Monday, July 29, 2019
பொருளாதார இடஒதுக்கீடு மோசடி
#10PercentFraudReservation
..
இனி மெல்ல மெல்ல அழிந்துபோவோம்..
நம் உரிமைகள் நாமே காவுகொடுக்கிறோம் .. சில ஆயிரங்களுக்கு ஆசைபட்டு வாக்குகளை விற்ற நாம் .. பாட்டனும் அப்பனும் பட்ட கஷ்டங்களை நம் பிள்ளைகள் மீது திணிக்கிறோம்.. பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் கட்டி காத்த சமூக நீதி கண் முன்னே சவக்குழியில் ..
உயர்ஜாதி ஏழை என்ற தகுதியில் பார்பன கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போகிறது .. நாம் வேடிக்கை மனிதராய் நிற்கிறோம் .. நாம் தமிழ் தேசியம் பேசியும் .. சாதி பெருமை பேசியும் உரிமைகளை இழப்பதே அறியாமல் .. என்ன கொடுமை ..
..
இனி ஐம்பதாண்டு பின்னோட்டு செல்வோம் பார்பன அடிமைகளாய் திரிவோம் பாஜக என்பதே பார்பன ஜனதாவிற்கானது .. அவர்கள் நலம் மட்டுமே முக்கியமாய் கொண்டு இயங்கும் .. தேசபக்தி ஜெய்ராம் மாட்டை புனிதமாக கருதும் மடத்தனம் இவையெல்லாம் சொல்லி நம்மை அடியாட்களாக வலம்வரவிட்டு அவர்கள் அமைதியாய் அரசு பதவிகளில் அமர்கிறார்கள் .. ஜெய்ராம் சொல்ல சொல்லி மனித ரத்தத்தை கையில் ஏந்தி ராம் ராம் என கொக்கரிப்போம் ..
நம்மை விட தாழ்ந்தவனை அம்மணமாக்கி அடித்து உதைத்து.. நம் உரிமைகளை கல்வியை வேலைவாய்ப்பை இழந்து அம்மணமாவோம் ..உண்மையில் பார்பனர்களை பாராட்டதான் வேண்டும் நம்மில் ஏற்றதாழ்வை சொல்லி கலகம் செய்து அடியாட்களாக்கி மதவெறியை சாதிவெறியை தூண்டி நம் மக்களை ரௌடிகளாய் அடியாட்களாய் கலககாரனாய் செய்துவிட்டு. நோகாமல் குறைந்த மதிப்பெண் பெற்றாலே போதும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாம் என்ற மிக அருமையாக திட்டம்தீட்டி அதை நம்மை கொண்டே செயல்படுத்தி வென்றிருக்கிறார்கள் ..
..
பொருளாதார இடஒதுக்கீடென்பதே ஒருவகையில் ஏமாற்று.. அயோக்கியத்தனம் அதிலும் உயர்ஜாதி வருமான உச்சநரம்பு 8 லட்சம் ஐந்து ஏக்கர் மெட்ரோ நகரில் 1000 சதுர அடி .. இவையெல்லாம் வைத்திருப்பவர்கள் பாவம் ஏழைகள் .. ஆனால் மற்றவர்கள் ஐந்து லட்சம் வருமானமென்றால் பணக்காரர்கள் .. வீட்டில் ஏ.சி இருந்தால் ரேசன் கிடையாது எல்லாவற்றையும் கடந்து போவோம் .. நமக்கு அத்திவரதர் தரிசனம் கிடைத்தால் போதும்..
அதை கூட நம்மிடமிருப்பதை கொள்ளையடிக்க என்பதை கூட அறியவில்லை ..
..
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை ..
நமக்கு விழிப்புணர்வு வராவிட்டால் எதை சொன்னாலும் தலையாட்டுகிற எடப்பாடிகளே போதுமென்றால் ஏன் என்று கேள்வி எழுப்பி போராடாமல் போனால் நம் குழந்தைகள் கல் உடைக்கவும் மாடுமேய்க்கவும் அப்பன் தொழிலை செய்ய வேண்டிய நிலை தான் வரும் ..
யாரை தேர்ந்தெடுப்பது என்று அறிந்திருக்கவேண்டும் அதை விட யாரை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டுமென்ற அறிவு வேண்டும் .. இல்லையெனில் அரும்பாடுபட்ட கட்டிகாத்த சமூகநீதி சவக்குழிக்குள் போகும்
எச்சரிக்கை ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment