முரசொலி நிலம் விவாதமாக்கியிருக்கிறார் ராமதாஸ் .. பஞ்சமி நிலம் அதை ஆக்ரமித்து முரசொலி கட்டிடம் உள்ளது .. சென்னை போன்ற பெருநகரங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை ஆனால் ஆக்ரமிப்புகள் நீர்வள பகுதிகள் ஏரிகள் என அதிவேகமாக நடந்தேறியது எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் தான் .. ஒரு குற்றசாட்டை சொல்கிறவன் யோக்கியனாக இருக்கவேண்டும் .. ஆனால் ராமதாஸ் போன்ற அயோக்கியர்களுக்கு
அதற்கான தகுதி இல்லை ..
..
வன்னியர் அறக்கட்டளை சார்பில் கட்டபட்ட கல்லூரிக்கு தன் மனைவியின்
(சரஸ்வதி அம்மாள்) பெயரை வைத்தவர்
அது கூட விளை நிலத்தில் அமைக்கபட்டதாக குற்றசாட்டு எழுந்தது அப்போது இதே ராமதாஸ் தான் அது பயிர்விளையும் நிலமென ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டால் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன் என "வீரவசனம் பேசினார் .. அப்போதைய திமுக பொருளாளர் ஆற்காட்டார்
பதிவு எண் உள்பட வெளியிட்டு அந்த இடம் தற்போதைய நிலைவரை விளைநிலம் தான் என வெளியிட்டபோது இந்த ராமதாஸ் பேச்சையே காணோம்.. சில நாட்கள் கழித்து தனிப்பட்ட முறையில் ஆற்காட்டாரை "செவிடன்" என தாக்கி பேசினார் .. அதற்கு கொஞ்சமும் கோபபடாமல் ஆம் "மிசா"வில் கைதான போது அறைந்ததில் காது சவ்வு கிழிந்ததில் கேட்கும் திறன் குறைந்தது ..ஆனால் ஜெயலலிதா கைது செய்த போது மனைவியை விட்டு கெஞ்சியதை போல இல்லை ..மன்னிப்பு கேட்கும் பழக்கம் எமது இனத்திற்கே இல்லை காலில் விழுவதும் பெற்ற தாயை கூட அசிங்கபடுத்துவதும் ராமதாஸூக்கு வேண்டுமானால் இருக்கலாம் மானகெட்டு காலில் விழவில்லை என பதில் தந்தார் ..
..
இப்போது கூட தளபதியார் வழி வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான நிலம் என்பதை உறுதிபடுத்த ஆவண எண் உள்பட வெளியிட்டிருக்கிறார்.. பஞ்சமி நிலம் என நிரூபித்தால் விலக தயார் என்று சொல்லியிருக்கிறார் .. எதையும்,ஆதாரத்தோடு வெளியிடுவது திமுகவினரின் செயல் ஆனால் இந்த மானங்கெட்ட ராமதாஸ் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை நமக்கென்று தரம் உள்ளது அரசியலில் தரங்கெட்ட அரசியலை வியாபாரமாக்கி சொந்த சமுதாய மக்களையே ஏலம் விடும் அயோக்கியத்தனத்தை கொஞ்சம் கூச்சமின்றி செய்து பிழைப்பு நடத்தும் மக்களால் புறக்கணிக்கபட்டவரோடு அரசியல் செய்ய தேவையில்லை .. அரசியல் ஓழுக்கமற்ற அறமற்ற பொய்யரோடு விவாதிப்பது கூட வீண்வேலை
..
தமிழக அரசியலில் இப்படி ஒருவரை நாடு சந்தித்ததில்லை ராமதாஸ் அரசியலை உற்று கவனித்தால் சுயநலம் மட்டுமே,மிஞ்சும் சாதிவெறியை இளைஞர்களிடத்தில் விதைத்து
கலவர பூமியாக்கி குளிர்காய்கிறவர் தன் மகனுக்காக தன்னோடு இணைந்து செயலாற்றியவர்களை கூட கழுத்தறுக்க தயங்காதவர் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு வின் இறுதி காலம் மிக மோசமான இருந்ததும்
அப்போலோவில் இருந்து உடலை பெற மூன்று லட்சம் வரை வீரவன்னியர் பேரவை செலவு செய்ததும் அப்போது பேசபட்டது தான் தன் மகனுக்கு இடைஞ்சலாக குரு இருந்துவிடுவாரோ என பயந்தவர் ராமதாஸ் .. மிக மிக கேவலமான அரசியலை செய்பவர் ராமதாஸ் அரசியலில் இருந்தே துடைத்தெறியபட வேண்டிய "குப்பை" திரு.ராமதாஸ் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment