Sunday, September 1, 2019
கவர்னர் தமிழிசை
பாரம்பரிய காங்கிரஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று மாநிலத் தலைவர் வரை உயர்ந்து ..விடாது துரத்திய கேலிகளையும் கிண்டல்களையும் தன் பலமாக்கி உரத்து நின்றவர்.. தமிழின எதிரிகளின் பக்கம் நிற்கிறாரே என்ற வருத்தம் தவிர அவரை கோபித்துகிகொள்ள ஒன்றுமில்லை .. பொதுவாழ்வில் பெண்கள் பங்கேற்பது பயணிப்பதென்பது இப்போதும் ஒருவித இடைஞ்சல் தரும் பொதுசமூகத்தில் விடாபிடியாக இயங்கியவர் .. அபத்தமானாலும் தொடர்ந்து தன் நிலைநிறுப்பை உறுதிசெய்துக்கொண்டே இருந்தவர் ..அவரின் உடல்மொழியை உயரத்தை கூட சமூகம் கேலிசெய்த போதும் அதை ஒருபொருட்டாகவே கருதாமல் தொடர்ந்து களப்பணியாற்றியவர் ..
..
கொள்கைப்பிழை அரசியல் அறியாமை வீம்புக்கென்றே ஏதையாவது சொல்லிவைப்பது என தான் சார்ந்த கூட்டத்தின் உண்மை முகத்தை தோலுரிக்க பயன்பட்டார் .. அங்கே அறிவுடையோருக்கு வேலையில்லை அபத்தங்களுக்கும் அர்த்தமற்றவர்களுக்கும் மத விசுவாசிகளுக்கும்/வெறியர்களுக்கும், பாசிசத்தை தூக்கிபிடித்து நிற்போருக்கும் சனாதனவாதிகளுக்கும் தான் பாஜக என்றறிந்தும் தொடர்ந்து பயணித்து தலைவர் பதவிவரை வந்து இப்போது தெலுங்கானா கவர்னராகியிருக்கிறார் .. பாஜகவின் பார்பனர் பிரிவு (பாஜக என்றாலே பார்பனர்கள் தான்)
தொடர்ந்து தொல்லை தந்தபோதும் எஸ்.வி சேகர் போன்ற கூமுட்டைகள் வெளிப்படையாக எதிர்த்துநின்ற போதும் விசு போன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தபோதும் அஞ்சாமல் அவர்களை கதறவிட்ட திராவிடச்சி..
உண்மையில் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை பெரிதாக எதிரியாக கருதியதே இல்லை.. மாறாக மௌனமான புன்னகையோடு கடந்துச்சென்றார்கள் .. கடுமையாக விமர்சிப்பதாக நினைத்து அபத்தம் காட்டிநின்றபோதும் பெரிதாக யாரும் எதிர்வினையாற்றியதில்லை ..
..
பெண்கள் பொதுவாழ்விற்கு வருவதே மிக அரிதான செயலாக இன்றைக்கும் காணபடுகிறது அப்படி வரும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்க்க நேரிடிணும் களத்தில் கடுமையாக எதிர்க்கிறபோதும் கொண்டாட வேண்டும் அதனால் தான் ஆசிரியர் "அன்புமகள்" மாநில ஆளுநராக பதியேற்பது மகிழ்ச்சியளிக்கிறதென்று சொல்கிறார்.. தி.மு.க தலைவர் தளபதியும் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார்.. கொள்கை வேறெனினும் பாசிசத்தில் நிழலில் நின்று கதைக்கிறாரெனினும், இந்த மண்ணின் மக்களின் வெறுப்பை கொண்டவர்களின் அடியொற்றியே பயணிக்கிறாரெனினும் .. அரசியலின் தெளிவின்மையும் எதையாவது சொல்லி தொலைக்க வேண்டியிருக்கிறதென அறிந்தும் அவரை யாரும் பகையோடு பார்த்ததில்லை..
தான் ஏற்றுக்கொண்ட கொள்கை கட்சிக்கு விசுவாசமாகவே செயல்ப்பட்டார்.. மிகவும் ஒடுக்கபட்ட இனத்திலிருந்து வந்து
பார்பனர்களின் கடுமையான எதிர்பபையும் மீறி தலைவராக வலம்வந்தவர் .. இன்று தெலுங்கானா ஆளுநராகிறார் ..
வாழ்த்துவோம் ..இந்த தமிழச்சியை..
முதல் தமிழ்ப் பெண் ஆளுநர் தமிழிசை
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment