Tuesday, September 10, 2019
திராவிடமே தேவை
பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவின் கண்ணன் கோபிநாத்,தமிழ் நாட்டின் சசிகாந்த் செந்தில்,அருணாச்சல பிரதேச கோஷ் மிட்டல்,நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்ங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும். ஐ ஏ எஸ் அதிகாரிகள் ..
இந்த பட்டியல் நீள கூடும் அரசுதுறையில் அதிகாரமிக்க பதவிகளில் மூன்று விழுக்காடு அத்துமீறி மூக்கை நுழைப்பதும் அதிகார மையம் நாக்பூரை சுற்றி இயங்குவதால் மீறபடுகிற மரபுகள் சட்டங்கள் எல்லாம் மநுவின் பார்வையில் சரியாகும் என்பதால் நேர்மையான அதிகாரிகள் விலக தொடங்கியிருக்கிறார்கள் ..
..
நீதிமன்ற செயல்பாடுகளில் பாசிசம் அத்துமீறி நீதியை வளைத்தொடிக்கிறது .. மிரட்டுகிறது தொடர் இடைஞ்சலை தந்து தானாகவே பதவி விலக வைப்பதன் மூலம் தங்கள் இனத்தவர் அல்லது தங்களுக்கு வேண்டபட்டவர் ,தலையாட்டுகிற பொம்மைகளை கொண்டு நிரப்பப்படலாம் ..
உயர்நீதிமன்ற நீதிபதியே தாமாக பதவி விலகும் அவலம் .. எத்தகைய மனஅழுத்தம் வெறுப்பு பயம் இருந்திருந்தால் விலகி இருப்பார் என்பது புரிகிறது .. முற்போக்காளர்கள் ,துறைசார்ந்த வல்லுநர்கள்,மண்ணை நேசிக்கிற மனிதநேயமிக்கவர்கள், வேட்டையாட படுவது இந்த ஆட்சியின் அவலத்தை படம்பிடித்துகாட்டுகிறது ..
..
36 வது நாளாக கஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை தந்தை மகனை பார்க்க மகளை பெற்றோரை பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டியிருக்கிறது .. ஜனநாயகம் கொடூரம் .. மிருகபலத்தோடு ஆட்சியாளர்கள் செயல்படும்போது ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கபடுவது இயல்பு ..மிக சிறந்த ஜனநாயகவாதிகள் மட்டுமே பொறுப்புணர்ந்து செயல்படுவர் அதை பாசிசத்திடம் எதிர்ப்பார்க்கமுடியாது .. பொருளாதார மந்தநிலைக்கு ப.சி யை காரணம் காட்டி ஒளியலாமென்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் .. ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு OLA uber நிறுவனம் வந்ததுதான் காரணம் என்ற அறிவார்ந்த நிதியமைச்சரை பெற்றது நமது பாக்கியம் ..
..
இன்னும் நிறைய சோதனைகள் வரும்.. அதற்குள் நமக்கு பழகிவிடும் சொற்ப பணத்திற்கு வாக்கை விற்று யாராண்டால் என்ன என்று நாம் கடந்து போவோம் ..
நாளைய தலைமுறைக்கு மண்ணை கூட நஞ்சாக்கிவிட்டு நமக்கென்ன என்று இருப்போம்.. வாக்குபதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் பாசிசபிடியில் ..
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் ..
மக்களே இந்த ஜனநாயக கேடுகளை கண்டு சிவந்தெழ வேண்டும் ஜனநாயகத்தின் வேர்களில் இன்னமும் ஈரமிருக்கிறது .. இந்த நாட்டிற்கு பெரியாரிய மொழியே தேவை ..
அதுமட்டுமே சரியான நீதியை சமநீதியை சமூகநீதியை தரும்.. ஒருங்கிணைந்த இந்தியாவின் இன்றைய தேவை பெரியார் ..
திராவிட சித்தாந்தம் அதுவே ஒருமுகபடுத்தும் உயர்விற்கு வழிவகுக்கும் ஏற்றதாழ்வுகளை களையும் சுயமரியாதையை கற்பிக்கும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment