Monday, August 26, 2019

காதல்

#காதல்.. .. காதல் உள்ளின் உள்ளில் உருகும்.. மெல்லிதாய் படரும் மோகனம் கொள்ளும்.. மௌனமாய்.. மனதை கொல்லும்.. கசக்கி பிழிந்து.. கனிந்துருகி.. கண்ணில் நீர் சுரக்கும்.. கண்கள் உண்மை பேசும்.. பேசினால்.. கவிதை வரும்.. பேசாது போனால்.. கவிதையாகும்.... .. அன்பின் அடர்த்தியல்ல காதல்.. அன்பை.. இளகுவாக்கும்.. மனதை... இளமையாக்கும்.. பார்வையை அழகாக்கும்.. பரசவமாய்.. பறக்க நினைக்கும்.. பேச்செல்லாம்.. இனிமையாகும் அழகிய உணர்வு.. காதல்.. .. நேற்றுவரை பார்த்ததை பார்க்காத கோணத்தில் பார்ப்பாய்.. பழைய குளத்தடி கூட பளிங்காய் தெரியும்,.. பேசாத மரங்கள் உன்னோடு பேசும் வீசும் காற்று வாசனை தரும் பொய்கள் கூட அழகாய் சிலநேரம் .. நடை அழகாகும் .. ஆண்மை நளினம் கொள்ளும் .. உன்னையே நீ ரசிப்பாய் .. .. ஆதலால் காதல் செய்வீர்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment