Friday, September 6, 2019
மதம் தவிர்ப்போம்
இந்த படம் நிறைய கதைக்கிறது ..
நம்பிக்கை பயம் தெய்வபக்தி சாஸ்திரம் அதெல்லாம் ஒரு இழவுமில்லை .. கொண்டாடி தீர்க்க ஒரு பண்டிகை அவ்வளவுதான் ..
இந்த பண்டிகை என்றில்லை எல்லா மத விழாக்களும் பண்டிகைகளும் மூடத்தனத்தில் என்பதை மக்கள் அறிவார்கள் ஆனாலும் கொண்டாட ஒரு விழா அவ்வளவுதான் ஆனால் இதை வைத்து மதவெறியர்களும் மதத்தை வைத்து பிழைப்போரும் அரசியல்வாதிகளும்
மதத்தின் பெயரில் கலகமூட்டுவோரும் தங்கள் நிலைநிறுப்பை தக்கவைக்க மக்களிடையே மதத்தின் மீதான பார்வையை கூர் தீட்டுகிறார்கள் ..
..
தனிமனித வாழ்வில் பண்டிகைகள் மகிழ்ச்சி தருவதை விடுத்து பொருளாதார ரீதியாகவும்
மதத்தின் பெயரிலும் அழுத்தத்தை தந்து வழிகேட்டில் நிறுத்துகிறது.. எந்த மத பண்டிகையும் மனிதனுக்கு பயனுள்ளதாக அமைந்ததே இல்லை அவனை மூடத்தின் வாயில் நிறுத்தி வெறியேற்றுகிறதே தவிர வேறெதுவும் சாதிக்கவில்லை வேறு பயனுமில்லை .. ஆனால் மண்சார்ந்த விழாக்கள் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் விழாக்கள் இனத்தின் மொழியின் பண்பாட்டின் மேன்மையை உணர்த்துவதோடு இன மொழி மத வேறுபாடுகளை கலைந்து மனிதனுக்கு நேசிக்க கற்று தருகிறது .. ஆனால் எல்லா மத விழாக்கள் பண்டிகைகள் மனிதனை சிந்திக்க விடாமல் ஒருவித பயம்/பக்தியில் நிறுத்தி கடைசியில் அவனே சடங்குகளை மீறுகிற நிலைக்கு அல்லது அவனுக்கு சௌகரியத்திற்கு ஏற்றாற்ப்போல் மாற்றிக்கொள்ள/ மாறிக்கொள்ள வழிவகுக்கிறது இதிலிருந்தே நம்பிக்கை என்பது பொய் என சொல்லலாம் அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பதை உணரலாம்
..
இனம் மொழி மண் சார்ந்த விழாக்கள் (பொங்கல் போன்ற விழாக்கள்) சகோதரத்துவத்தை நன்றியோடு வாழ வேண்டுமென்பதை உழைப்பவனை நேசிக்க வேண்டுமென்பதை விடுமுறையை பயனுள்ளதாக்க கலாச்சார மேடைகள் கூத்துகள் என பழங்கதைகளை பேசி மண்ணின் பெருமையை பறைச்சாற்றி நல்வாழ்வு வாழ போதிக்கிறது .. வெறிச்செயல் இல்லை பகையோடு திரியவில்லை அடுத்தவரை அடைக்கியாள சொல்லவில்லை .. பிரித்து பேசி வர்ணம் பூசவில்லை சாதிமதமில்லை .. இயற்கையோடு வாழ்ந்த வாழ்வை.. வாழும்நெறியை உணர்த்துகிறது ..
ஆனால் மதசாயம் பூசபடும் எந்த நிகழ்வும் விழாவும் பண்டிகைகளும், உண்மையில் வேற்றுமையை பகையை வளர்க்கிறது ..
பணேபாட்டை போதிக்கவில்லை..
..
மதம் தவிர்த்து மனிதம் சமைப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment