Friday, August 23, 2019

தளபதி

"களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே" போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.. .. ஆம்.. பெருவீரன் கையில் கழகம்.. இ்ந்தியாவே உற்றுநோக்கும் வல்லமை கண்டேன் .. தளபதியாய் படையோட்டம் நடத்த தயார்.. பகைவர்களே ஓடியொளிந்துக் கொள்ளுங்கள்.. மிரட்டல்கள் .. தடையென கிறுக்குத்தனமாய்உளறாதீர்கள்.. மீறினால் செயல்பட எண்ணுவீர்களாயின் இருப்பும் அவிழ்ந்து போகும்.. இனி அஞ்சுவதில்லையென அஞ்சுகத்தின் பேரன் தயாராகிறான்.. நாடு விரும்பும் தலைவனாய் .. நல்லதொரு விடியலை தர.. ஜனநாயகத்தை ஒற்றை உயர்த்திபிடித்து உலகுக்கு பறைச்சாற்றியவர் நாடும் இயக்கமும் மக்களுக்கானதென்ற மகத்தான நெறிகளோடு அரசியல் செய்பவர் .. .. ஒப்பாரி வைப்போரே.. ஊதுகுழலாய் சங்கிகள் குரல் ஒலிப்போரே.. பாசிசத்தின் அடிவருடிகளே.. திராவிடத்தின் பெயர் சொல்லி தீங்கிழைக்கும் கயவர்களே.. இது உண்மையான திராவிடத்தலைவன் உதயமாகியிருக்கிறான் தமிழர் நலம் காக்க.. தமிழனின் போர்வாளாய்.. தமிழர்படை நடத்தும் தளபதியாய்.. பகையறுக்க தயாராகிறார்.. எதிரிகளே.. பலமறியாது மோதாதீர்.. இயக்கத்தை விட்டே திராவிட பெருங்கிழவனால் விரட்டப்பட்டவர்களை வைத்து புதிய சூழ்ச்சி செய்ய நினைத்து மூக்குடைந்து போகாதீர் .. கலைஞரிடம் நேரடி பயிற்சிப்பெற்ற தளபதியாய் நீண்ட நெடிய அனுபவமும் தேர்ந்த முதிர்ச்சியும் நன்நெறியும்.. விடா முயற்சியும் எதிரியை சமயமறிந்து வீழ்த்தும் விவேகியாய்.. தலைநிமிர்ந்து நிற்கிறார்.. அகந்தையில்லா நற்குணமாய் ..அரவணைத்து செல்லும் பாங்கோடு.. எதிர்த்து நிற்போரின் சிம்மசொப்பனமாய் திகழ்கிறார்.. மீண்டும் சொல்கிறேன் புறநானூற்று சொல்லெடுத்து.. "எம்முளும் உளன் ஒரு பொருநன்! திங்கள் வலித்த கால் அன்னோனே!!” .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment