Monday, October 14, 2019
காந்தி
காந்தி எப்படி தற்கொலை செய்துக் கொண்டார்..?
தவறாக அச்சடிக்கபட்டதாக கடந்து போக முடியாது
கவனகுறைவென்றோ அதிகாரிகளின் அலட்சியமென்றோ திசை திருப்ப முயற்சிக்கலாம் திட்டமிட்டே பரப்பபடுகிறது
கோட்சேவை "தேசதந்தை" என சில ஆர்எஸ்எஸ் எடுபிடிகள் சொன்னபோதே செவிட்டில் அறைந்து வழக்கு பதிவு செய்து தேசதுரோகம் என செய்திருந்தால் இன்று காந்தி "தற்கொலை" வரை வந்திருக்காது ..
திட்டமிட்டு குறிப்பாக குழந்தைகளின் மனதில் காந்தியைப் பற்றி தவறான கருத்தை விதைக்க முயல்கிறார்கள் நாளை கோட்சேவை புனிதராக்கி பள்ளிக் குழந்தைகளின் மனதில் ஒரு நல்லெணெணத்தை விதைக்க முற்படலாம் ..
பாசிசத்தின் திட்டமே வரலாற்றை திரித்து எழுதுவதுதான் இல்லாத ஒன்றை "புராணம்" வேதமென்ற பெயரில் எழுதி மக்களை பிரித்தாள்கிறவர்கள் இன்று இந்திய சுதந்திர வரலாற்றை அதை தொடர்ந்து இந்திய மண்ணின் ஒற்றுமையை சிதைத்து மாற்றி எழுத முயற்சிப்பதின் வெளிபாடுதான் காந்தி தற்கொலை
..
விடுதலை போராட்டத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து பகிரங்க மன்னிப்பை எழுதிகொடுத்து சுதந்திரமாய் திரிந்தவர்கள் .. நாட்டை காட்டி கொடுத்தவர்கள் தேசபக்தர்களை போல வேசம்கட்டுகிறார்கள் .. தேசத்தின் விடுதலையில் ஆர்எஸ்எஸ் காரர்கள் யாராவது பங்கேற்றிருக்கிறார்களா என்ற தொடர்ந்து எழுப்பபட்டும் இதுவரை பதில்லை ..அடிமை இந்தியாவில் என்னை புதைக்க விரும்பவில்லை என்ற ஒருவரையாவது காட்டமுடியுமா தேசவிடுதலைக்காக தன் சொத்து முழுவதும் எழுதிக் கொடுத்த ஒரு ஆர்எஸ்எஸ்/பார்பனரையோ காட்டமுடியுமா .. இதெல்லாம் செய்தவர்கள் இன்று தேசதுரோகிகளாய் சித்தரிக்கபட்டதுதான் கொடுமை
திட்டமிட்டு இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள்.. வருங்கால சந்ததிகளிடத்தில் "பொய்" செய்திகள் மிக நுணுக்கமாக கொண்டு சேர்த்து இந்திய வரலாற்றையே இந்துராஷ்ரீய வரலாறாக்க முயற்சிக்கிறார்கள் .. ஆனால் மக்கள் மனதில் "மகாத்மா" வாக நிறைந்து நிற்கிறார் காந்தி .. இது போன்ற ஈனச்செயல்களில் ஈடுபடுவோர்களை கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் இதன் பின்னில் யார் இருக்கிறார்களென கண்டறிந்து மக்கள் மன்றத்தின் இத்தகைய "போலிதேசியவாதிகளை" நிறுத்தவேண்டும் ..
ஆர்எஸ்எஸ் இந்த நாட்டிற்கு தீங்கு..
..
குஜராத் அரசின் மீதும் பாடநூலில் இடம்பெற செய்த சக்திகளின் மீதும் கடும் நடவடிக்கை தேவை .. காந்தியார் மீது
கடும் கருத்துவேறுபாடு இருந்த போதும்
அவரை மதிக்க தவறியதில்லை.. காந்தியின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை ஆனால் காந்தி தேசதந்தை என்பதிலோ மகாத்மா என்பதிலோ மாற்று கருத்தே இல்லை
நம் தேச தந்தையை கொன்ற கூட்டம் இன்று அதிகாரத்தில் இருப்பதால் இத்தகைய அலுச்சாட்டியங்கள் நடைபெறுகிறது ..இதை இப்படியே விட்டால் காந்தி தேசதுரோகி என்று கூட நாளை பேசபடுவார் ..
காந்தி #மகாத்மா ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment