Friday, August 9, 2019

நன்றி வேலூர்

வேலூர்.. நம்மை நாமே பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும் .. அலட்சியம் கவனகுறைவு வெற்றி கிடைத்துவிடுமென்ற திமிர் உழைப்பவனை அரவணைக்க தவறுதல் இவையெல்லாம் வருங்காலங்களில் தவிர்க்கவேண்டியதை உணர்த்திய தேர்தல் இது பொது தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்துவிட்டார்கள் இதிலும் அது கிடைத்துவிடும் என்ற இறுமாப்பு சறுக்கலுக்கான காரணம் .. எதிரிகளின் பலம் செயல்பாட்டை கூர்ந்து கணிக்க தவறியதும் பெரும் பின்னடைவுக்கு காரணம் .. உண்மையில் இதுபோன்ற ஒரு நிகழ்வு கட்சிக்கு தேவை உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அலட்சிய போக்கு தான் தோன்றித்தனம் எதிரியை எள்ளல் செய்வது தளபதி உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்லாதது யாரை புறக்கணிக்காமல் அரவணைத்து அழைத்து செல்லவேண்டியவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தது இந்த நிலைக்கு காரணம் துரைமுருகனின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை தொண்டர்களை அரவணைக்கும் செல்லும் பழைய நிலையை மறந்து போனார் அலட்சியமாக எண்ணுகிற போக்கு.. தொண்டன் வந்து பொன்னாடை தந்தால் அதை உடன் சாரதியிடம் தருகிற நிலை உயரத்திற்கு வந்த பிறகு ஏற்பட்டது சென்ற தேர்தலில் வாக்குகளை விட அதிகவாக்குகளை பெற்றிருந்தாலும் ஏசிஎஸ் பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலில் தனித்து 3லட்சத்திற்கு மேல் வாங்கிருந்தார் அதிமுகவோடு சேரும் போது அது அதிகரிக்கும் என்ற யதார்த்ததை உணராமல் அதற்காக வழிகளை ஆராய தவறியதெல்லாம் ஆய்வு செய்திட வேண்டும் வேலூர் வாணியம்பாடி ஆம்பூர் சிறுபான்மையினரின் பேராதரவு நிலையை மெச்சபடுத்தி வெற்றிக்கு வழிவகுத்தது .. .. தளபதி தனி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது வரும் காலங்களில் தேர்தலில் செயல்பாடுகளில் புதிய உக்தியை கையாளவேண்டும் வெற்றி பெறும் தொகுதிகள் இழுபறி தொகுதிகள் கைகொடுக்காதென்ற தொகுதிகள் சமமான தொகுதிகளென பிரித்து இப்போதிலிருந்தே பணியை தொடங்கிட வேண்டும் .. தொடர்ந்து காட்பாடியில் வெற்றி பெறும் துரை ஆரம்பத்திலிருந்தே தொகுதி நலனில் அக்கறையை கொண்டவராக இருந்ததைப்போல தன் முதல் வெற்றி பயணத்தை தொடர்ந்து நிலைநிறுத்த கடுமையாக உழைக்கவேண்டும் .. கழக உடன்பிறப்புகளோடு நல்லதொரு தொடர்ப்பை நட்பை தொடர்ந்தாலே நல்லது துரை மகன் என்ற தகுதி மட்டுமே கரைசேர்க்காது உழைப்பே மக்கள் சேவையே உயர்வை தருமென்ற சிந்தையோடு கடின உழைப்பை வழங்கிட வேண்டும் .. தொடர்ந்து வெற்றியை தரும் தமிழக மக்களுக்கு நன்றி! தளபதியின் தலைமையில் நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழகம் .. நம்பிக்கை வீண்போகாதென்ற உறுதிமொழியை தருகிறோம் .. நன்றி வேலூர் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment