Sunday, August 25, 2019

விஜயகாந்த்

#விஜயகாந்த் அரசியல் தெரியாத அரசியல் செய்யாத அரசியல் தலைவர்.. திடீரென்று ஒருநாள் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் வெற்றி என புதியதொரு தொடக்கம் குறித்தார்.. நிறைய எதிர்பார்ப்பை தர கூடுமென சிலரும் மிளிர மாட்டாரென சிலரும் கருத்துக்களை பகிர்ந்தார்கள் ..ஆனால் தமிழகம் புதியதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை என்று கூட சொல்லலாம் ஏனெனில் திராவிட இயக்கத்தின் வேர்கள் அவ்வளவு பலமாக ஆழமாக வேரூண்டிருக்கிறது.. .. அரசியலுக்கு தகுதியானவரா என்பதை விட சரியாக திட்டமிடாதததாலும் சிலரின் சூழ்ச்சியாலும் வேரோடு பிடிங்கியெறியப்பட்ட செடியை போல கிடக்கிறார்.. தனித்து தொடர்ந்து களம் கண்டிருப்பாரேயானால் ஒரளவு மெச்சப்பட்ட நிலையை எட்டியிருக்கலாம்.. அரசியல் சகுனி சோவின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவை ஆதரிக்க போய் கடைசியில் ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிட்டார்.. அரசியலில் சமகால நிகழ்வுகளுக்கு தகுந்தாய்போல காய் நகர்த்தப்படவேண்டும் இல்லையெனில் அடுத்தமுறை என்ற சொல்லே இல்லாமல் செய்துவிடும் .. .. சட்டமன்ற தேர்தலில் வைகோவோடு இணைந்தது அவரது அரசியல் வரலாற்றில் கருத்தபக்கங்களானது.. தனித்து களம் கண்டிருக்கவேண்டும் அல்லது திமுகவோடு சேர்ந்து ஜெயலலிதாவை வீழ்த்திருக்கவேண்டும்.. அப்படி வீழ்த்திருந்தால் தமிழகத்தில் வருங்காலங்களில் திமுக தேமுதிக என இருகட்சிகள் மட்டுமே இருந்திருக்கும்.. அரசியல் தெளிவின்மை சமகால அரசியலில் நகர்வை பற்றிய புரிதல் இல்லாமை அவரது பலவீனமானது .. நல்ல ஆலோசகரை கொண்டிருக்கவில்லை..தன் மனைவி மைத்துனரின் கைபாவையாக மாறியது அவரது வீழ்ச்சியின் தொடக்கமாகியது .. அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதும் அதை குடும்பத்தினர் கிடைக்கும்வரை லாபம் என்ற நிலைக்கு கட்சியை வியாபாரமாக்கிவிட்டார்கள் .. ஆம் கட்சியை கம்பெனி லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் .. அவரின் கூட இருந்தவர்கள் ஒவ்வொருவராக அணி மாற கூட இருப்பவர்களை இழுத்துபிடிக்க கூட சக்தியற்றவராக தெரிகிறார் .. அவரது ரசிகர்கள் மட்டுமே அதிலும் அரசியல் அறியாதவர்கள் இருக்கிறார்கள் .. .. அரசியலில் சூழ்ச்சியறிந்து செயல்படவேண்டும்.. செயல்பாடுகளில் தொய்வில்லாத நிலைவேண்டும் மக்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் திருவிழாவிற்கு மட்டும் வரும் சந்தையாக இருக்ககூடாது .. நாள்தோறும் பரபரப்பாக இயங்கவேண்டும்.. தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள் நினைவுக்கு வருவதும், அதை ஆதாயமாக்க முடியுமா என நினைப்பதும் அழிவை நோக்கி நகர்த்தியது .. நட்டதும் பூக்கவேண்டுமென நினைப்பது அறிவீனசெயல் .. காத்திருந்து நேரம் வரும் போது அதன் பயனை அனுபவிக்கும் பொறுமை வேண்டும்.. விஜயகாந்த் எனும் தனிப்பட்ட நபரோடு தமிழக மக்கள் வெறுப்பை தரவில்லை மாறாக அவரின் செயல்பாடுகளின் மீதும் குடும்பத்தாரின் தலையீடு மீதும் தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. இன்னும் காலமிருக்கிறது.. என சொல்ல தோன்றுகிறது ..ஆனால் பலனில்லை.. .. பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயகாந்த்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment