Sunday, August 4, 2019

பார்பனீயம்..

2016 இதே ஆகஸ்ட் மாதம் திராவிடர் கழகம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கம் என குருமூர்த்தி சொன்னார் அதாவது ஜாதிகளில் உயர்ந்தோர் நாங்கள் என்பதை தான் அப்படி சொன்னார் அதுதான் இப்போது வைணவத்துறை பேராசிரியர் வெங்கட கிருஷ்ணன் வேறுவிதமாக இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக நாங்கள் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறார்கள் .. சட்டபடியான நடவடிக்கை எடுக்க தகுந்த நிலையில் அரசு மூச்சுவிட காணோம் .. பார்பன பெண் கொல்லபட்டபோது வரிந்து கட்டி தாமாகவே வழக்கு பதிந்த உயர்நீதி மன்றம் அமைதிபெருங்கடலில்.. .. தங்களை உயர்ஜாதி என்று சொல்வதன் மூலம் மற்றவர்களை வேறு தட்டில் வைக்கிறார்.. இந்திய கட்டமைப்பே மதங்களை பிரித்து ஆள்வதால் அல்ல சாதிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் தாங்களே உயர்ந்தவர் எனும் பாசிசத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.. பிற சிறுபான்மையினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தோற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் உருவாக்கினாலும் அடிப்படையில் அவர்களின் பிரதான எதிராளுமைகள் எல்லா மதங்களிலுமுள்ள பிற்பட்டுப்பட்டவர்களே என்பது இதிலிருந்து விளங்கும்.. நான் ஏற்கனவே சொன்னதைப்போல பிராமணீயம் என்பது இங்கே பிராமணீயர் அல்லாதோர் நலனுக்கெதிரானது.. .. ஐயர் சிக்கன் என்ற விளம்பரத்திற்கெதிராக இந்துமுன்னணி போராடுகிறது .. அத்தி வரதரை விமர்சித்ததாக சுகிசிவம் வீட்டை முற்றுகையிடுகிறார்கள் ஆனால் தங்களை விட மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வைணவ பார்பானுக்கெதிராக மௌனம் காக்கிறார்கள் இந்த சூத்திரபயல்கள் .. எச்.ராசா இந்துக்கள் என்றால் பிராமணன் தான் மற்றவர்களை வேண்டுமானால் ஜாதி இந்து என்றழைக்கலாம் என்கிறார் .. இதற்கு பொன்னரும் தமிழிசையும் பதில் சொல்லவேண்டும் தங்களை பார்பனரை விட தாழ்ந்தவரவாக ஏற்றுக்கொள்கிறார்களா என்பதையும் விளக்கவேண்டும் .. எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் மத்தியில் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்ததால் மட்டுமா .. இல்லை இங்கே மறைமுகமாக பாசிச பார்பனர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதால் களவாடி மாட்டிக்கொண்டவனைப்போல இந்த இன துரோகிகள் எதற்கெடுத்தாலும் தலையசைத்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தையும் கூட்டங்களையும் இங்கே அனுமதித்து பார்பனன் வரம்புமீறி பேசினாலும் வழக்கு தொடுக்காமல் கைது செய்யாமல் நடுங்கி போய் கிடக்கிற அடிமைகளால் வந்தது .. .. திராவிடத்தின் வேர் பாசிசத்திற்கெதிரானதென்பதை உணர்ந்து அதற்கெதிராக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் குரு,வெங்கட் போன்றவர்களின் பேச்சு அதைதான் காட்டுகிறது.. சாதிகளுக்கெதிராக திராவிட இயக்கம் போராடவில்லை என சிலர் பேச்சில் உண்மையில்லாமல் இல்லை முழுமையாக கலைய முடியாதவாறு கடவுள் பெயரில் கட்டமைத்த ஜாதீய அடுக்கை பிரித்தெறிய அவ்வளவு சீக்கிரம் முடியாது .. ஆனால் அதை மட்டம் தட்டி வைத்திருந்ததையும் பெரும் காவலாய் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இருந்தார்கள் என்கிற உண்மையை அறியமுடியும்.. திராவிட இயக்கங்களுக்கு இனிதான் நிறைய வேலைகள் இருக்கிறது .. தனித்தனியே பிரிந்து கிடந்தால் உள்ளதும் போகும் .. திராவிட "மும்மூர்த்திகள்" இல்லாதததின் எவ்வளவு பெரிய இடைஞ்சல்களை காத்திருந்த பகையால் தரமுடிகிறதென உணர்ந்தால் திமுகவை பலபடுத்த வேண்டியதின் அவசியம் புரியும் .. .. இவர்கள் இன்னும் பல வழிகளில் வருவார்கள் இவர்களை தனிமைப்படுத்தினாலே இந்தியாவில் நிகழும் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் இன்னும் வரும் பார்பனனின் புலம்பல்கள்.. ஒருமுறை திராவிடர் கழகத்தை செத்த இயக்கம் என்று சொன்னார் குருமூர்த்தி இன்றளவும் பார்பனீய முகத்தை கிழித்து தொங்கவிடுவது உயிர்ப்போடு இயங்கும் திராவிடம் தான் .. திராவிடத்தை கண்டு அஞ்சுவதால் தான் இப்படி கதைக்கிறார்கள்.. அரசு அதிகாரத்திற்கு திமுக வரும் வரை இப்படி நிறைய புலம்பல்களை/சங்கடங்களை கேட்க நேரிடும்.. விரைந்து முடிவுகட்ட திராவிடத்தால் இணைவோம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment