும் போது சுருக்கமாக சிலர் வார்த்தைகளில் கருத்திடுவார்.. மதிமுகவிற்கு மறுபடியும் திமுக என்றார்.. அதிமுகவை பற்றி பேசும் போது. நடிக்கருக்கான கட்சி சினிமா கவர்ச்சி கட்சி மேக்கப்பில் ஜொலுக்கிறது கொள்கை எனும் ஆணிவேர் இல்லை காலம் கடந்து நிற்காது கலைந்து மறைந்து போகும் என்றார் சிங்கத்திற்கு முன் "அ"சேர்த்தால் அசிங்கம் என்றார் .. அதிமுக அசிங்கபட்டு நிற்கிறது .. அவர் கடைசி வரை அண்ணா திமுக என்று அழைத்ததே இல்லை அதிமுக என்றுதான் பேசுவார்.. .. எத்தனை நிதர்சனம் எவ்வளவு துல்லியமான கணிப்பு ஆம் எம்ஜிஆர் தனது அபிமானத்திற்காக தொடங்கபட்ட கட்சி அது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தது எழுபதுகளில் சினிமாவின் தாக்கம் தமிழக மக்களை மையம் கொண்டிருந்த காலம்.. சினிமாவை பொழுபோக்காக காணாமல் வாழ்வியலாக நம்பிய ஜனங்கள் நடிப்பை நிஜமென்ற நம்பிய மக்கள் அரிதாரம் பூசியவன் ஆண்டவனாக நடித்தாலும் அவன் ஆண்டவனில்லை என்கிற யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாத காலமெடுத்தது.. வேசம் கலையுமென்பதை மக்கள் உணர்ந்தபோது மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது .. இப்போது கூட கவர்ச்சியை தேடுகிற தனிமனித மோகத்தை தலைமையேற்க கெஞ்சுகிற சூழல் வரலாம் .. திமுகவின் கொள்கையெனும் ஆணிவேர் ..மக்களின் இதயங்களில் பதிந்ததால் தான்.. நிறைய வேறுபாடுகளிலும் திமுக தொடர்ந்து நிற்க முடிகிறது..எத்தனை விதமான எதிரிகள் அருகிலிருந்து அன்பாய் நடித்தவன் குரல்வளையில் கத்திவைக்கிற போதும் ஆணிவேர் வீழாது காத்துநின்றது.. அரசியலில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதென்றாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இயக்கம் ஒடுக்கபட்ட சமூகத்தை கை தூக்கிவிடவும் பிற்படுத்தபட்டவனின் உரிமைகளை காத்து ஆதிக்கம் செலுத்துவோரின் கோரபற்களை பிடிங்கி எறிந்தும்.. பாசிசத்தின் கோரதாண்டவத்தின் நிழல்கூட பாடாதவாறு காத்துநிற்க முடிந்தது.. தனிமனிதனை நம்பி அல்ல இயக்கம் இங்கே கொள்கை மறவர்கள் சமூகநீதியை பற்றிபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் சரியான நபரை காலம் தேர்வு செய்கிறதே தவிர யாரையும் யாரும் இங்கே எடுத்தியம்ப முடியாது.. கருத்துசுதந்திரம் இங்கே பேணபடுகிறது அடிமைகளை வளர்த்துவிடவில்லை.. முரண்பட்ட கருத்தாயினும் இயக்கத்தில் பொதுவெளிகளில் விவாதங்களில் வைக்கமுடியும்.. தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து சுதந்திரமாக யாரும் கருத்திட முடியும்.. எதிராளிகளின் கருத்தை கூட காதோர்க்கும் கண்ணியம் இங்கே உண்டு அடக்குமுறை,திமிர்,அடிமைத்தனம், இவையெல்லாம் இங்கே காணமுடியாது.. காலங்கள் கடந்தும் திமுக வலிமையோடு இருப்பதற்கு அதிலும் தேர்தல் தோல்விகளின் போதும்.. அதே கம்பீரம் குறையாமல் நடைபோட .. சலவை செய்த கரைவேட்டியோடு வலம் வரமுடிகிறதென்றால் .. கலைஞர் சொன்னதைப்போல கொள்கையெனும் ஆணிவேர் அழியாமல் காத்துநிற்கிறது .. .. அதிமுகவின் கவர்ச்சி கலைந்து மறைந்து போகிறது.. ஆனால் திமுக கொள்கையால் கட்டமைக்கபட்டது காலம் கடந்தும் நிலைத்துநிற்கிறது.. கலைஞர் மறைவு எங்களை கலங்க செய்யவில்லை.. இயற்கையின் நீதியை அறிவோம்.. எம்மோடு அவரின் சுவடுகள் எப்போதுமிருக்கும்.. எம் இனத்தை காக்கும்.. எதிரிகளே கனவுகாணாதீர்.. எம்மை வீழ்த்த முடியாது ஏனெனில் எமது சித்தாந்தம் இயற்கை/ பகுத்தறிவு, சமூகநலன்,இனத்தின் மானம் சார்ந்து நிற்பது .. பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் எம்மை வடிவமைத்திருக்கிறார்கள்.. எத்தனை நூற்றாண்டு பின்னிட்டாலும் எம் கொள்கை/இயக்கம் நிலைத்து நிற்கும் எம் இனத்தை காத்துநிற்கும்.. .. #வீழ்ந்துவிடமாட்டோம்.. .. முதலாம் ஆண்டு நினைவில்.. கலைஞரின், பயமறியாத தம்பி.. ஆலஞ்சியார்

Monday, August 5, 2019

கஷ்மீரின் அழுகுரல்

கஷ்மீர்... பள்ளாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும் .. ஏரிக்கரைகளில் கார்ப்ரேட் வியாபாரிகள் ரிச்சர்ட்களை விலைக்குவாங்கி வியாபாரமாக்குவார்கள்.. கஷ்மீர் ஆப்பிள் மரப்பணுமாற்றுக்கு ஆளாகும் .. பண்டிட்கள் அதிகாரமிக்கவர்களாக வலம் வருவர் மறந்தும் கஷ்மீரீகள் தங்களின் பழந்கதையை பேசகூடாது .. .. உண்மையில் கஷ்மீர் யாருக்கானது ..பெரியார் சொல்கிறார் கஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேற வேண்டும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் .. விடுதலையின் போது பாகிஸ்தான் சொந்த கொண்டாட எண்ணி .. ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான்ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதனால் பயமுற்ற ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை ஒடுக்க, இந்தியா அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது. பாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பகுதிகள் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்என்று அழைக்கப்படுகிறது.. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி நிலம் இந்திய கட்டுபாட்டுக்கள் வந்த போது மன்னர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார் .. சிறப்பு பிரிவின் படி கஷ்மீரில் கஷ்மீரிகளை தவிர (பண்டிட் இஸ்லாமியர்கள்) யாரும் நிலம் வாங்க அனுமதியில்லை எந்தவொரு சட்டமும் கஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்கு பிறகே நடப்பாக்கவேண்டும் ..தனி கொடி தனி சின்னம் ..இவையெல்லாம் உள்ளடங்கிய சிறப்பு பிரிவை தான் இன்று ரத்து செய்து பிற மாநில யூனியனை போல கஷ்மீருக்கும் பொருந்தும் .. .. கஷ்மீரை போல நாகலாந்தில் 371A அஸ்ஸாமில் 371B மணிப்பூரில் 371C சிக்கிமில் 371F மிசோராம் 371 G பிரிவுகள் உண்டு நாகலாந்தில் மணிப்பூரில் அருணாச்சலத்தில் வெளி மாநிலத்தவர் நுழைய அனுமதி வேண்டும் இதிலெல்லாம் கைவைக்காத பாஜக அரசு கஷ்மீரை மட்டும் குறிவைப்பதின் பின்னணியில் மிக பெரிய வியாபார சக்தி இருக்கிறது மிக சிறந்த சுற்றுலாத்தளம் என்பதும் கவனத்தில் கொண்டால் பிடிகிட்டும் .. No debate, no discussion, no dissent, and the Constitution is changed.. விவாதமின்றி மக்களிடம் கருத்துகேட்காமல் நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூட அனுமதிக்காமல்.. கஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுகாவலில் வைத்து விட்டு அவசரகதியில் சிறப்பு பிரிவை ரத்து செய்து சர்வாதிகார சூழலை உருவாக்கியிருக்கிறது .. கஷ்மீரிகள் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக காங்கிரஸ் உட்பட மாநில கட்சிகள் என வாக்களித்து தங்களை இந்தியாவில் ஒரு அங்கமாகதான் நினைக்கிறார்கள் ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்களை உள்ளே அனுமதிக்க வேண்டி .. கஷ்மீர் நிலத்தை கூறு போடவே அன்றி இதனால் அம்மக்களுக்கு பலனில்லை .. .. இன்று திருச்சி சிவா பேசியதை போல அரசியல் அமைப்பிற்கு எதிரானது தவறான முன்னுதாரணம் சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி இந்த வழக்கு நகர்த்தபடலாம் இன்றைக்கு ஆதரிக்கிறவர்கள் உண்மையில் தங்கள் மாநில மக்களுக்கு எதிரானவர்கள் ப.சிதம்பரம் கூறியதைப்போல நாளை எல்லா மாநிலங்களுக்கு இது நடக்கும் .. அதிகபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தில் அசுர பலத்தோடு இருப்பதால் எதை வேண்டுமானும் செய்யலாம் நடத்தலாம் என்ற சர்வாதிகார போக்கு வீழ்ச்சியிலேயே முடியும் .. உலகில் பலவேறு நாடுகளின் சரித்திரங்கள் நாம் காண்கிறோம் அடக்குமுறையும் தான்தோன்றிதனமும் .. திணிப்பும் ஒற்றை கொள்கை கோட்பாடும் பிரிவினையில் தான் முடிவுற்றிருக்கிறது .. இனியும் இதுபோன்று தொடர்ந்தால் united India .. ஒருங்கிணைந்த இந்தியா சிதறுண்டு போகுமென்ற இன்றைய வைகோவின் பேச்சு மிகப்பெரிய உண்மை .. ஏரிக்கரையின் அழுகுரல்.. .. ஆலஞ்சியார்

Sunday, August 4, 2019

பார்பனீயம்..

2016 இதே ஆகஸ்ட் மாதம் திராவிடர் கழகம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கம் என குருமூர்த்தி சொன்னார் அதாவது ஜாதிகளில் உயர்ந்தோர் நாங்கள் என்பதை தான் அப்படி சொன்னார் அதுதான் இப்போது வைணவத்துறை பேராசிரியர் வெங்கட கிருஷ்ணன் வேறுவிதமாக இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக நாங்கள் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறார்கள் .. சட்டபடியான நடவடிக்கை எடுக்க தகுந்த நிலையில் அரசு மூச்சுவிட காணோம் .. பார்பன பெண் கொல்லபட்டபோது வரிந்து கட்டி தாமாகவே வழக்கு பதிந்த உயர்நீதி மன்றம் அமைதிபெருங்கடலில்.. .. தங்களை உயர்ஜாதி என்று சொல்வதன் மூலம் மற்றவர்களை வேறு தட்டில் வைக்கிறார்.. இந்திய கட்டமைப்பே மதங்களை பிரித்து ஆள்வதால் அல்ல சாதிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் தாங்களே உயர்ந்தவர் எனும் பாசிசத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.. பிற சிறுபான்மையினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தோற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் உருவாக்கினாலும் அடிப்படையில் அவர்களின் பிரதான எதிராளுமைகள் எல்லா மதங்களிலுமுள்ள பிற்பட்டுப்பட்டவர்களே என்பது இதிலிருந்து விளங்கும்.. நான் ஏற்கனவே சொன்னதைப்போல பிராமணீயம் என்பது இங்கே பிராமணீயர் அல்லாதோர் நலனுக்கெதிரானது.. .. ஐயர் சிக்கன் என்ற விளம்பரத்திற்கெதிராக இந்துமுன்னணி போராடுகிறது .. அத்தி வரதரை விமர்சித்ததாக சுகிசிவம் வீட்டை முற்றுகையிடுகிறார்கள் ஆனால் தங்களை விட மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வைணவ பார்பானுக்கெதிராக மௌனம் காக்கிறார்கள் இந்த சூத்திரபயல்கள் .. எச்.ராசா இந்துக்கள் என்றால் பிராமணன் தான் மற்றவர்களை வேண்டுமானால் ஜாதி இந்து என்றழைக்கலாம் என்கிறார் .. இதற்கு பொன்னரும் தமிழிசையும் பதில் சொல்லவேண்டும் தங்களை பார்பனரை விட தாழ்ந்தவரவாக ஏற்றுக்கொள்கிறார்களா என்பதையும் விளக்கவேண்டும் .. எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் மத்தியில் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்ததால் மட்டுமா .. இல்லை இங்கே மறைமுகமாக பாசிச பார்பனர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதால் களவாடி மாட்டிக்கொண்டவனைப்போல இந்த இன துரோகிகள் எதற்கெடுத்தாலும் தலையசைத்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தையும் கூட்டங்களையும் இங்கே அனுமதித்து பார்பனன் வரம்புமீறி பேசினாலும் வழக்கு தொடுக்காமல் கைது செய்யாமல் நடுங்கி போய் கிடக்கிற அடிமைகளால் வந்தது .. .. திராவிடத்தின் வேர் பாசிசத்திற்கெதிரானதென்பதை உணர்ந்து அதற்கெதிராக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் குரு,வெங்கட் போன்றவர்களின் பேச்சு அதைதான் காட்டுகிறது.. சாதிகளுக்கெதிராக திராவிட இயக்கம் போராடவில்லை என சிலர் பேச்சில் உண்மையில்லாமல் இல்லை முழுமையாக கலைய முடியாதவாறு கடவுள் பெயரில் கட்டமைத்த ஜாதீய அடுக்கை பிரித்தெறிய அவ்வளவு சீக்கிரம் முடியாது .. ஆனால் அதை மட்டம் தட்டி வைத்திருந்ததையும் பெரும் காவலாய் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இருந்தார்கள் என்கிற உண்மையை அறியமுடியும்.. திராவிட இயக்கங்களுக்கு இனிதான் நிறைய வேலைகள் இருக்கிறது .. தனித்தனியே பிரிந்து கிடந்தால் உள்ளதும் போகும் .. திராவிட "மும்மூர்த்திகள்" இல்லாதததின் எவ்வளவு பெரிய இடைஞ்சல்களை காத்திருந்த பகையால் தரமுடிகிறதென உணர்ந்தால் திமுகவை பலபடுத்த வேண்டியதின் அவசியம் புரியும் .. .. இவர்கள் இன்னும் பல வழிகளில் வருவார்கள் இவர்களை தனிமைப்படுத்தினாலே இந்தியாவில் நிகழும் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் இன்னும் வரும் பார்பனனின் புலம்பல்கள்.. ஒருமுறை திராவிடர் கழகத்தை செத்த இயக்கம் என்று சொன்னார் குருமூர்த்தி இன்றளவும் பார்பனீய முகத்தை கிழித்து தொங்கவிடுவது உயிர்ப்போடு இயங்கும் திராவிடம் தான் .. திராவிடத்தை கண்டு அஞ்சுவதால் தான் இப்படி கதைக்கிறார்கள்.. அரசு அதிகாரத்திற்கு திமுக வரும் வரை இப்படி நிறைய புலம்பல்களை/சங்கடங்களை கேட்க நேரிடும்.. விரைந்து முடிவுகட்ட திராவிடத்தால் இணைவோம் .. ஆலஞ்சியார்

Saturday, August 3, 2019

நாடு எங்கே போகிறது

நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது .. சக மனிதனை மிக கீழ்த்தரமாக பேச முடிகிறது .. தொட்டால் தீட்டென்று தீண்டாமையை உயர்த்தி பிடிப்பது தவறென்று அறிந்தும் .. சட்டரீதியாக தண்டிக்க கூடிய செயல் என்று தெரிந்தும் வெளிப்படையாக பொதுவெளியில் மேடை போட்டு பேசிவிட்டு போகமுடிகிறது .. உயர்ந்த ஜாதி நாங்களென மத்த மனுஷாள் எல்லாம் கீழானவர் ..மிருங்களிடம் உயர்ந்த ஜாதி இல்லையா .. கலப்பென்பது அசிங்கமென கதைத்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக நடமாட முடிகிறது வழக்கு பதிவு செய்ய கூட அரசு தயங்குகிற கேவலமான நிலை .. அத்திரவரதரை தரிசப்பவரை தொட்டு பிரசாதம் கொடுக்காதீரென நம்மிடம் பிச்சையெடுப்பவர் கூறுகிறார் .. இந்த அவலநிலைக்கு தெரிந்தே நாமும் காரணம் ஆகிவிட்டோம்,.. .. இந்த ஆட்சியை விட்டுவைப்பது கூட பாவ செயல் மன்னிக்க முடியாதது தான் ஒரு கணம் நேர்மை நீதி வழியென்று பேசிக்கொண்டிராமல் அரசை வீழ்த்த வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிறது .. ஒவ்வொன்றாய் இழந்து வரும் சூழலில் கடைசியில் மனிதரையே தரம்தாழ்த்தி பேசும் சூழ்நிலை உருவாகி வருவது ஆபத்தானது எந்த சமூகநீதிக்காக நம் பாட்டனும் அப்பனும் போராடினானோ அந்த நிலைக்கு நம்மை தள்ளிவிட அதிமுக அரசு முயல்கிறது இனியும் பொறுப்பதென்பது அரசியல் மடமை .. .. வடநாட்டில் இதைவிட மோசமான சூழல் உருவாகி நாடு எதை நோக்கி போகிறதென்று நடுநிலையாளர்கள் கவலைக் கொள்கிறார்கள்.. ஜெமட்டோ விவகாரம் சூடுபிடித்த நிலையில் இந்நிலையில், இது தொடர்பான விவாதம் நியூஸ் 24 தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது. அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 'ஹம் ஹிந்து' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதமும் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் நடுவில், 'கலித்' என்ற இஸ்லாமியத் தொகுப்பாளர் தோன்றி, குறிப்பிட்ட பகுதியைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அஜய் கௌதம், இஸ்லாமியத் தொகுப்பாளரைத் தான் பார்க்க மாட்டேன் எனக் கூறி, இரு கண்களையும் கைகளால் மூடிக்கொண்டார்.. இந்த செயல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இஸ்லாமியன் கையில் உணவருந்த மாட்டேன் என்ற செயலை விட கொடூரமான மனபான்மை இது .. அஜய் கௌதம் செயலுக்கு பதில் அளித்துள்ள "நியூஸ் 24" தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலை அனுமதித்து ஆதரவளித்து மேடை அளிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது" .. .. நாம் செய்த தவறு .. குறிப்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மை .. பதவி ஆசை எப்படியும் ஒருநாளாவது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட முடியாதா என்ற நப்பாசை இன்று இந்த நிலைக்கு காரணம்.. தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேனென சர்வாதிகாரமாக செயல்படுகிற அரசு ..ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருக்கிறது .. காஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை படைகள் குவிக்கபட்டு அபாயகரமான சூழல் நிலவுகிறது காங்கிரஸ் எச்சரிக்கையை அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை .. நம் அரசியல் தலைவர்களின் பேராசைகள் ஒற்றுமையையின்மை யார் வரகூடாதென்ற தெளிவின்மை நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது .. .. சமூகநீதி பேசி வந்த தமிழகத்திலும் மெல்ல ஊடுறுவும் பாசிசம் தன் கையில் முறுக்க தொடங்கியிருக்கிறது பினாமி ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு எதை செய்தாலும்/பேசினாலும் சட்டத்தால் எதுவும் செய்திட முடியாது அதற்கான துணிவு அடிமை அரசிடமில்லை என்று எண்ணி துணிந்து செயல்படுகின்றனர் .. இதற்கு விரைந்து முடிவுகட்டவேண்டிய கட்டாயம் பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது .. தவறவிட்டால் காலம் மன்னிக்காது .. இந்த நேரத்தில் கலைஞர் எனும் ஒற்றை மனிதனை எண்ணி வியக்கிறேன் .. தனியொருவனாய் படை நடத்தி பாசிசத்தை நெருங்கவிடமால் செய்ய பேராளுமையை எண்ணும் போது விழிகளில் நீர் கோர்க்கிறது .. #பெருந்தலைவ.. .. #பெருங்காவலன்_கலைஞர்.. .. ஆலஞ்சியார்

Monday, July 29, 2019

பொருளாதார இடஒதுக்கீடு மோசடி

#10PercentFraudReservation .. இனி மெல்ல மெல்ல அழிந்துபோவோம்.. நம் உரிமைகள் நாமே காவுகொடுக்கிறோம் .. சில ஆயிரங்களுக்கு ஆசைபட்டு வாக்குகளை விற்ற நாம் .. பாட்டனும் அப்பனும் பட்ட கஷ்டங்களை நம் பிள்ளைகள் மீது திணிக்கிறோம்.. பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் கட்டி காத்த சமூக நீதி கண் முன்னே சவக்குழியில் .. உயர்ஜாதி ஏழை என்ற தகுதியில் பார்பன கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போகிறது .. நாம் வேடிக்கை மனிதராய் நிற்கிறோம் .. நாம் தமிழ் தேசியம் பேசியும் .. சாதி பெருமை பேசியும் உரிமைகளை இழப்பதே அறியாமல் .. என்ன கொடுமை .. .. இனி ஐம்பதாண்டு பின்னோட்டு செல்வோம் பார்பன அடிமைகளாய் திரிவோம் பாஜக என்பதே பார்பன ஜனதாவிற்கானது .. அவர்கள் நலம் மட்டுமே முக்கியமாய் கொண்டு இயங்கும் .. தேசபக்தி ஜெய்ராம் மாட்டை புனிதமாக கருதும் மடத்தனம் இவையெல்லாம் சொல்லி நம்மை அடியாட்களாக வலம்வரவிட்டு அவர்கள் அமைதியாய் அரசு பதவிகளில் அமர்கிறார்கள் .. ஜெய்ராம் சொல்ல சொல்லி மனித ரத்தத்தை கையில் ஏந்தி ராம் ராம் என கொக்கரிப்போம் .. நம்மை விட தாழ்ந்தவனை அம்மணமாக்கி அடித்து உதைத்து.. நம் உரிமைகளை கல்வியை வேலைவாய்ப்பை இழந்து அம்மணமாவோம் ..உண்மையில் பார்பனர்களை பாராட்டதான் வேண்டும் நம்மில் ஏற்றதாழ்வை சொல்லி கலகம் செய்து அடியாட்களாக்கி மதவெறியை சாதிவெறியை தூண்டி நம் மக்களை ரௌடிகளாய் அடியாட்களாய் கலககாரனாய் செய்துவிட்டு. நோகாமல் குறைந்த மதிப்பெண் பெற்றாலே போதும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாம் என்ற மிக அருமையாக திட்டம்தீட்டி அதை நம்மை கொண்டே செயல்படுத்தி வென்றிருக்கிறார்கள் .. .. பொருளாதார இடஒதுக்கீடென்பதே ஒருவகையில் ஏமாற்று.. அயோக்கியத்தனம் அதிலும் உயர்ஜாதி வருமான உச்சநரம்பு 8 லட்சம் ஐந்து ஏக்கர் மெட்ரோ நகரில் 1000 சதுர அடி .. இவையெல்லாம் வைத்திருப்பவர்கள் பாவம் ஏழைகள் .. ஆனால் மற்றவர்கள் ஐந்து லட்சம் வருமானமென்றால் பணக்காரர்கள் .. வீட்டில் ஏ.சி இருந்தால் ரேசன் கிடையாது எல்லாவற்றையும் கடந்து போவோம் .. நமக்கு அத்திவரதர் தரிசனம் கிடைத்தால் போதும்.. அதை கூட நம்மிடமிருப்பதை கொள்ளையடிக்க என்பதை கூட அறியவில்லை .. .. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை .. நமக்கு விழிப்புணர்வு வராவிட்டால் எதை சொன்னாலும் தலையாட்டுகிற எடப்பாடிகளே போதுமென்றால் ஏன் என்று கேள்வி எழுப்பி போராடாமல் போனால் நம் குழந்தைகள் கல் உடைக்கவும் மாடுமேய்க்கவும் அப்பன் தொழிலை செய்ய வேண்டிய நிலை தான் வரும் .. யாரை தேர்ந்தெடுப்பது என்று அறிந்திருக்கவேண்டும் அதை விட யாரை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டுமென்ற அறிவு வேண்டும் .. இல்லையெனில் அரும்பாடுபட்ட கட்டிகாத்த சமூகநீதி சவக்குழிக்குள் போகும் எச்சரிக்கை .. .. ஆலஞ்சியார்

Sunday, July 28, 2019

அரசியல் பிழைகள்

வாழும் காலத்திலேயே ராமதாஸை புரிந்துக்கொண்டு பெருமைபடுத்துங்கள் அன்புமணி ராமதாஸ் .. கூடவே பெரியார் இருந்த போது உதாசீன படுத்திவிட்டு பின்பு புகழ்கிறோமே அதுபோல் அல்லாமல் வாழ்கிற போதே போற்றுங்கள் என்கிறார் .. அப்பன் மீது மகனுக்கிருக்கும் அன்பு அக்கறை நமக்கு புரிகிறது ஆனால் பின் தொடரதக்கவரா ராமதாஸ் .. .. நெஞ்சம் முழுக்க சாதீய வெறியோடு தன் நம்பி வந்தவர்களை நடாற்றில் விட்டதைப்போல எல்லா பதவிகளும் தன் குடும்பத்தை தன் ஜாதி உறவையோ போய் சேரவேண்டுமென எண்ணுகிறவர் .. தன் சமூகத்து இளைஞர்களை, அடியாட்களைப்போல பயன்படுத்தி குடிசைகளை கொளுத்தும் செயலுக்கு பயன்படுத்தி வழிகேட்டில் நிறுத்தியிருக்கிறவரை பெரியாரோடு ஒப்பீடுடென்பதே ஒருவகையில் அயோக்கியத்தனம் யார் பெரியார் தெரியுமா .. எனக்கு மதபற்றோ சாதிப்பற்றோ மொழிப்பற்றோ இனப்பற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடபற்றுதான் என்றவரோ சாதியத்தை சுமந்து திரியும் யோக்கியரை ஒப்பிட்டு பேசுவதே தவறானது .. .. ராமதாஸ் சொல் சுத்தம் இல்லாதவர் அரசியலில் ஒருவகையில் சாதீய தீயை பற்றவைத்தவர் .. தலித் அல்லாத சமுதாய மக்களை ஒருங்கிணைக்க பாடுபட்டு தோல்வி கண்டவர் .. சமூக மக்களை இடஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென போராடியவர் கடைசியில் திமுக ஆட்சியில் அது நடைமுறையாக்கபட்டதும் .. வேறுவழியின்றி அரசியலில் தன் சாதி மக்களை மட்டுமே நம்பி வென்றுவிடலாமென எண்ணி கடைசியில் உள்ளதும் போய் நிர்கதியாய் நிற்பவரை "உதாரணபுருஷனாக " எடுத்துக்கொள்ள முடியுமா என்ன.? .. திராவிடத்தை வீழ்த்துவோமென சொல்லி கடைசியில் திராவிட பேர் சொல்லி திரிவோரிடம் நக்கி பிழைக்கிற நிலைக்கு வந்தது யாரால் .. தன் நிலை அறியாது தனது சக்தி புரியாது தானே எல்லாம் தெரிந்தவர் .. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் தமிழ்நாட்டில் நான் மட்டுமே ஒழுக்கசீலன் அனைத்தும் அறிந்த அறிவாளியென பேசி மற்றவர்களை எள்ளிநகையாடி கடைசியில் அவர்கள் காலடியில் அப்பனும் மகனும் விழுந்த கதை நாடறியும் .. சுயமரியாதை இழந்து மக்களால் வெறுத்து ஒதுக்கபட்டு கடைசியில் யாரை ஏசினோமோ அவர்கள் தயவில் காலத்தை கழிக்கலாமென்று மாநிலங்களவை உறுப்பினரானதை கேட்டு நாடு சிரிக்கிறது .. .. இவர்கள் பின்பற்றதக்கவர்கள் அல்ல அரசியல் பிணிகள் வருங்கால இளைஞர்கள் புறந்தள்ள வேண்டிய அரசியல் பிழைகள் .. சுயநலத்திற்காக சமூகத்தையே காவு கேட்பவர்கள் .. வெறுக்கதக்க செயல்பாடுகளால் தமிழக அரசியலில் தரந்தாழ்த்து போனவர்கள் .. தானெனும் அகந்தையும் தானே சிறந்தவனென்ற நினைப்பும்,தானே அனைத்திற்கும் தகுதியானவன் என்ற எண்ணமும்,கொண்டவர்கள் வீழ்ந்துபோவார்கள் என்பதற்கு இவர்களே சாட்சி.. .. புதிதாய் தமிழக அரசியலுக்கு வரும் இளைஞர்கள் எப்படி செயல்பட கூடாதென்பதற்கு இவர்களே சாட்சியம் வகிக்கிறார்கள் .. சுருங்க சொன்னால் பின்பற்ற கூடாத #அரசியல்_பிழைகள் .. ஆலஞ்சியார்

Saturday, July 27, 2019

கலைஞர்

#கலைஞர்_திமுகதலைவர்51…… ஒரு தனிமனிதனின் சாதனைகள். உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி.. அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே .. எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்கியதே.. இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை.. இனியும் முடியாதே .. அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோனதாக தான வரலாறு.. புதிதாய் அரசியலுக்கு வருகிறவர்கள் இவரின் அரசியலின் அரிச்சுவடியை தான் முதலில் கற்க வேண்டும் .. .. எப்படி சாத்தியமாயிற்று கடும் உழைப்பால் விடா முயற்சியால் வந்தது.. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி.. .. மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. ஒன்று தெரியுமா இவரை கண்டு படிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. கலைஞரே தமிழகத்தின் வரலாறு .. .. ஆனாலும் இவரின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது ..ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஸில் படித்தான் என கேட்டு அலறவிட முடிந்தது .. ஒரே வரியில் ஒற்றை கடிதத்தில் உடன்பிறப்பே என்ற விளியில்..இந்திய ஒன்றிய அரசையே அலறவிட முட்ந்தது.. எப்போது கலைஞர் மறைவாரென காத்திருந்த பகை .. ஒவ்வோன்றாய் கலைஞர் பெற்று தந்ததை சூறையாட வருகிறது கல்வியில் வேலைவாய்ப்பில் நம்மை வீழ்த்துகிறது இந்த ஒற்றை மனிதனின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது .. வீணாய் போனவர்கள் அடிமடையர்களை முட்டாள்களின் அடிமைகளின் கையில் அரசை தந்துவிட்டு மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் தமிழகம் சொல்லண்ணாதுயரில் .. ஆனாலும் நம்பிக்கையாய் தளபதி .. அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே.. இந்தியாவின் வழிகாட்டி.. அரசியல் பல்கலைகழகம்.. வாழ்வியல் அற்புதம் தொண்டர்களின் மூச்சு.. கலைஞரின் வழியில் வென்றெடுப்போம் .. கலைஞர் தமிழனின் வரம். தமிழ் செய்த தவம்.. இனத்தின் முத்து மானமுள்ள தமிழரின் சொத்து.. #எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன் .. ஆலஞ்சியார்