Friday, August 16, 2019

ரஜினியெனும் மாயை

ரஜினியை வைத்து தமிழ் நாட்டில் கால்பதிக்க அமித்ஷா திட்டமிடுவதாக செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன.. அமிர்ஷா நாங்கள் நினைத்தால் ஒரு பொய்யை கூட அதிகளவில் பரப்ப முடியும் சமூகவலைத்தளங்களில் முன்று கோடி பேரை இதற்காகவே வைத்திருக்கிறோம் என்கிறார் உண்மையில் அடிக்கடி பொய்களை மட்டுமே பேசி வரும் எச்.ராசா தமிழிசை அர்ஜூன் சம்பத் பொன்னர் மற்றும் பார்பன கும்பல் ஊடகமென்ற பெயரில் ரவீந்திரன் போன்றோர் அதைதான் செய்துவருகிறார்கள் .. தமிழகத்தில் சாத்தியமா என்றால் கொஞ்சம் புளிக்கும் .. ரஜினி காந்த் அரசியல் கட்சி தொடங்கினாலும் அதற்கான சாத்தியம் நிச்சயமாக இல்லை என்பதை நாம் உறுதியாக கூற முடியும். 1972ல் எம் ஜி ஆர் அரசியலில் கால்பதித்த காலத்திற்கு பிறகு ஆந்திராவில் என் டி ராமராவ் சினிமா கவர்ச்சியின் மூலம் வெற்றி பெற்றார். அன்றைக்கு சினிமா மீதான மோகம் கதாநாயகனென்றால் நல்லவன் என நம்பிய பிம்பமெல்லாம் அடித்து தூள்தூளாகிவிட்டது .. அதனால் தான் தமிழ் நாட்டில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன்.. ஆந்திராவில் சீரஞ்சிவி உட்பட யாரும் வெற்றி பெறவில்லை. ஒரு வேளை ரஜினி காந்த் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெறலாம் ஆனால் நிச்சயமாக சில தொகுதிகளை கூட அவர் பெறுவது கூட கடினம் அவரே தோற்க கூட செய்யலாம் பிராமணர்கள் வாழும் மயிலாப்பூரை அவர் தேர்வு செய்தால் கட்டிவச்ச காசு மிஞ்சலாம் அதிலும் பாஜகவோடு கூட்டென்றால் கட்டிய கோவணமும் பறிபோகும் நல்ல மரியாதையை.. நடிகராக அவர் அடைந்த புகழ் பணம் எல்லாம் போகும் .. வியாபார ஊக்தியோடு அரசியல் செய்தாலும் பணத்தை காத்துக்கொள்ளலாமே தவிர மற்ற எல்லாம் போகும்.. இந்த நிலையில் தமிழ் நாட்டில் பாஜக ஆட்சி என்பது கனவு .. .. அதிமுகவில் பன்னீரும் மகனும் பாஜக வில் இணைந்து விட அதிக வாய்ப்பு உள்ளது .. எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்படலாம் சசிகலா வந்தவுடன் நடப்பதற்கான ஆயத்த கூறுகளை அறியமுடிகிறது .. ரஜினி பாஜகவோடு சேர விரும்பமில்லை என்றே தெரிகிறது அவரது உற்ற நண்பர் வி.சி.சண்முகம் பாஜகவே எனது தோல்விக்கு காரணம் என சொன்னது கூட ரஜினியின் அறிவோடுதான் என்கிறார்கள் .. ரஜினியின் அரசியல் கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் எதிர்வினையை தருகிறது .. பணமதிப்பிழப்பாகட்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு .. கஷ்மீர் 370 பின்வழித்தல்.. போன்றவற்றில் அவரது கருத்து தெளிவின்மையையே தருகிறது .. முழுமையான அரசியல் அறிந்திராதவராக .. இந்திய தமிழக அரசியலின் வேறுபாடுகள் இணைந்து செயல்படும் சாத்தியகூறுகளைப் பற்றிய அறிவில்லாதவராகவே தெரிகிறார் .. தமிழர மண்ணில் பக்தியும் பகுத்தறிவும் சேர்ந்த நேர்கோட்டு பயணம் சில நேரங்களில் எதிரிகளுக்கு புரியாததாக தெரியும் .. தனிப்பட்ட வாழ்வில் பக்திபழமாக தெரிகிறவன் கூட அரசியல் தெளிவும் திராவிடமே நம்மை காத்துநிற்கும் சுயமரியாதையாக வாழ வழிவகை செய்யும்.. நமது உரிமை காக்கும் போராடி தரும் ..எல்லைச்சாமியை போல் பாசிசத்தை அண்டவிடாமல் அரணாய் திகழும் என உறுதியாய் தெரிந்து வைத்திருக்கிறவன் .. அத்திவரதரை தரிசித்தாலும் .. எங்கள் #புத்திவரதரை தானே அப்பனென்று அழைக்கமுடியும் கும்பிட முடியுமென ஊருக்கு பறைச்சாற்றியவன் தமிழன் .. இன்று பெருமையோடு செருக்கோடு சுயமரியாதையோடு அறிவோடு வலம் வர முடிகிறதென்றால் பேராசான் பெரியார் செதுக்கிய /பயணித்த / வழிநடத்திய பாதையே சரி என்ற தீர்மானமான எண்ணம் மக்களிடையே இருப்பதுதான் .. அதனால் தான் விழிப்புணர்வோடு கேளிக்கைகாரர்களை துரத்திவிட்டு கொள்கைகாரர்களை தேர்வு செய்கிறார்கள் .. இதை கொஞ்சம் உணர்ந்திருப்பதால் தான் ரஜினி அஞ்சுகிறார் .. மதிப்பிழந்து கெட்டழிய நேரிடும் என்று உணர்ந்து தவிர்க்கிறார் .. வலுகட்டாயமாக மிரட்டி வரவழைத்தாலும் அதிவேகம் அரசியலில் கரைந்துபோவார்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment