Sunday, July 28, 2019
அரசியல் பிழைகள்
வாழும் காலத்திலேயே ராமதாஸை புரிந்துக்கொண்டு பெருமைபடுத்துங்கள் அன்புமணி ராமதாஸ் .. கூடவே பெரியார் இருந்த போது உதாசீன படுத்திவிட்டு பின்பு புகழ்கிறோமே அதுபோல் அல்லாமல் வாழ்கிற போதே போற்றுங்கள் என்கிறார் ..
அப்பன் மீது மகனுக்கிருக்கும் அன்பு அக்கறை நமக்கு புரிகிறது ஆனால் பின் தொடரதக்கவரா ராமதாஸ் ..
..
நெஞ்சம் முழுக்க சாதீய வெறியோடு தன் நம்பி வந்தவர்களை நடாற்றில் விட்டதைப்போல எல்லா பதவிகளும் தன் குடும்பத்தை தன் ஜாதி உறவையோ போய் சேரவேண்டுமென எண்ணுகிறவர் .. தன் சமூகத்து இளைஞர்களை, அடியாட்களைப்போல பயன்படுத்தி குடிசைகளை கொளுத்தும் செயலுக்கு பயன்படுத்தி வழிகேட்டில் நிறுத்தியிருக்கிறவரை பெரியாரோடு ஒப்பீடுடென்பதே ஒருவகையில் அயோக்கியத்தனம்
யார் பெரியார் தெரியுமா ..
எனக்கு மதபற்றோ சாதிப்பற்றோ மொழிப்பற்றோ இனப்பற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடபற்றுதான் என்றவரோ சாதியத்தை சுமந்து திரியும் யோக்கியரை ஒப்பிட்டு பேசுவதே தவறானது ..
..
ராமதாஸ்
சொல் சுத்தம் இல்லாதவர் அரசியலில் ஒருவகையில் சாதீய தீயை பற்றவைத்தவர் .. தலித் அல்லாத சமுதாய மக்களை ஒருங்கிணைக்க பாடுபட்டு தோல்வி கண்டவர் .. சமூக மக்களை இடஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென போராடியவர் கடைசியில் திமுக ஆட்சியில் அது நடைமுறையாக்கபட்டதும் .. வேறுவழியின்றி அரசியலில் தன் சாதி மக்களை மட்டுமே நம்பி வென்றுவிடலாமென எண்ணி கடைசியில் உள்ளதும் போய் நிர்கதியாய் நிற்பவரை "உதாரணபுருஷனாக " எடுத்துக்கொள்ள முடியுமா என்ன.? ..
திராவிடத்தை வீழ்த்துவோமென சொல்லி கடைசியில் திராவிட பேர் சொல்லி திரிவோரிடம் நக்கி பிழைக்கிற நிலைக்கு வந்தது யாரால் .. தன் நிலை அறியாது தனது சக்தி புரியாது தானே எல்லாம் தெரிந்தவர் .. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் தமிழ்நாட்டில் நான் மட்டுமே ஒழுக்கசீலன் அனைத்தும் அறிந்த அறிவாளியென பேசி மற்றவர்களை எள்ளிநகையாடி கடைசியில் அவர்கள் காலடியில் அப்பனும் மகனும் விழுந்த கதை நாடறியும் .. சுயமரியாதை இழந்து மக்களால் வெறுத்து ஒதுக்கபட்டு கடைசியில் யாரை ஏசினோமோ அவர்கள் தயவில் காலத்தை கழிக்கலாமென்று மாநிலங்களவை உறுப்பினரானதை கேட்டு நாடு சிரிக்கிறது ..
..
இவர்கள் பின்பற்றதக்கவர்கள் அல்ல அரசியல் பிணிகள் வருங்கால இளைஞர்கள் புறந்தள்ள வேண்டிய அரசியல் பிழைகள் .. சுயநலத்திற்காக சமூகத்தையே காவு கேட்பவர்கள் .. வெறுக்கதக்க செயல்பாடுகளால் தமிழக அரசியலில் தரந்தாழ்த்து போனவர்கள் .. தானெனும் அகந்தையும் தானே சிறந்தவனென்ற நினைப்பும்,தானே அனைத்திற்கும் தகுதியானவன் என்ற எண்ணமும்,கொண்டவர்கள் வீழ்ந்துபோவார்கள் என்பதற்கு இவர்களே சாட்சி..
..
புதிதாய் தமிழக அரசியலுக்கு வரும் இளைஞர்கள் எப்படி செயல்பட கூடாதென்பதற்கு இவர்களே சாட்சியம் வகிக்கிறார்கள் .. சுருங்க சொன்னால் பின்பற்ற கூடாத
#அரசியல்_பிழைகள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment