Thursday, August 22, 2019

அளவோடு ஆர்ப்பரி

அமைதி தரும் அருமருந்து வேண்டுமென்றேன்.. .. நிசப்தம் நிம்மதியாகாது நிழல்.. தெளிவாகாது.. .. சூழ்ச்சியில் விழுந்து.. சிதறுகிறேன்.. கழுகுகள் எனை கொத்தி தின்கிறது.. கேள்வி கேட்கவே வழியில்லை.. என் செய்ய அமைதி வேண்டுகிறேன்.. .. கொஞ்சம் ஆர்ப்பரி அளவோடு திமிர் கொள் தேவைக்கேற்ப ஆசைபடு சிலநேரம் அடங்க மறு.. அடங்கியிருந்தால் அரித்துவிடும் எறும்பு கூட அள்ளிபோகும்.. சிலிர்த்தெழு.. எழும் உயரம் நீ.. அறிய வேண்டும்.. நின்று சுழல்.. சுழற்சி நிறுத்தவும் அறியவேண்டும்.. .. பறக்காத சிறகால் பயனில்லை.. மண்ணை கிழிக்காத விதை..முளைப்பதில்லை .. ஆடு.. நின்று ஆடு நிலை நிறுத்தி ஆடு கால் நிலத்தில் வேண்டும் கவனம் கொள்.. .. வேட்டைக்கு வந்த பின் புலிக்கு அஞ்சுவதால் பயனில்லை.. மோது.. மடிந்தாலும் பேசப்படுவாய்... .. அஞ்சாதே அஞ்சினால்.. அடக்கிவிடும்.. .. #அளவோடு_ஆர்ப்பரி .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment