Tuesday, August 13, 2019
எடப்பாடி
விமர்சிப்பதெற்கு தகுதி வேண்டும் அதைப்பற்றிய அல்லது அவரைப்பற்றிய அறிவு வேண்டும் சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம் தான் தங்கள் அறிவு என்பது தெரியும் பிறகெதற்கு தரகுறைவான விமர்சனம் பூமிக்கு பாரம் ..
..
எல்லோரும் பாரம் தான் இந்த மண்ணில் செத்து விழுந்து மக்கி மண்ணாகி போகிறவர்கள் தான் வாழும் போது என்ன சாதித்தோம் எதை செப்பனிட்டோம் வாழும் தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் எதாவது மிச்சம் வைத்தோமா .. அறிவுடைச் செயலால் ஏதேனும் சொல்லிவிட்டு போனோமா என்றிருக்கவேண்டும் ..
யாரை விமர்சிக்கிறோம் அவரது ஆளுமை என்ன அவரின் கடந்தகால சிறப்பென்ன என்ன அவர் ஆற்றிய பணி நாடாளுமன்றத்தில் அவரின் செயல்பாடுகள் அமைச்சராக அவர் செய்த பணிகள்/திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவகையில் உதவியது .. என்றெல்லாம் பார்த்தால் எடப்பாடி வாய்மூடி மௌனம் காக்கவேண்டிவரும் .. அவரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கவே கூடாதா என்றால் அப்படி இல்லை எதற்கும் லாயக்கில்லாத அரைகுறைகள் விமர்ச்ப்பதுதான் சகிக்கவில்லை ..
ஒரு முறை அவர் சொன்னார் நான் பொருளாதார நிபுணர் இல்லை நிபுணரென்றால் அது டாக்டர் மன்மோகன் சிங் தான் நான் நிர்வாகி என்றார் அது தான் தன்னடக்கம் ..
..
யாரிந்த எடப்பாடி அவரின் அரசியல் செயல்பாடுகள் இதற்கு முன்பு பேசபட்டிருக்கிறது .. முப்பது அடிமைகளில் ஒரு அடிமை அவ்வளவுதான் ..ஓபிஎஸ் மௌனம் காத்திருந்தால் சகிகலா கண்ணில் தெரிந்திருக்கவே மாட்டார் சகிகலா தயவில் கால்நக்கி வந்தவர் பதவி வந்தவுடன் மத்திய எஜமான விசுவாசத்தை காட்டி குலைந்து நின்று தன்னை உயர்த்தியவரை முதுகில் குத்தி அதிகார மோகத்தில் ஆடுகிறார் .. மத்திய அரசின் கடைக்கண்பார்வை கொஞ்சம் மாறினால் காலமெல்லாம் கழி தின்ன நேரிடும் ..
..
ப.சி அரசியல்வாதியாக தன் திறமையை பலமுறை நிரூபித்தவர் தெளிவான பேச்சாற்றல் அறிவார்ந்த சொல்/செயல் ஆதாரங்களோடு தவறுகளை சுட்டிகாட்டும் திறமை ஆட்சியில் பதவியில் இருந்தபோதும் இல்லாது எதிர்வரிசையில் இருந்தபோதும் அவரின் சொல் இந்த நாட்டிற்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது அரைகுறையாய் பேசி திரிந்ததில்லை அவர் .. நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை இன்னும் போய் பார்க்ககூட இல்லை .. ஸ்டாலின் ₹10 கோடி எம்பிக்கள் நிதியிலிருந்து தந்தால் அதை வைத்து என்ன செய்வதென்கிறார் உண்மையில் முதல்வர்தானா.. சென்ற ஆண்டு உடைந்த முக்கொம்பு அணை இதுவரை கட்டபடாமல் நீர் வர தொடங்கியவுன் கட்ட தொடங்குகிற அதிமேதாவி .. மத்திய அமைச்சர் கை நீட்டி பேச முதல்வர் அறையில் எழுந்துநின்று பதலிளிக்கும் கோழை .. தன்மானமில்லா கொள்கையில்லாத அரைவேக்காடு .. ப.சிதம்பரத்தை பேசுவதெல்லாம் கொடுமை ..
..
கனிமொழி சொன்னதைப் போல
தமிழ்நாட்டிற்கு யார் பாரமாக இருக்கிறார்களென மக்களுக்கு தெரியும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment