Saturday, August 10, 2019
தமிழிசை இம்சை
திமுகவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது
தமிழிசை.. சில நடுநிலைவாதி..? களும் இதே கருத்தை சொல்லி வருகிறார்கள் .. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு வாக்கு வித்தியாசம் என்றாலும் அது வெற்றிதான் .. அதிபர்முறை தேர்தலில் தான் 50% விழுக்காடு வேண்டுமென்று முதல் இரண்டு இடம் பிடித்தவர்களை மீண்டும் மக்களிடையே வாக்கு கேட்க செய்வார்கள் ஈரான் போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது ..
வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் மனபக்குவம் வேண்டும் ..குறைவான வாக்குகளில் தோற்றவர்களையும் வென்றவர்களை நாடு கண்டிருக்கிறது ..
..
சென்ற சட்டமன்ற தேர்தலில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 30 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றிப்பெற்ற போது யாரும் அதை தோல்வி என்று சொல்லவில்லை .. எம்ஜிஆர் (ம.கோ.ரா) உடல் நலியுற்றிந்த போது 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அறுபதுமேற்பட்ட இடங்களில் வென்றார்.. இதெல்லாம் அவசரகதியில் அரைகுறை தெளிவில் அரசியல் செய்பவர்களுக்கும் ஊடகவியலாளர் என்றால் என்னவென்றே தெரியாத நேர்மையாளர்களுக்கும் தெரியாது ..
தமிழிசை ஜெயகுமார் போன்றவர்கள் மைக் கிடைத்தால் எதையாவது உளறவது வாடிக்கையாகிவிட்டது தெளிவற்ற அரசியல் பார்வை கொண்ட நடுநிலையாளர்கள் கடந்தகால அரசியலைப்பற்றி அறிவற்றவர்களின் உளறல்கள் நிறைய கேட்க முடிகிறது ..
..
சென்ற தேர்தலை விட திமுக பெற்று இருக்கும் வாக்கு விகிதம் கூடுதல் என்பதும் ஏ.சி.சண்முகம் கடந்த தேர்தலில் தனி செல்வாக்கோடு பெற்ற வாக்குகள் எண்ணிக்கையோடு அதிமுக வாக்குகளை சேர்த்தால் சில லட்சம் வித்தியாசங்களில் வென்றிருக்கவேண்டும் .. அதே நேரம் திமுக இன்னும் அதிக வாக்குகளை பெற்று வென்றிருக்கவேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை .. எங்கு தவறு நடந்ததென திமுக பரிசோதனை செய்யவேண்டியதும் அவசியம் ..
..
ஏதாவது ஒரு இடத்தில் வென்றுவிட்டு வந்து கருத்து சொல்லட்டும் என்ற கனிமொழியின் கருத்து கடந்து போக முடியவில்லை ஏனெனில் எதற்கெடுத்தாலும் தாங்கள் மட்டுமே தெளிவுள்ளவர்கள் தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்கிற மனபான்மையோடு மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால் எதைச் சொன்னாலும் ஊடகம் அதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என்பதால் உளறிவைக்க கூடாது ..
கருத்து சொல்வதற்கு உரிமை உண்டெனினும் பொய்களும் போலித்தனமும் உளறலும் கருத்தாக கொள்ளமுடியாது .. ஒருதலைபட்ச செயல்பாடுகள்
நடுநிலை என்பதும் அதை ஊடகங்கள் தொடர்ந்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு பேராபத்து ..
..
அரிசயல் தெளிவற்றவர்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது .. தமிழகம் போன்ற நேர்கொண்ட அரசியல் பார்வை கொண்ட தமிழகத்தில் திட்டமிட்டே இது போன்று உளறல்களையும் அரைகுறைகளையும் உலவவிடுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது தொடர்ந்து இது போன்று திரும்ப திரும்ப பேசினால்
இது தான் அரசியல் என நம்ப வைக்கமுடியுமென எண்ணுகிறார்கள் .. ஆனால் அதற்கான இடம் இதுவல்ல என்பதும் தமிழிசை எச்.ராசா சர்மா பொன்னர் போன்றவர்களை நகைப்பிற்குரியவர்களாகவே தமிழகம் பார்க்கிறதென்பதும் தான் உண்மை..
பேராசான் பெரியாரின் பணி அப்படி ..
திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளும் தெளிவான அரசியலும் இதுபோன்ற அரைகுறைகளால் ஒன்றும் செய்திட முடியாது .. வேண்டுமானால் உளறி திரியலாம்
..
தமிழிசை இம்சை ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment