Thursday, October 3, 2019

கொடுங்கோன்மை

இந்து கிருஸ்துவ ஜைன,சீக்கிய அகதிகள் பயப்பட தேவையில்லை இஸ்லாமிய அகதிகள் மட்டுமே வெளியேற்றபடுவார்கள் என்று வெளிப்படையாக இன அழிப்பிற்கு வித்திட்டிருக்கிறார் அமித்ஷா ..என நடிகர் சித்தார்த்த் ட்விட் செய்திருக்கிறார்.. இதை எந்த கட்சிகளும் இதுவரை கண்டிக்கவில்லை மிக தெளிவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் இந்த அரசு செயல்படுமென அறிவித்திருக்கிறார் இஸ்லாம் அல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்பதே அதன் சுருக்கம் .. .. முதலில் இந்தியாவிற்கு நுழைந்த அகதிகளை வெளியேற்ற வேண்டுமென்ற கருத்தே சர்வதேச அரங்கில் இந்தியாவின் முகத்தை மாற்றிவிடும் இதுவரை இந்தியாவின் மீதான மதிப்பு இவரின் பேச்சால் தரந்தாழ்ந்துவிடும் .. பிற சமூக மதத்தை சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்ளும் போது இஸ்லாமிய அகதிகளை மட்டும் வெளியேற்றபடுவார்கள் என்பதிலிருந்தே எவ்வளவு வன்மத்தோடு இந்த ஆட்சியாளர்கள் இருப்பதை உணர்த்துகிறது .. ஆனால் வரலாறு வேறுவிதமாக பதிவு செய்திருப்பதை அறியாமல் பேசுகிறார் .. இஸ்லாத்தை அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி செயல்பட்டவர்கள் இருக்குமிடம் தெரியாது போனதாகதான் வரலாறு ..இதுபோன்ற செயல்களால் இஸ்லாத்தை நோக்கி நிறையபேர் வருவதற்கே வழிவகுக்கும் இதனால் எதிர்மறையாக இஸ்லாம் வளரும் .. .. இஸ்லாத்திற்கெதிராக குறிப்பிட்ட பிரிவினரை (பார்ப்பனர் தவிர்த்து) ஏவிவிடுவார்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு நம் இளைஞர்கள் சிறை வழக்கென சீரழிவார்கள்.. ஒரு சமுகத்தின் மீதான தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது மனித மாண்புகள் சிதைத்து மனிதநேயமற்ற கொடுங்கோலர்களின் ஆட்சியை போல நடத்துவது இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தும் "இந்துத்துவா" கொள்கை பெரும்பான்மை இந்துக்களாலேயே வெறுக்கபடுகிற ஒன்றாய் இருக்கிறது ..மதவெறிபிடித்த செயல்களை யாரும் ஏற்பதில்லை பாகிஸ்தானை காட்டி பயமுறுத்துதல் சமீபகாலமாக பலிக்காமல் போகிறதென்பதே உண்மை .. பாகிஸ்தானை பலம்பொருந்தியதாக சித்தரிப்பதால் "இந்துத்துவா " வெறியேற்ற பயன்படுமே தவிர இந்தியாவின் பலத்தை கொச்சைபடுத்துவதாகதான் அமையும்.. அமித்ஷாவின் இந்த பேச்சு இஸ்லாமிய மக்களுக்கெதிராக பிற சிறுபான்மையினரை ஒருங்கிணைக்க உதவும் ஆனால் அதே கத்தி பிறகு அவர்களையும் குத்தி குதரும் .. பாஜக ஆர்எஸ்எஸின் நோக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மதகலவரம் வரவேண்டும் என்பதே .. ஆனால் விழிப்புணர்வு பெற்ற கல்வியறிவு பெற்றவர்களாய் இந்திய மக்கள் இருக்கிறார்கள் ... இவர்களது எண்ணம் ஈடேறாது.. .. இன்னும் சிலகாலம் பாசிசத்தின் கையில் நாடு இருந்தால் துண்டாகும் .. மக்கள் தன்னெழுச்சியாய் இந்த அரசை அகற்ற முன்வருவார்கள் இந்திய பன்முகதன்மைக்கெதிராக ..ஒரு குறிப்பிட்ட இன மத மொழிக்கு எதிராக செயல்பட்டால் காலம் நல்ல படிப்பினையையே தரும் .. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. என்றான் வள்ளுவன் நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் #கொடுங்கோன்மை .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment