Wednesday, September 4, 2019

ஆசிரியர்

ஆசிரியர் தினம்.. .. நிறைய பேரை எழுத வேண்டி வரும் ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே மூவாயிரம் வார்த்தைகளை தன் தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறது.. .. தாயே சிறந்த ஆசான்.. .. என் தாயார்.. எளிமையான வாழ்வு வாழ்ந்த பெருமகள்.. தமிழ் மீது தனிபற்று கொண்ட பெருமாட்டி.. சீறாபுராணமும் முஹையத்தீன் மாலையும், நூறுமசலாவும்,.. ராகத்தோடு.. பாடி ஓதும்.. #ஓதுவார்.. தமிழ் மீது எனக்கு பற்றுவர காரணமானவர்களின் முதலாமர்.. .. தமிழாசான்.. ம.க maka ம.கலியபெருமாள்.. திராவிடம் பேசிய தமிழாசான் எனக்கு முரசொலியை அறிமுகப்படுத்திய புலவர்.. பெருமைக்குரிய தமிழ்பற்றாளர்.. கொஞ்சம் பெரியாரையும் பேசுவார் நிறைய கலைஞரை... .. அ.அப்துல்காசீம்.. நான் படித்த பள்ளியின் தலைமையாசிரியர்.. சீறாபுராணம் இவர் நடத்தினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. கம்பனை இளங்கோவை இவர் பாடி கேட்டால் அமுதம் தேவையில்லை.. அத்தனை அழகாய் தொடுத்து எடுத்தியம்பியவரை நான் கண்டதில்லை.. .. கலைஞர்.. தமிழ் உரை வீச்சு.. தமிழால் எளிதில் எதிரை வீழ்த்திவிட முடியும் என்ற சூசமத்தை சொன்னவர்.. தொல்காப்பியத்தை இத்தனை எளிதாய் யாரும் தரவில்லை.. தமிழால்எல்லாம் முடியும் என்பதை இவரின் எழுத்துச்சொல்லும்.. புதிய முயற்சியை புதிய உத்வேகத்தை இவரின் எழுத்தும் பேச்சும் சொல்லும்.. .. மற்ற மூவரும் உடனிருந்து என்னை செப்பனிட்டவர்கள்.. ஆனால் கலைஞர் என் கட்டவிரலை காணிக்கை கேட்காத துரோணர்.. .. ச.செல்லபெருமாள் அய்யா உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் .. கருத்து சுரங்கம் தகவல் களஞ்சியம் பெரியாரிய பாதையில் பயணிக்கும் என்னை இழுத்துவந்து களம் அமைத்து தந்தவர் .. உடனிருந்து இயக்கும் பேராற்றல் .. .. சிலம்பாட்ட குரு ஹபீபுல்லாஷா.. மிக நேரித்தியாக சிலம்பமாட சொல்லிதந்தவர் .. என் ஆட்டத்தில் குறைகளை கண்டு களைந்து செம்மைபடுத்திய "வாழக்காய்" வியாபாரி.. புனிதமென்று எதுவுமில்லை எல்லாம் மாயை என்ற வழிப்போக்கன் .. இப்படி..நிறைய பேர்.. வழிநநெடுகிலும் ஏதோ ஒன்றை கற்று கொடுத்தே இருக்கிறார்கள்.. அறிவில் சிறியது பெரியது என்று எதுவுமில்லை.. எல்லாம் அறிவு.. ஒவ்வொரு செயலும் .. ஒவ்வோரு மனிதனும் ..ஏதோ ஒன்றை கற்றுக்கொடுத்து கொண்டேதான் இருக்கிறார்கள்.. #வாழ்வின்_வழிநெடுக .. #ஆசான்கள்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment