Wednesday, August 7, 2019

மு.க.

என்பதாண்டுகாலம் எமை சூழ்ந்த காரிருளை நீக்கிய சூரியனே உழைத்து உழைத்து களைத்து போய்விட்டாயா இனியேனும்.. தம்மை காத்துக்கொள்ள தம்பிகளே தயாராகிக்கொள்ளுங்களென சொல்லி ஓய்வெடுக்கிறாயா.. நீச்சல் கற்று கொள்ளும் வரை தான் கட்டுமரம்.. இனி.. எதிர்நீச்சல் போடு என சொல்லாமல் சொல்லி போனாயா.. .. அய்யனே.. அமுதே.. அழகுகோனே.. அமிர்தமே.. அன்பே.. எமதருமை தமிழே எமதாளுமையே.. ஆசானே என்ன அவசரம்.. நூறை கடக்க இன்னும் சில ஆண்டுகள் தானே அதற்குள்.. என்ன அவசரவேலை.. என் உயிரை யாராலும் பறிக்க முடியாதென்றாயே.. யாசித்து பெற்றால்தான் உண்டென்றாயே.. வாசில் நின்று அழுது யாசித்தானா.. கொடுத்துவிட்டாயா.. ஒராண்டாகிவிட்டதே ஒருநாளும் உம்மை மறவாமல் தமிழகம் என்ன மாயம் செய்தாய் தினம் தினம் அணிவகுக்கிறார்கள் நன்றிகடன் செலுத்த.. .. தன் இறகை கொண்டே கூடு கட்டும் பறவைப்போல உன் நினைவுகளால் கவிதை கட்டுகிறேன்.. பெரியாரின் பெருஞ்சீடனே.. ஆசானை மிஞ்ச கூடாதென்று முப்பத்தி மூன்றுநாள் முன்னதாகவே சென்றுவிட்ட மூப்பனே.. எம் இன காவலே.. தேன் மதுர சொல்லெடுத்து எதிரியையும் மயக்கும் பேராற்றலே ஏழைக்கும் இன்பவாழ்வளிக்க எந்நாளும் சிந்தித்த செம்மலே.. .. எங்கள் சூரியனே.. எதிரிகளை சுட்டெரிக்கும் உன் பேச்சு.. உன் இருப்பு எம் பகைவரை இருப்புகொள்ளாமல் தவிக்க வைத்ததே.. இனி .. நீ கற்று தந்ததை நாங்கள் சுழற்றுவோம்.. பெரியாரின் சீடரே பேரறிஞரின் தம்பியே.. எம் இனத்தின் காவலே.. நின் பணி தொடர்வோம்.. நீ.. வகுத்து தந்ததே எமது பாதை.. நீ.. மறையவில்லை காலமாய் எம்மோடு இருக்கிறாய்.. .. எங்கள் வானில் நிரந்தர சூரியன்.. நீ.. அதன் ஒளி போதும் எம்மை அண்டவரும் கயமையை வேரறுப்போம் உன் அடிச்சுவட்டில் எமது பயணம் .. அதுவே எமது பாதை பாசிசம் கண்டு அஞ்சும் பாதை .. நீ.. தொடாத உச்சமில்லை. இனி எவரும் உன் உயரத்தை தொட போவதுமில்லை.. உன் உச்சம் இயற்கை தந்தது.. .. நன்றி!.. மு.க.. இத்தனை காலம் காவலாய் நின்றெமை காத்தமைக்கு.. .. ஆலஞ்சியார் #Thankyou_MK #Thankyouகலைஞர்

No comments:

Post a Comment