Wednesday, September 11, 2019
எடப்பாடி
திமுக தடுப்பணைகளை கட்டியதுண்டா என சேக்கிழார் புகழ் எடப்பாடி கேள்வி கேட்கிறார் .. ஊர்பெயரை கூட உச்சரிக்க தெரியாமல் ஊர்ச்சுற்றி வந்தவர் .. அறியாமை தவறில்லை
அறிந்துக்கொள்ள முயற்சி செய்யாமை தான் தவறு .. ஒரு பேட்டியில் அண்ணாவிற்கு பிறகு நான் தான் அதிக புத்தங்களை படித்தவன் என்று சொன்னவர் இந்த எடப்பாடி..
உண்மையில் கேவலமாக இருக்கிறது முட்டாள்கள் கூட்டத்திடம் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறோம்.. ஒட்டுமொத்த கூட்டமும் மடையர்களாக இருந்தால் என்ன செய்வது வெள்ளை அறிக்கை கேட்டால் மஞ்சள் அறிக்கை கூட தருவோம் என அறிவிலி ஒன்று உளறுகிறது .. எதற்காக வெளிநாடு பயணமென்று அவருக்காவது தெரியுமா என்றால் இல்லை ..
..
தலித் பிணம் எடுத்துச்செல்ல தடுக்கபட்டு வேலூர் பாலத்தில் கீழிறக்கபட்ட சம்பவத்தை தாமாக முன் வந்து உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ததது .. அந்த வழக்கில் தமிழக அரசு தலித்களுக்கு தனி சுடுகாடு ஏற்படுத்தபடுமென அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது .. இந்த கேடுகெட்டவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும் .. எதை செய்கிறோம் எதை சொல்கிறோமென்ற அறிவுகூட இல்லை கடும்கண்டனத்தை பதிவு செய்வோம் ..
..
அரசியலில் கொஞ்சம் கூட தெளிவோ அறிவோ இல்லாதவர்கள் முன்பிருந்த ஆட்சியாளர்கள் செய்த நலத்திட்டங்கள் மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தபட்ட விபரங்களை அரசு அதிகாரியிடம் கேட்டு அறிக்கையோ பேட்டியோ தரலாம் கலைஞர் ஆட்சியில் 42 தடுப்பணைகள் கட்டபட்டிருக்கிறது அதுமட்டுமல்ல நீர்வளம் பற்றிய அறிவும் தெளிவும் நீர்மேலாண்மை பற்றிய அனுபவமும் தமிழக ஆட்சியாளர்களிடையே கலைஞரைப்போல தெளிவும் ஞானமும் வேறு எவருக்குமிருந்ததில்லை என்பதுதான் உண்மை ..
எதையாவது சொல்லி வைப்போம் ஊடகங்கள் கேள்வி கேட்கவா போகிறதென்று நினைக்கிறார் எடப்பாடி
..
உண்மையில் தமிழகம் கண்ட கேடுகெட்ட ஆட்சி
துளி கூட அரசியல் தெளிவற்ற, அறமற்றவர்களிடம் சிக்கி சீரழிகிறது
கால சக்கரம் சுழலும் போது எழவே முடியாதவாறு புதைந்து போவார்கள் ..
தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள் இந்த கோமாளிகள் ..
..
சிரிப்பாய் சிரிக்கிறது ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment