Saturday, August 24, 2019

பொருளாதாரம்

பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்தபோது தேசம் திவாலாகிவிட்டது சிக்கன நடவடிக்கை வேண்டுமென்றபோது தேசம் தானே திவாலானது நமக்கென்ன? என்று கேட்டார் பிரெஞ்ச் பேரரசி #மேரி_அண்டோனெட் .. .. அதே சுதியில் மாண்பிமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார் நாங்கள் என்ன செய்யமுடியும் . உலக பொருளாதாரமே சரிந்துள்ள நிலையில் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பதில் தந்து கொண்டு இருந்த நிலையில் , ஒரு நிருபர் பளிச்சென்ற கேள்வியொன்றை எழுப்பினார். எதற்காக மூன்று மாத காலம் பொருளாதாரம் சரியட்டும் என்று காத்து இருந்தீர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார் நிர்மலா சீதாராமன்..அது அவர் முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. உடனே பதில் தந்த நிர்மலா சீதாராமன தொழில்துறை சரிவுகள் தொடர்பாக இப்போது தான் விவரம் கிடைத்தது. யாராவது பொருளாதாரம் சரிவு அடையட்டும் என்று பார்த்து கொண்டு இருப்பார்களா" என்று கறாராக பதில்சொல்லி விட்டு, அடுத்த கேள்வியைக் கேட்குமாறு, நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.. உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்திக்கிறது ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மெச்ச தகுந்த நிலை என்கிறார்.. இந்தநிலைக்கு என்ன காரணமென இவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை தவறை சரி செய்ய தெரியாமல் விழிபுதுங்குவது நிர்மலா பேச்சில் தெரிந்தது பொருளாதார சரிவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டாமா ..அதற்கென்ற துறைகள் நிபுணர்கள் அதிகாரிகள் ஆலோசகர்கள் என்ன செய்தார்கள் .. .. பணமதிப்பிழப்பை திடீரென ஒரு இரவில் அறிவித்து தன்னை "ராஜாவாக" காட்டிக்கொண்ட புதிய இந்தியாவின் மன்னர் ஊழல் ஒழிந்தது கருப்புபணம் பிடிப்பட்டது இனி யாரும் தப்ப முடியாதென்று சொல்லி சில நாட்களிலேயே கருப்பெல்லாம் கமிஷனில் வெள்ளையாகி பல்லிளித்தது கூட்டுறவு வங்கியில் மிக சுலபமாக மாற்றி தந்தார்கள் .. ₹500 கோடி கண்டெய்னரில் வாகன போலி எண்ணில் கடத்தபட்டும் வழக்கோ விசாரணையோ இல்லை பணம் பாரதவங்கிக்கு சொந்தமென முடித்துவைத்தார்கள் .. இன்று மீண்டும் ஊழல்வாதிகளை விடமாட்டோம் என திரும்ப பேசிகிறார் மாண்பிமை பிரதமர் .. பணமதிப்பிழப்பின் போதே தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மாநிலங்களவையில் நீண்ட நேரம் விளக்கம் கொடுத்தார் பொருளாதார நிபுணரும் மேனாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங்.. அவசரகதியில் துறைசார்ந்த வல்லுநர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு சில காலம் சென்று பெரும் வீழிச்சியை தருமென சொன்னார் .. GST வரி விதிப்புமுறை முற்றிலும் தவறானதென்றும் சிறுதொழில்களை பாதிக்குமென்றும் மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் நீண்ட உரை நிகழ்த்தினார் .. வரும் முன் எச்சரித்தார்கள் நாலும் அறிந்தவர்கள் ..ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிறவர்களிடம் எதை சொன்னாலும் புரியாது .. இந்த நாட்டில் தான் பொருளாதார அறிவு இல்லாதவர்கள் நிதித்துறையை கையாள்வார்கள் .. .. உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தைபோக்கோ காரணம் என்கிறார் அமைச்சர் அதற்கு நிரஞ்சன் இந்திய ஏற்றுமதி என்பது1% 2% தான் இது தாக்கத்தை தராது என்கிறார் .. ஆட்டோமொபைல் கடும்வீழ்ச்சி அதனால் உங்கள் பழைய வண்டியை கொடுத்துவிட்டு புது வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார் எமது நிதியமைச்சர் .. .. பொருளாதாரம் சரிவில் தான் சரியாகிவிடும் என நினைத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்கிறார் வரலாறு படித்துவிட்டு ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பு வகிக்கும் .. ரிசர்வ் வங்கியின் கௌரவ இயக்குனர் குருமூர்த்தியை காணோம்.. என்ன படித்தாரென்றே தெரியாதவர் (டிகிரியா +2 வா என்று விவாதமே நடந்தது) மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகலாம் .. வரலாறு படித்துவிட்டு பொருளாதாரத்தை கையாளலாம் கணக்கன் வங்கி கவர்னராகலாம் ..இதுதான் இவர்கள் லட்சணம்.. அறிவாளிகளையும் சிறந்த நிர்வாகிகளையும் வேண்டாமென வைத்ததின் விளைவு .. இந்த நிலை வள்ளுவன் தெளிவாக சொல்லியிருக்கிறார் .. இதனை இதனால் இவண்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment