Saturday, August 31, 2019

திராவிடம் தேவை

ரூபாய் என்பது ஒரு தேசத்தின் நாணயம் மட்டும் அல்ல. அது ஒரு நாட்டின் #கௌரவம். நாணயத்தின் மதிப்பு விழ ..விழ, நாட்டின் கௌரவமும் வீழ்கிறது எங்கோ யாரோ பேசியது போல் தெரிகிறதா .. மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்பிமை சுஷ்மா சுவராஜ் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய வார்த்தைகள் தான் இவை.. .. ஆனால்இன்றைய நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறது.. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கி .. பாஜக ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்தியரூபாய் 40 ஆகுமென்ற "பொருளாதார நிபுணர்" குருமூர்த்தி இப்போது என்ன சொல்கிறார் ₹71 ஐ கடந்து ஏறுமுகமாக போகிறதே.. 30% விழுக்காடு பெண்கள்தான் பெண்மையோடு இருப்பதாக சொல்லி திசை திருப்புகிறார் .. பொருளாதார நிபுணர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு "வேண்டியவர்களை" நியமித்து ரிசர்வ் வங்கி இருப்பை மத்திய அரசிற்கு மாற்றியதை ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் .. வங்கிகளை இணைப்பதால் ₹5 ttillion வருமென நிர்மலா சீதாராமன் சொல்கிறார் எந்தவிதமான policy கொள்கையும் வகுக்காமல் என சுப்ரமணியசுவாமி கூட கலாய்க்கிறார். .. முட்டாள்கள் கையில் நாடு சென்றதன் விளைவு தேசத்தின் மதிப்பும் வெகு தாழே போய்க்கொண்டிருக்கிறது.. ஒற்றை இரவில் ₹1000..₹500 ஐ செல்லாதாக்கிய போது சில அறிவாளிகள்..? சபாஷ் புதிய இந்தியா பிறந்ததென்றும் .. சில மோடி ரசிகர்கள் ஆஹா இவரல்லவா இரும்புமனிதர் ஒரே இரவில் கருப்புபணத்தை ஒழித்த கர்வயோகி என்றெல்லாம் கதைத்தனர்.. மக்கள் நடுத்தெருவில் நின்று தான் உழைத்து சிறுக சிறுக சேமித்ததை கூட எடுக்கமுடியாமல் வழியும் கண்ணீரோடு நின்ற போதும் .. ஐம்பது நாட்கள் நாட்டிற்காக பொறுத்துக்கொள்ள கூடாதா.. நாட்டை காக்க ராணுவவீரன் எல்லையில் மாத கணக்கில் நிற்கிறானே என்று ராணுவத்தில் தன் இனத்தையே சேர்க்காதவனெல்லாம் புத்தி சொன்னான்.. தன் உடல்நலிவிற்றிருந்த போதும் .. திரு.மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு வந்து தவறான முடிவை பிரதமர் எடுத்துவிட்டார் நாட்டின் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுவிடும் சிறுதொழில்கள் முடங்கும் என துள்ளியமாய் கணித்து .. கடைசியில் நாட்டுமக்கள் மாண்டுபோவார்களென்றார் .. ஆம் எத்தனை உயிர்கள் போனது ..எவ்வளவுபேர் உடைமைகளை (தொழில்களை)இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள் .. கள்ளநோட்டை ஒழிப்பதற்கும் கருப்பு பணத்தை மீட்பதற்கும் என சொல்லி கலர்கலராக நோட்டடித்தவர்கள் இனி கருப்பே இராது கள்ள பணமே வராதென்றவர்கள் இப்போது ₹500 கள்ளநோட்டு அதிகமாக புழங்குவதாக சொல்கிறார்கள் .. செல்லாதென்று அறிவிக்கப்பட்ட ரூபாய்களில் 99.3 விழுக்காடு நோட்டுகள் வங்கிக்கே திரும்ப வந்துவிட்டது .. அதாவது ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற துணைபோனதுதான் நாம் கண்டது .. முதன்முறையாக ஒரு முட்டாளை பிரதமராக தேர்வு செய்தமைக்காக உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது ..13,000 கோடி திரும்பவராத கருப்புபணத்திற்காக பணத்திற்காக 2,00,000 கோடி செலவு செய்த "ஞானக்கிறுக்கனை" நாம் பெற்றிருக்கிறோம்.. பொய் பேச்சை நம்பி அறிவாளிகளை வீட்டுகனுப்பியதற்கு நாடு அவதிப்படுகிறது .. சிறுதொழில்கள் நசுங்கி வேலைவாய்ப்பின்மையால் பிற தொழில் தேடி செல்கிறார் பெரும் தொழில்களும் மெல்ல மெல்ல வேலைநாட்களை சுருக்கியும் ஆட்குறைப்பையும் செய்கிறது .. உங்கள் பழையதை கொடுத்துவிட்டு புதியதாக இருசக்கரவாகனம் வாங்கி தொழிற்துறையை காப்பாற்றுங்களென நிதியமைச்சரே சொல்லும் அவலநிலை .. இதுதான் இன்றைய இந்தியா.. .. நாடு ..மதம் வர்ணம் மூடம் பேசுவோரிடம் சிக்கி தன் முகத்தை இழந்து நிற்கிறது .. பாசிசத்தின் கோர பிடியில் தன் பன்முகத்தன்மையை மெல்ல இழக்கிறது இனியும் இவர்களை அனுமதித்தால் இந்தியா சிதறுண்டு போகும் .. நாசக்காரர்கள் கையிலிருந்து இந்திய தேசத்தை காக்க போராட வேண்டியிருக்கிறது .. காங்கிரஸ் கூட தயங்குகிற நிலையில் இந்தியாவே திமுகவின் நிலைப்பாட்டை வெகுவாக உற்றுநோக்குகிறது .. தளபதியார் கலைஞரின் மறுஉருவாக மிளிர்கிறார் .. திராவிடச் சித்தாந்தமே இந்த நாட்டை செம்மைபடுத்தும் நேர்வழியாக்கும் வெகுமுன்னேற்றத்தை தரும்.. இந்தியாவிற்கே திராவிடம் தேவை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment