Sunday, September 29, 2019
கலைஞர்
கலைஞர் தமிழரில்லை என்று சிலர் பேசுகிறார்கள் பலமுறை சொன்னதுதான் 1951 ல் அரசு சாதி குறித்த கெஜட் வெளியிட்டது ராகவாச்சாரி தொகுத்து வந்ததில் "சின்னமேளம் "பிரிவினர் தமிழ் மரபினர் என்றும்.. அவர்கள் பெருமளவில் கீழிதஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என பதிவாகியிருக்கிறது ..
உண்மை இதுதான் .. பெரிய மேளம் பிரிவினர் தான் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் இசைவேளாளரில் பெரிய மேளத்தின் ஆதிக்கமிருந்தது.. இன்னும் சொல்லபோனால் அவர்கள் தாயின் பெயரை தான் தங்கள் இன்ஷியலாக வைத்துக்கொள்வார்கள் .. ஆனால் சின்னமேளம் பிரிவினர் தந்தையின் பெயரை தான் இன்ஷியலாக வைத்துக்கொள்வர் .. முத்துவேலர் கருணாநிதி இதெற்கெல்லாம் பதில் சொல்லும் ..
தெலுங்கு கீர்த்தனைகளை பாடி கோவிலில் சேவகம் செய்வதுதென்பது கட்டாயமானதால் தெலுங்கில் பாடினார்கள்
சின்னமேளம் பிரிவினர் பெரிய சபாக்களில் கோவில் திருவிழாக்களிலோ பாடமுடியாது அதை "பெரியமேளம்" பிரிவினரே ஆதிக்கம் செலுத்தியதாக ராகவாச்சாரி சொல்கிறார் அவர்களுக்கு உறுதுணையாக பக்க வாத்தியங்களை இசைத்ததாக குறிப்பிடுகிறார்
..
கலைஞரை புறக்கணித்து தமிழ் தேசியம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் நண்பர் தமிழ் மறவன் மொழியில் சொல்லவேண்டுமெனில் திருட்டு அரசியல் .. கலைஞரைப்போல தமிழுக்கு தொண்டாற்றிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை வாழும் வரை தமிழை மூச்சாக கொண்ட மாபெரும் ஆளுமையை இழிவுபடுத்தயெண்ணி தங்களின் தெளிவின்மையை காட்டுகிறார்கள் .. கலைஞரை தமிழரில்லை என சொல்லும் அறிவற்றவர்கள் பார்பனீயத்திற்கு ஒத்தூதுவதைதான் பார்க்கலாம் இப்போது கூட கீழடி ஆய்வில் முடிவுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் பெ.மணியரசன் திராவிட நாகரீகம் என்று சொல்வதற்கான எந்தவொரு இலக்கிய ஆதாரமும் இல்லை என்கிறார் . தமிழ்..தெலுங்கு..மலையாளம் ..கன்னடம் ஆகிய மூன்றும் தமிழ் மொழிதான்.
ஆனாலும் தமிழ் தேசியமும் , திராவிடமும் தொடர்ந்து மோதல் போக்கை கையாளுகிறது என்பது தான் உண்மையாகும்.. தந்தை பெரியார் தெலுங்கில் மலையாளத்தில் கலந்துள்ள சமஸ்கிருத சொல்லை நீக்கிவிட்டால் அது தமிழாகதான் இருக்கும் என்றார் ஆம்
தமிழின் கிளை மொழிகள் வட்டாரவழக்கில் தோன்றியவை.. அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தமிழரின் அளவுகோலை எதில் கணக்கிடுகிறார்கள் சாதியை வைத்து தானே தவிர வேறெதும் அவர்களிடத்தில் இல்லை .. ஆனால் தமிழரின் வரலாறு மதத்திலோ ஜாதி பிரிவிலோ இல்லை அதற்கான எந்த ஆதாரமும்
சங்கநூல்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ தொல்பொருள் ஆய்விலோ கிடைக்கவில்லை இயற்கையாய் வாழ்ந்தவன் இயற்கையை வணங்கி நின்றவன் சாதி மதம் அவனிடத்தில் ஆரிய வரவிற்கு பிறகே வந்தது .. அதோடு கல்வி மறுக்கபட்டதும் தீண்டாமை தீண்டியதும்
கலாச்சாரம் சிதைக்கபட்டதும் வரலாற்றை திரித்தெழுதியதும் ஆரிய வருகை பிறகுதான் என்ற உண்மையை உணராமல் பேசுகிறார்கள்..
..
கலைஞரை மறுத்த தமிழின் பெருமை தமிழனின் வரலாறென்பது மடத்தனம் இந்த அரைகுறைகள் எதற்கோ ஆசைபட்டு அல்லது பயந்து உளறுவதை கணக்கில் கொள்ள தேவையில்லை..
..
#கலைஞர்_செந்தமிழ்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment