Monday, September 23, 2019
அறிவிலிகள்
கே.டி.ராஜேந்திர பாலாஜி..
உண்மையிலேயே எப்படி இவரை மந்திரியாக்கினார்களென தெரியவில்லை
தமிழனை முட்டாளாக சித்தரிக்கவேண்டும் என்பதற்காக தமிழனுக்கு அறிவில்லை இவ்வளவுதான் தமிழனின் "தரம்" என பறைசாற்ற
வேண்டுமென்று இவரை கொண்டுவந்ததாகதான் எண்ணுகிறேன் .. நான் அப்பலோவில் இருந்தபோது அம்மா கசாயம் போட்டு கொடுத்தனுப்பியதாக சொன்னபோது கூட ஜெயலலிதாவின் "பெருமை" சொல்லவேண்டுமென்ற ஆசையில் அடித்துவிடுகிறாரென்று என்றுதான் நினைத்தோம்
மோடி எங்கள் டாடி என்ற போது பயத்தில் சொல்லி வைக்கிறார் பாவம் என்றிருந்தோம் ராகுலுக்கு தாய்மாமன் மடியில் தான் காது குத்தியிருப்பாங்க எனக்கு என் தாய்மாமன் மடியில் தான் காது குத்தினார்கள் என்ற போது அறியாமையில் உளறல் என்றிருந்தும் நகைச்சுவையாக கடந்துபோனோம்
நெறியாளர் வாய்பொத்தி நக்கலாய் சிரிக்கிறார்
அமைச்சரும் அதுபுரியாமல் ..?
ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டபோது பச்சை அறிக்கை தருகிறோம் .. வெள்ளை அறிக்கை என்றால் என்ன ..? வெளிப்படையான அறிக்கை என்றதும் நான் பச்சையாக சொல்ல சொல்கிறேன் என்று தன் அறிவிலித்தனத்தை கண்டு
நாடோ சிரிக்கிறது.. இவரின் அரசியல் மேடை பேச்சும் நாகரீகமற்றதாக ஒருமையில் விளித்தே பேசும்தன்மை அவரின் தரத்தை பறைசாற்றும்..
..
இவரென்றில்லை ஒட்டுமொத்த அதிமுக கூடாரமும் அடிமைகளையை பொறுக்கி உருவாக்கியது கொள்கையே அடிப்படை சித்தாந்ததமோ தெளிவான அரசியல் புரிதலோ அற்ற கட்சி ..இதில் கவர்ச்சியை மூலதனமாக கொண்டு திமுகவை பிளவுபடுத்த கருணாநிதி எனும் ஆளுமையை சிறுமைபடுத்த ஆரம்பிக்கபட்டு கடைசியில் இவரை போன்ற அறிவிலிகளால் அசிங்கபட்டுநிற்கிறது. ஊடகங்களுக்கோ கொண்டாட்டம் இவரை வைத்து அதிமுக எனும் "இமேஜை" கண்ணாபின்னாவென சிதைக்கிறார்கள் நோக்கம் இதுதான்
பார்பனர்களை புத்திசாலிகளென நம்பவைக்க இவர்கள் போன்ற அரைகுறைகளை பெரிதுபடுத்தினால் போதும் என்றெண்ணுகிறார்கள் .. அதுதான் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை திறம்பட செய்கிறார்கள் அதை உணராமல் அடிமைகள் உளறிக்கொட்டுவதுதான் கொடுமை
..
அதிமுக நிறுவனரே தன் ரசிகர்களை பாதுகாப்புகாக கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர்தான் .. அன்றைக்கு பார்பனர்களின் அரசியல் குரு சோ தன் துக்ளக் பத்திரிக்கையில்
இரண்டு சிறிய பெரிய அளவிளான கத்தியை காட்டி அமைச்சர் திருநாவுகரசரிடம் எதை வைத்துக் கொள்ள சொன்னாரென கேட்டதெல்லாம் வரலாறு இவ்வளவுதான் இவர்களின் அரசியல் .. தனித்திறமையோ அரசியல் புரிதலோ கொள்கையோ நாட்டின் மீதும் நாட்டுமக்கள் மீதும் நலன்சார்ந்த அக்கறையோ இருந்ததில்லை
எந்தவொரு தொலைநோக்கு திட்டமும் வகுத்ததில்லை/ செயல்படுத்தியதில்லை சமூகநீதியை நிலைநாட்டியதில்லை .. கவர்ச்சியை மட்டுமே நம்பி அவர் விதைத்தெல்லாம் சொத்தையாய் நிற்கிறது இவர்களிடத்தில் வேறெதை எதிரிபார்க்கமுடியும்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment