Saturday, July 27, 2019

கலைஞர்

#கலைஞர்_திமுகதலைவர்51…… ஒரு தனிமனிதனின் சாதனைகள். உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி.. அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே .. எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்கியதே.. இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை.. இனியும் முடியாதே .. அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோனதாக தான வரலாறு.. புதிதாய் அரசியலுக்கு வருகிறவர்கள் இவரின் அரசியலின் அரிச்சுவடியை தான் முதலில் கற்க வேண்டும் .. .. எப்படி சாத்தியமாயிற்று கடும் உழைப்பால் விடா முயற்சியால் வந்தது.. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி.. .. மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. ஒன்று தெரியுமா இவரை கண்டு படிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. கலைஞரே தமிழகத்தின் வரலாறு .. .. ஆனாலும் இவரின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது ..ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஸில் படித்தான் என கேட்டு அலறவிட முடிந்தது .. ஒரே வரியில் ஒற்றை கடிதத்தில் உடன்பிறப்பே என்ற விளியில்..இந்திய ஒன்றிய அரசையே அலறவிட முட்ந்தது.. எப்போது கலைஞர் மறைவாரென காத்திருந்த பகை .. ஒவ்வோன்றாய் கலைஞர் பெற்று தந்ததை சூறையாட வருகிறது கல்வியில் வேலைவாய்ப்பில் நம்மை வீழ்த்துகிறது இந்த ஒற்றை மனிதனின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது .. வீணாய் போனவர்கள் அடிமடையர்களை முட்டாள்களின் அடிமைகளின் கையில் அரசை தந்துவிட்டு மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் தமிழகம் சொல்லண்ணாதுயரில் .. ஆனாலும் நம்பிக்கையாய் தளபதி .. அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே.. இந்தியாவின் வழிகாட்டி.. அரசியல் பல்கலைகழகம்.. வாழ்வியல் அற்புதம் தொண்டர்களின் மூச்சு.. கலைஞரின் வழியில் வென்றெடுப்போம் .. கலைஞர் தமிழனின் வரம். தமிழ் செய்த தவம்.. இனத்தின் முத்து மானமுள்ள தமிழரின் சொத்து.. #எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment