Saturday, September 21, 2019

கீழடி

#கீழடி.. .. கீழடி சொல்லும் சேதி இதுதான் தமிழன் எந்த மதங்களையும் கடவுள்களையும் தூக்கி சுமக்கவில்லை.. 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வாழ்வியலுக்கு சொந்தகாரன் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியதும் தெரிகிறது .. தமிழன் வரலாறு மிக தொன்மைவாய்ந்தது அவன் பேசிய மொழியே முதல்மொழியாக இருக்ககூடும் மொழி வழக்கம் வருவதற்கு முன்பு சைகை ஒலியெழுப்பல் சில நூற்றாண்டு பின்னோட்டு இருந்திக்கவேண்டும் கீழடியில் வெளிவரும் உண்மை இந்திய கலாச்சாரம் இந்து கலாச்சாரமென்பதென்லாம் பொய் என்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழனின் வரலாறு என்பது "புராணங்களை" போல கட்டிசமைத்ததல்ல என்பது தெளிவாகிறது .. .. கீழடி மற்றொரு விடயத்தை நமக்கு சொல்கிறது இந்திய துணைகண்டத்தில் முதல் நாகரீக வாழ்வை வாழ்ந்தவன் என்பதும் ஆரிய வரவிற்கு முன்பே செமையா வாழ்ந்தவன் என்பது சாதி பேதம் வர்ணகோட்பாடு மதம் என எதுவுமில்லாத இயற்கையை போற்றி வாழ்ந்ததும் தெளிவாகிறது .. கீழடி சொல்லும் மற்றொரு சேதி திராவிட சித்தாந்தம் சொல்லும் சாதி மதம் எல்லாம் கட்டுகதைகள் மனிதனை பிரித்து தங்களை முன்னிலை படுத்த ஆரியர்கள் செய்த சதி என்பதும் புலனாகும் ..எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள் சதுரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.. மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.. மதம் சார்ந்து கடவுள் சிலைகளோ குறியீடுகளோ கிடைக்கவில்லை .. இதிலிருந்தே தமிழ்குடியின் தொன்மை விளங்கும் மதம் சார்ந்தில்லை என்பதும் புரியும்.. .. இந்த மாதம் 30ந்தேதி ஐந்தாம் அகழாய்வு நிறைவு பெறுகிறது.. இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம் வேகவேகமாக ஆய்வுபணிகளை முடிக்க நினைக்கிறது அரசு தமிழனின் பெருமையை யாராலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ஒருவிடயத்தை சொல்கிறார் நாம் 10% விழுக்காடு தான் ஆய்வு செய்திருக்கிறேன் 110 ஏக்கரில் 10 ஏக்கர்தான் அதுவும் 10 அடி தான் ஆய்வு செய்திருக்கும் இன்னும் ஆழபடுத்தினால் இன்னும் நிறைய கிடைக்கலாம் என்கிறார் ஆம் இன்னும் தமிழர்களின் நாகரீக வரலாற்றைப்பற்றிய தரவுகள் கிடைக்கும் அரசு தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும் .. .. #கீழடி_எமது_தாய்மடி .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment