Monday, October 7, 2019
பெண்கள் மீதான கட்டுபாடுகள்
சவுதி தன் பிடியை தளர்த்துகிறது இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து திசை திரும்புகிறது
நிறைய கட்டுபாடுகள் தளர்த்தி பெண்களுக்கு விதிக்கபட்ட ஒழுங்குகளை திரும்ப பெற்றிருக்கிறது
உடை விடயத்திலும் தனியாகவோ தன் கூட்டாளியுடனோ தங்க இனி சான்றிதழ் சரிபார்ப்பெல்லாம் தேவையில்லை முதலில் வெளிநாட்டவர்களுக்கு விதிகள் தளர்த்தபட்டு படிபடியாக உள்நாட்டினருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் திருத்தபடும் ..
..
சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல்களில் இனி வெளிநாட்டினர் திருமணம் ஆகாத ஆண் , பெண்கள் ஜோடியாக தங்கலாம் என்று சவுதி நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. குறிப்பாக 49 நாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அடிப்படையில் விஷேச சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு திருமணம் ஆனவர்கள் என்கிற ஆவணம் சமர்பிக்க தேவையில்லை சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டு பெண்கள் அவர்கள் விரும்பும் உடைகளை அணியலாம்..
..
சிலர் இஸ்லாமிய கோட்பாடுகளை தகர்க்குமென விமர்சிக்கிறார்கள் கூடவே ஒழுக்கம் கெடும் என்ற வார்த்தையை மறக்காமல் பதிவு செய்கிறார்கள்
ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே என்பது பொதுவாக எல்லா சமூகத்திலும் இருக்கிறது வேலை செல்லும் பெண்களை விபச்சாரிகள் என்றழைத்த மத குருமார்கள் எல்லாம் இப்போது எதுவும் கதைப்பதில்லை .. பெண்கள் மீதான அடக்குமுறைகள் காலபோக்கில் செயலிழந்து நிற்கும் என்பதற்கு இந்த அறிவிப்பு சான்றாகும் ..இஸ்லாமிய நாடுகளில் எல்லா நாடுகளும் (சவுதியை தவிர) பெண்களுக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது அந்த பட்டியலில் சவுதியும் இணைகிறது அவ்வளவுதான் ..
..
சில அடிப்படைவாதிகள் பிற்போக்கு சிந்தனையை தூக்கிபிடித்து முனக தொடங்கியிருக்கிறார்கள் ஷரியத் சட்டத்தில் சொல்லபட்டதை மீற யாருக்கும் உரிமையில்லை .. மதம் கூறும் ஒழுக்க பண்பாடுகள்
நேர்வழிக்கானது என்கிறார்கள் மறுப்பதற்கில்லை அது ஒருவழிபாதையாக இருப்பதைதான் சரியில்லை என்கிறோம் .. பெண் தவறு செய்துவிடுவாள் அதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றெல்லாம் சில நண்பர்கள் பதிவிடுகிறார்கள் ..
அதே தவறை ஆண் செய்கிற போது மௌனம் காக்கிறார்கள் ஒழுக்கம் இருபாலருக்கும் பொருந்தும் என்பதை மறந்து போகிறார்கள் ..கட்டுபாடுகள் இருந்த போதும் இவர்கள் சொல்கிற "தவறுகள்" நிகழாமல் இல்லை ஆனாலும் பெண்கள் மீதான "சுமத்தல்கள்" இவர்களின் கூப்பாடாகவே இருக்கிறது ..
ஆணுக்கு பெண் அடிமை என்கிற மனநிலையை தூக்கியெறிந்துவிட்டு சிந்தித்தால் இவர்கள் இதுவரை சொல்லிவந்ததெல்லாம் அபத்தம் என புரியும் .. பெண்கள் எல்லாதுறைகளில் மிளிர்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கி கொள்கிற சூழல் அமைந்தாலே போதும் ஆண்களை விட தாங்கள் திறமையால் சாதித்து காட்டுவார்கள் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment