Friday, August 30, 2019

நீதி..?

நீதியரசர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு "கருத்து" சொல்கிறார்கள் அது சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை அதிர்வை ஏற்படுத்துகிறது. ஏன் நீதிபதிகளுக்கென்று சொந்த கருத்து கூடாதா அவருக்கென்று மத நம்பிக்கை கூடாதா.. தன் கருத்தை சொல்வதில் தவறில்லையே என நினைக்கலாம் .. அவரின் சொந்த விருப்பு வெறுப்பை சொல்லுமிடமாக நீதிமன்றங்களை பயன்படுத்துவது நீதிபரிபாலனத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கவே செய்யும் .. .. சமீபமாக உயர்நீதிபீடங்களில் தங்களின் கருத்தை எண்ணத்தை வெளிப்படையாக சொல்வதும் பிறகு பி்ன்வழிப்பதும் தொடர்வது கவலைக்குரியது .. கிருஸ்துவகல்வி நிறுவனங்களின் மீது பெற்றோர்கள் அச்சம் சொல்வதாக நீதியரசர் கருத்து வலுவான எதிர்ப்பிற்கு பிறகு திருத்தம் செய்யபட்டது .. யாகூப் மேனனின் தூக்குத்தண்டனை மறுபரிசீலனையின் போது அட்டர்னி ஜெனரல் நள்ளிரவில் கூடிய உச்சநீதிமன்ற அமர்வில் மநுநீதியை சுட்டிகாட்டியது அப்போது விவாதமானது உச்சநீதிமன்ற பதிவாளர் விலகி செல்லநேரிட்டதெல்லாம் இந்திய நீதிமன்றங்களில் "நீதி" யை குறித்த பார்வையாக கருதினார்கள் .. செல்வி. ஜெயலலிதா வழக்கில் நீதியரசர் கிருபாகரன் " மக்களுக்கா நான் " என்ற சொத்துகளை ஏன சிலவற்றை ஏழைகளுக்கு வழங்ககூடாதென கேள்வி எழுப்பியிருக்கிறார் .. ஜெயலலிதா இருந்த போது அவர் தன் சொத்துகளைப் பற்றி தனக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கோ அல்லது யாருக்கு அதை அனுபவிக்க உரிமை உண்டென்று சொல்லாத போது கருத்தை சொல்வது வழக்கை அதன் நோக்கத்தை பாதிக்கும் .. .. கலைஞர் கருணாநிதி தனக்கு பிறகு தன் இல்லத்தை தயாளு அம்மாள் உயிரோடு இருக்கும்,வரை அனுபவிக்கலாம் அவருக்கு பிறகு மருத்துவமனையாக்க வேண்டுமென தனது வாரிசுகளிடம் கையெழுத்து பெற்று (ஏற்கனவே எழுதிவைத்ததை திரும்ப பெற்று) வழங்கியிருக்கிறார் .. அரசு பதவி வகித்தவர் இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக அரசியல் போக்கையே வடிவமைத்தவர் அவரின் இல்லம் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என்பதை அவரே முடிவு செய்திருக்கிறார் அதுபோல ஜெயலலிதா எதுவும் செய்திடாத போது ..ஏன் கருத்தென்ற பெயரில் வழக்கின் போக்கை மாற்ற வேண்டும் .. .. தண்டிக்கபட்ட குற்றவாளி வழக்கின் மேல்முறையீட்டு காலத்தில் மரணமடைந்திருக்கிறார் வழக்கின் தீர்ப்பு கீழ்நிலை நீதிமன்ற தீர்ப்பையே உறுதிசெய்திருக்கிறது அவரின் அபராத தொகையை எப்படி வசூலிப்பதென்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் சொத்தை சொந்தம் கொண்டாட உரிமை உள்ளவர்கள் யாரும் முயற்சியெடுக்கவில்லை காரணம் அபராத தொகையை எங்கே செலுத்த நேரிடுமோ என அஞ்சி கண்டுக்கொள்ளவில்லை இந்நிலையில் அரசுடைமையாக்க வேண்டுமென்பதும் .. குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்டவரை அரசு கொண்டாடுவதும் அதை மக்கள் வரிப்பணத்தி செய்வதும் யாரும் கண்டிக்கவோ செய்யாதது வியப்பளிக்கிறது .. இந்திய நீதிமன்றங்கள் நீதி எதை காட்டுகிறதென்பதற்கு இது உதாரணமாகலாம் .. .. நீதிமன்ற செயல்பாடுகள் காலதாமதமாவதும் தகுதி நீக்கம் வழக்கில் வருடங்களாக விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக காத்திருப்பதும் அரசு ஆட்சிகாலம் வரை அமைதியாக இருப்பது ஆள்வோரின் கண்ணசைவிற்காக காத்திருப்பது அரசிற்கு ஆள்வோருக்கும் தேவைபடும் போது விரைந்து தீர்ப்பை தருவதென்பது .. சொந்த கருத்தை வழக்கு விசாரணையின் போது சொல்லி வழக்கின் போக்கை மாற்றுவது .. நீதியின் மீதான மதிப்பிழக்க செய்யும் .. .. பூம்புகாரில் கலைஞர் வசனம் நல்லவனுக்கா நீதி இங்கே வல்லவனுக்கானதே நீதி என்பார் .. ஆம் வல்லவனுக்காக தான் இங்கே நீதி பீடங்கள் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment